Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Five Star Thurogam
Oru Five Star Thurogam
Oru Five Star Thurogam
Ebook109 pages53 minutes

Oru Five Star Thurogam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
Oru Five Star Thurogam

Read more from Rajeshkumar

Related to Oru Five Star Thurogam

Related ebooks

Related categories

Reviews for Oru Five Star Thurogam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Five Star Thurogam - Rajeshkumar

    21

    1

    அந்த ராத்திரி நேரத்தில் நான்கு மூலைகளிலும் கறுப்புத் தடவி வந்த அந்த தந்தி, ஹாஸ்டல் வார்டன் மதர் மார்ட்டினோவை பீதி கொள்ள வைத்தது. வாசல் கதவுக்கு சரியாய் நின்ற அந்த டெலிகிராபிக் ஆசாமியிடம் கேட்டாள். மேலுதட்டில் வியர்வை அரும்ப.

    டெலிகிராம் யாருக்கு கிருஷ்ணன்?

    அவன் சொன்னான்.

    மிஸ் ரம்பா. செக்கண்ட் பி.ஏ.எக்னாமிக்ஸ்... டெலிகிராமை நாளைக்கு காலையிலதான் கொண்டு வந்து கொடுக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா டெலிகிராம்ல கெட்ட விஷயம். அதான் உடனே வந்தேன்.

    மதர் மார்ட்டினோ கை நடுங்க கையெழுத்திட்டுவிட்டு டெலிகிராமை வாங்கிக் கொள்ள டெலிகிராபிக் கிருஷ்ணன் நான் வர்றேன் மதர் - என்று சொல்லி நகர்ந்தான்.

    மதர் தந்தியின் வாயைப் பிரித்தாள். வாய் பிளந்ததும் சினிமாஸ்கோப் அகலத்தில் அந்த இளஞ்சிவப்பு காகிதம் விரித்து டைப் அடித்து ஒட்டப்பட்டிருந்த வாசகங்களைக் காட்டின.

    MOTHER EXPIRED. START IMMEDIATELY - SOMU UNCLE.

    மதர் மார்ட்டினோ சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள்.

    மணி 12. 20.

    பக்கத்து அறைக்குள் நுழைந்து கட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஆயா பொன்னம்மாவை தொட்டு எழுப்பினாள்.

    பொன்னம்மா...

    அவள் ‘திடும்’மென்று கண்விழித்து மதர் மார்ட்டினோவைப் பார்த்ததும் அம்மா என்று அரக்க பரக்க எழுந்து நின்றாள். மார்ட்டினோ சொன்னாள்.

    போய் ரம்பாவை கூட்டிகிட்டு வா...

    அவள் தலையைச் சொறிந்தாள்.

    எந்த ரம்பாம்மா?

    ஏ’ பிளாக் நாற்பத்தியொன்னாம் நெம்பர் ரூம்ல சிவப்பா ஒரு பொண்ணு இருக்குமே... அந்தப் பொண்ணைத்தான்... போய் கூட்டிகிட்டு வா...

    இ...இந்நேரத்துலஎதுக்கம்மா?, சொல்றேன். போய் கூட்டிகிட்டு வா...

    பொன்னம்மா அவிழ்ந்து போன தன் கூந்தலை இரண்டு கைகளாலும் வாரி முடிச்சிட்டுக் கொண்டே வராந்தாவில் வேகவேகமாய் விசுக்விசுக்கென்னு நடந்து போனாள்.

    ஐந்து நிமிஷம் கழித்து

    கலவரமான ரம்பாவோடு வந்தாள். ரம்பாவுக்கு இருபத்தியோரு வயது இருக்கலாம். நல்ல சிவப்பு நிறமாக இருந்தாலும் கொஞ்சம் அழகில் தவறியிருந்தாள். தூக்கலான உதடுகளும், புடைத்த மாதிரியான நெற்றியும், சராசரி அழகுக்கும் கீழே அவளைத் தள்ளியிருந்த்து. காஞ்சிபுரத்தில் வீடு. அவள் எஸ்.எஸ்.எல்.ஸி.யில் இருக்கும் போதே அவளுடைய. அப்பா ‘அமரர்’ பதவிக்கு ஆசைப்பட்டுவிட முப்பத்தேழாவது வயதிலேயே ரம்பாவின் அம்மாவுக்கு சுமங்கலி பதவியிலிருந்து டிபிரமோஷன்.

    மதர்...

    கண்களில் மிச்சமிருந்த தூக்கக் கலக்கத்தோடும் கொஞ்சம் பயத்தோடும் மதர் மார்ட்டினோவை நெருங்கி நின்றாள். மார்ட்டினோ அவள் தோளைத் தட்டிக் கொடுத்தாள். மெல்லிய குரலில் கேட்டாள்.

    அம்மாவுக்கு உடம்பு செளகரியம் இல்லாம இருந்ததா?

    ரம்பா திடுக்கிட்டாள்.

    எதுக்காக கேக்கறீங்க மதர்...

    மதர் கையில் மறைத்து வைத்திருந்த தந்தியை நீட்ட அதை பதட்டமாய் வாங்கி பார்த்தாள் ரம்பா...

    தந்தி வாசகம் அவளை நொறுக்க சட்டென்று உடைந்து முகம் விகாரப்பட்டு ‘அம்மா’ என்று அவஸ்தையாய் வீறிட்டு கண்களில் நீரை மளமளவென்று காட்டினாள்.

    மதர் அவளை நெருங்கி முதுகின் மேல் கையை வைத்தாள்.

    இந்த துயரத்தை தாங்கும் மன வலிமையை கர்த்தர் உனக்கு தரட்டும்.

    ரம்பா அழுகையை அடக்கி விம்மலை மென்று கொண்டே சொன்னாள்.

    மதர்! நா... நான்... இ... இப்பவே... புறப்படணும்.

    எப்படிம்மா போவே...? இந்நேரத்துக்கு காஞ்சிபுரம் போக உனக்கு பஸ் இருக்குமா...?

    புடவைத் தலைப்பால் கண்களினின்றும் பீறிட்ட கண்ணீரை ஒற்றிக்கொண்டாள் ரம்பா..."

    திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் போயிட்டா... காஞ்சிபுரம் மார்க்கமா போகிற ஏதாவது ஒரு பஸ்ஸை பிடிச்சுடுவேன் மதர்.

    துணைக்கு யாரையாவது கூட்டிட்டுபோறியா?

    வேண்டாம் மதர்... மெட்ராஸிலிருந்து காஞ்சிபுரம் போக துணை எதுக்கு? ஒன்றரை மணி நேர ஜர்ணிதானே...? நானே போயிடுவேன்.

    பஸ் ஸ்டாண்ட் போய் பஸ்ஸில் ஏறிட்டா பயமில்லை. பஸ் ஸ்டாண்ட் வரைக்குமாவது உனக்கு துணை வேணும்மா.

    வே... வேண்டாம் மதர்... நானே போயிடுவேன்.

    "நோ... நோ...! பொன்னம்மா...! வாட்ச்மேன் நரசய்யாவைக் கூப்பிடு.’’

    மதர் மார்ட்டினோ சொல்ல பொன்னம்மா இருட்டில் வாசற்படி இறங்கி காம்பௌண்ட் கேட்டைநோக்கிப் போனாள். மதர் ரம்பாவை ஏறிட்டாள்.

    அம்மாவுக்கு இப்போ என்ன வயசு...?

    நாற்பத்திரெண்டு... மதர்...

    போனவாரம் ஊருக்கு போயிருந்தப்போ... அம்மா நல்லாத்தானே இருந்தாங்க...?

    "ஆமா... மதர்...’’

    இப்போ திடீர்ன்னு எப்படி?

    அம்மாவுக்கு அடிக்கடி நெஞ்சுவலி வரும்.

    அது யாரு சோமுஅங்கிள்!

    பக்கத்து வீட்டுக்காரர். சொன்ன ரம்பா விசும்ப, மதர் மறுபடியும் அவளுடைய தோளைத் தட்டினாள்.

    இதோ பாரம்மா ரம்பா! நமக்கு வேண்டியவங்க இறந்துபோனா... அந்த துக்கத்தை தாங்கிக்கிறது கஷ்டம்தான். இறப்புங்கிறது இயற்கையா வர்ற ஒண்ணு. அது எல்லோருக்குமே உண்டுங்கிற உண்மையை மனசுல நிறுத்தி வெச்சிகிட்டா... இந்த துயரத்தோட கனம் குறையும்...

    மதர் மார்ட்டினோ சொல்லிக் கொண்டிருக்கும்போதே

    வாட்ச்மேன் நரசய்யா வேகவேகமாய் ஓடி வந்தான், பவ்யமாய் மார்புக்கு குறுக்காய் கைகளைக் கட்டி தள்ளி நின்று அம்மா என்றான்.

    மதர் அவளை ஏறிட்டாள்.

    நரசய்யா! இந்த பொண்ணோட அம்மா காலமாயிட்டதா தந்தி வந்திருக்கு... பொண்ணுக்கு ஊரு காஞ்சிபுரம். இந்நேரத்துக்கு பஸ் ஸ்டாண்ட் போனா காஞ்சிபுரம் போகிற பஸ் கிடைக்குமா?

    வேண்டிய பஸ் கிடைக்கும்மா

    நீ இந்தப் பொண்ணை கூட்டிகிட்டு போய்... திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் விட்டுட்டு வர்றியா...!

    சரிங்கம்மா...

    பஸ்ஸில ஏத்திட்டுதான் வரணும்... சொன்ன

    Enjoying the preview?
    Page 1 of 1