Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnai Naan Santhithen
Unnai Naan Santhithen
Unnai Naan Santhithen
Ebook97 pages59 minutes

Unnai Naan Santhithen

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

எழுத்தாளர் லதா சரவணன் 1981ல். பிறந்தார் சென்னை பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகப் படிப்பினை முடித்தார். வடசென்னையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஸ்ரீ சாந்தி சாரீஸ் என்னும் நிறுவனத்தில் கணவருடன் இணைந்து நடத்திவருகிறார். இரட்டை பெண் குழந்தைகள் 10ம் வகுப்பிற்கு அடியெடுத்து வைக்கிறார்கள். 2003 ல் முதல் சிறுகதை தங்கமங்கை என்னும் இதழில் வெளியானது. முதல் நாவல் 2004 ஜனவரியில் பொங்கல் விருந்தாக கண்மணியில் பனிக்கால் வசந்தங்கள் என்னும் தலைப்பில் வெளியாகி இருந்தது. அது முதல் 53 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், கட்டுரைகளும், வெகுஜனப்பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளளது. (ராணி, தேவி, குமுதம், மாலைமலர், குடும்ப நாவல், தினமலர், தினதந்தி குடும்பமலர், பெண்மணி).

இவரது திருநங்கைகளின் வாழ்க்கை குறித்து காகிதப்பூக்கள் என்னும் நாவல் பிரசத்தி பெற்றது. அதே போல் ராணி வார இதழில் 2016 ம் ஆண்டில் 23 வாரத்தொடராக திருநங்கைகள் ஒவ்வொருவரின் வாழ்வியல் இவரது எழுத்தில் வெளிவந்திருந்தது. திருக்குறள் மையம் சார்பாக முப்பது திருக்குறளிற்கு - அதன் சாரம்சம் குறையாமல் நவீன காலத்தின் இயல்புகளை தொகுத்த உயிரோவியமும் 2015 ம் ஆண்டிலேயே ராஜா அண்ணாமலை மன்றத்தில் திருக்குறன் செம்மல் திரு. தாமோதரன் அவர்களால் வெளியிடப்பட்டது.

எழுதுவதோடு மட்டுமன்றி முருகதனுஷ்கோடி, கேசிஎஸ், எம்.ஜியார் ஜானகி கல்லூரி, சேம் வைவா, விநாயகா மிஷன், சாரதாம்மாள் மகளிர் கல்லூரி, எத்திராஜ், குயின்மேரிஸ், ஸ்டெல்லா மேரிஸ் இன்னும் பல இடங்களில் தன்னம்பிக்கைக் குறித்த பேச்சுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல் நீங்கலான தொலைக்காட்சி நிகழ்வுகளில் பெண்ணியம் தொடர்பான கருத்துக்களையும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளையும் வலியுறுத்தியிருக்கிறார். (மக்கள், சன்டிவி, புதிய தலைமுறை, பெப்பர்ஸ், நியூஸ் 7, பொதிகை, வானொலி நிலையம், வின்டிவி)

தற்போது ஒன் இந்தியா தமிழ், மற்றும் சில்சி என்னும் ஆன்லைன் தளங்களில் இவரது கதைகள் கட்டுரைகள் வெளியாகிவருகிறது. சென்ற வருடம் குமுதத்தில் நாவல் வெளியாகி இருந்தது. 2011ல் குயின் மேரிஸ் கல்லூரியிலும், 2012 போலீஸ் பப்ளிக் அசோசியேஷன் 2015 நேசம் மனிதவள மேம்பாட்டு மையம், 2016ல் ஒ.எம்.சி வில் மதுரை தமிழ் இலக்கிய மன்றம் சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிதையாசிரியர் என்னும் விருதும், 2008 ல் அரசாங்கம் நூலகம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் கவரிமான் என்னும் கதைக்கு தேவநேயப்பாவணர் அரங்கில் திரு.பரிதி இளம்வழுதி அவர்களின் மூலம் பரிசு பெற்றார்.

உமாபதி கலையரங்கத்தில் தங்கமங்கை நடத்திய விழாவில் தங்கமங்கை என்னும் விருதை பெற்றார். அண்மையில் நடைபெற்ற அறம் தமிழ்பண்பாட்டு மையத்தில் ஆற்றல் அரசி என்னும் விருது தரப்பட்டது. எழுத்துலகிலும் தொழில் துறையிலும் அவர்களின் பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

Languageதமிழ்
Release dateJul 2, 2019
ISBN6580126904318
Unnai Naan Santhithen

Read more from Latha Saravanan

Related to Unnai Naan Santhithen

Related ebooks

Reviews for Unnai Naan Santhithen

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnai Naan Santhithen - Latha Saravanan

    http://www.pustaka.co.in

    உன்னை நான் சந்தித்தேன்

    Unnai Naan Santhithen

    Author:

    லதா சரவணன்

    Latha Saravanan

    For more books

    http://pustaka.co.in/home/author/latha-saravanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    சாருமதி, வயது 22. மாநிறத்திற்கும் சற்று கூடுதலான நிறம். திராட்சைக் கண்கள். உப்பலாய் கன்னங்கள். உதட்டுச் சாயம் போடாமலே சிவந்திருக்கும் உதடுகள் என, சாலையோரம் செல்பவர்கள் கூட ஒரு முறை திரும்பிப் பார்க்கும் அழகு. புதிய பாடல் ஒன்றை முணுமுணுத்தபடியே அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

    நீல நிற சல்வாரின் துப்பட்டாவை பின் செய்து கொண்டிருந்தாள். நேரம் 7.45 இன்னும் அரை மணி நேரம் கழித்து கிளம்பினால்கூட சரியான நேரத்திற்கு அலுவலகம் சென்று விடலாம்.

    நெய் தோசையின் வாசம் ஹாலைக் கடந்து மணத்தது. இவள் வெளியே வரவும், அம்மா கஸ்தூரி தோசையோடு, கார சட்னியையும் வைத்துத் தர, சோபாவில் வாகாய் அமர்ந்து கொண்டு டி.வி.யை ஆன் பண்ணினாள்.

    காலை மலர், காலை வணக்கம் என வித விதமாய் நிகழ்ச்சிகள் ஓடிக் கொண்டிருக்க, சன் மியூசிக்கில் ஐஸ்வர்யா ராய் தன் காணாமல் போன கவிதைக்காய் பாட வால்யூமைக் கூட்டினாள்.

    பாடலின் ஒவ்வொரு வரியும் நெஞ்சைத் தொட்டது. என்ன சாரு ஆபீஸ் கிளம்பலையா? நீ பாட்டுக்கு டி.வி. பாக்குறே?

    டயம் இருக்கும்மா. தோசை சூப்பர், மதியத்துக்கு என்ன தயார் பண்ணியிருக்கீங்க?

    புளி சாதமும், எண்ணெய் கத்திரிக்காய் பொரியலும், கூடவே வடகமும் பொரித்து வைத்து இருக்கிறேன்.

    நல்ல மெனுதான்! இவள் கையைக் கழுவி விட்டு எழவும், அம்மா ஏதோ சொல்ல வருவதும் புரிந்தது.

    என்னம்மா டல்லா இருக்கீங்க?

    அக்கா போன் பண்ணினா!

    என்னவாம்? எப்போ கிளம்பறாளாம்?

    அத்தைக்கு உடம்புக்கு சுகமில்லையாம். அதனால் வர முடியாதுன்னு சொன்னா!

    இது எப்பவும் நடக்கிற விஷயம்தானே, அக்கா ஊருக்கு கிளம்பறான்னா போதும் உடனே அத்தைக்கு உடம்பு சரியில்லாம போயிடுமே? அக்கா வந்திட்டா அங்கே வேலை செய்ய ஆள் இல்லாம போயிடும் இல்லையா?

    என்னடி செய்யறது? வாக்கப்பட்டது பெரிய குடும்பம். அங்கே நல்ல பெயர் வாங்கணுமே?

    மாடா உழைச்சா மட்டும் அவளுக்கு என்ன சிலை வைக்கப் போறாங்களாமா? இவளோட கிறுக்குத்தனத்தைப் பயன்படுத்திக்கிட்டு நல்லா மிளகாய் அரைக்கிறாங்க..

    குடும்பமின்னா எல்லாம் தாண்டி இருக்கும். நீ சின்னப் பொண்ணு, உனக்கென்ன தெரியும். எல்லாம் அவளோட விதி.

    விதியில்லை. அப்பா செய்த சதி! ஒரே தங்கை வந்து ரெண்டு சொட்டுக் கண்ணீர் விட்டதும் தாளமாட்டாம அக்காவை ஒரு பொம்மையைப் போல் எண்ணி தாரை வார்த்திட்டார். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்தா அவளும் படிப்பு முடிச்சு தன் சொந்தக் கால்ல நின்னுருப்பா. இப்போ பாரு அஞ்சுக்கும் பத்துக்கும் அவ அவங்க கையை எதிர்பார்க்க வேண்டியிருக்கு. இந்த நிலைமைக்கு அப்பாதான் முழுக் காரணமும்..

    மகள் சொல்வதிலும் உண்மை இருப்பதாய் பட்டது, கஸ்தூரிக்கு. சாரும்மா நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனா நீயெப்படி இருக்கப் போறேன்னு பார்ப்போம்!

    கண்டிப்பா நான் கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட மாட்டேன்.. உறுதியுடன் சொல்லிவிட்டு போகும் மகளை கவலையோடு கண்டார் கஸ்தூரி.

    கணவர் மணிவாசகத்தின் ஒன்றுவிட்ட தங்கை வசந்தாவிற்குத்தான் தன் பெரிய பெண் வெண்மதியைக் கொடுத்தது. வெண்மதி அப்போது பி.எஸ்சி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டு இருந்தாள்.

    அந்த வருடம் வீட்டிற்கு வந்த வசந்தா பெரும் குறை பட்டியலோடுதான் வந்தாள். தமக்கையின் மேல் தீராத பாசம் கொண்டிருந்த மணிவாசகமும் உடல் நலமில்லாத தங்கையிடம் பரிவுடன் நடப்பதாய் எண்ணிக் கொண்டு செய்ததுதான் வெண்மதியின் திருமணம்.

    அண்ணா வர வர எனக்கும் உடம்பு முடியலை. பெண்கள் இருந்த வரை கஷ்டம் தெரியலை. அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு போனதும், என்னால முடியலை. எனக்கு ஏதாவது நடக்கிறதுக்குள்ளே மூத்தவனுக்கு கல்யாணத்தைப் பண்ணிடணும். வெண்மதியை மூர்த்திக்குத் தந்திடேன். நீ நகை கூட உன் விருப்பப்படி செய். ஆனா கல்யாணத்தை சீக்கிரமா முடிச்சிடலாமே.. தங்கையின் விருப்பத்திற்கு இணங்கி தலையாட்டி விட்டார் மணிவாசகம்.

    அமைதியான சுபாவம் கொண்ட வெண்மதி தன்னுடைய ஆசையை வெளிக்காட்ட முடியாமல் படிப்பையும் பாதியிலேயே நிறுத்த வேண்டியதாகிப் போனது.

    வசந்தாவிற்கு மூன்று மகன்கள். இரண்டு பெண்கள். பெரிய கூட்டுக் குடும்பம். அதில் மூத்த மருமகளாய் வாழ்க்கைப்பட்டாள் வெண்மதி. இதோ 6 வருடங்கள் முடியப் போகிறது. ஆனாலும் மதியின் கடமைகள் தீர்ந்தபாடில்லை. இயந்திரத்தனமான வாழ்வு அலுத்து விடாமல் இருப்பதற்குத்தானே உறவுகள். ஆனால் அதுவே சுமையாகிப் போனால்..!

    அப்படித்தான் ஒருமுறை சாருவும், கஸ்தூரியும் வெண்மதியின் வீட்டிற்கு சென்றபோது சேர்ந்தாற்போல் ஐந்து

    Enjoying the preview?
    Page 1 of 1