Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Thappu Thaalam Oru Sariyaana Raagam
Oru Thappu Thaalam Oru Sariyaana Raagam
Oru Thappu Thaalam Oru Sariyaana Raagam
Ebook91 pages42 minutes

Oru Thappu Thaalam Oru Sariyaana Raagam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
Oru Thappu Thaalam Oru Sariyaana Raagam

Read more from Rajeshkumar

Related to Oru Thappu Thaalam Oru Sariyaana Raagam

Related ebooks

Related categories

Reviews for Oru Thappu Thaalam Oru Sariyaana Raagam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Thappu Thaalam Oru Sariyaana Raagam - Rajeshkumar

    17

    1

    "என்னோட சாபம் உன்னைச் சும்மா விடாதுடா, நாயே... நீயும் இதே மாதிரி ஒரு நாள் உயிர்ப்பிச்சை கேட்டு என் வீட்டுப் படியேறிக் கெஞ்சத்தான்டா போறே... இது ஒரு பெண்ணோட சாபம் மட்டுமில்லே, ஒரு தாயின் சபதம்...!"

    சாந்தி வீரமாய் அந்த நீளமான வசனத்தை மூச்சுப் பிடித்துப் பேசி முடித்ததும் சுற்றிலுமிருந்த நீல நிறத்தாவணி வெள்ளை நிற ஜாக்கெட்டை யூனிஃபார்மாய் உடம்புக்குக் கொடுத்திருந்த பெண்கள் உற்சாகமாய்க் கை தட்டினார்கள்.

    அட்டகாசம்டி... சாந்தி...!

    ஸ்ரீவித்யா உன்கிட்டே தோத்துப் போகணும்...

    எப்படிடி... இவ்வளவு அற்புதமா நடிக்கறே! நீயெல்லாம் இன்னும் எந்த டைரக்டர் பார்வையிலும் படாம இருக்கிறது, சினிமா உலகத்தோட நஷ்டம்...!

    சாந்தி அவர்களின் பாராட்டுக்களை அமர்த்தலான புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள். வசனம் பேசுவதற்காக இழுத்துச் செருகியிருந்த தாவணி நுனியை இடுப்பிலிருந்து விடுவித்து விட்டாள். அகலமான கண்கள் நிறைய சினிமா ஏக்கம் இருந்தது. சின்னச் சின்ன ஜிமிக்கிகளை இரண்டு காதுகளிலும் தொங்கவிட்டு ராதா மாதிரி காதை மறைத்துச் சீவியிருந்தாள்.

    ஏம்மா...

    பின் பக்கமிருந்து குரல் கேட்க,

    எல்லோரும் ஒட்டு மொத்தமாய்த் திரும்பினார்கள். காலி டெஸ்க்குகளின் கோடியில் பியூன் மருதாசலம் தெரிந்தான். கோபமாய் அவர்களை நோக்கி வந்தான்.

    என்னம்மா... தினமும் உங்களோட பெரிய ரோதனையாப் போச்சு...! ஸ்கூல் முடிஞ்சாலும் வீட்டுக்குப் போகாம க்ளாஸ் ரூமுக்குள்ளேயே உட்கார்ந்திட்டிருக்கீங்க... ஹெச்.எம். முன்னாடி உங்களையெல்லாம் கொண்டு போய் நிறுத்தினால்தான் சரிப்படும்...

    வேண்டாம். போயிடறோம். இதோ நாங்க க்ளாஸைக் காலி பண்ணியாச்சு...!

    சொல்லி அவரவர்கள் புத்தகக் கட்டைக் கைகளில் எடுத்து மார்புக்குக் கொடுத்துக் கொண்டே வெளியே வந்தார்கள். போகிற ஒவ்வொருத்தரையும் வாசலில் நின்று முறைத்தலாய்ப் பார்த்தான் மருதாசலம்.

    சாந்தி வெளியேறுகிற போது

    ஏய்... புள்ளே...!

    கூப்பிட்டு நிறுத்தினான்.

    என்ன...?

    பள்ளிக்கூட வருஷ விழா மேடைல நடிக்கறதோட நிறுத்திக்க...! தினமும் இங்கே வேற நடிச்சுக் காட்டாதே... இவளும் இவ ஜடையும். உங்கப்பன்கிட்டே சொல்லி பட்டை கிளப்பச் சொல்லணும்...!

    ஒரு மாதிரி வாயைக் கோணிக் காட்டினாள் சாந்தி.

    கொஞ்சம் கூட உனக்கு ரசனையே கிடையாது. நாளைக்குச் சாயந்தரம் ‘விதி’ சுஜாதா வசனம் பேசறேன்... மறக்காம வந்துடு...

    உனக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு... ராத்திரி உன் வீட்டுப் பக்கமா வந்து உங்கப்பன்கிட்டே சொல்றேன், போ...

    அவன் திட்டிக் கொண்டிருக்க, சாந்தி ஓடிப்போய்த் தோழிகளோடு இணைந்து கொண்டாள். ஸ்கூல் காம்பெளண்டைக் கடந்து வீதிக்கு வந்தபோது எல்லா மாணவிகளும் எதிர்ப்பக்கமாய் போக சாந்தியும் பரிமளாவும் மட்டும் வலது பக்கம் திரும்பி நடந்தார்கள்.

    பரிமளா இவளின் வீட்டுக்கு நாலைந்து வீடுகள் தள்ளி இருப்பவள். சாந்தியைக் காட்டிலும் நன்றாகவே படிப்பவள். மாதா மாதம் சாந்தியின் ரேங்க் ஷீட்டைப் பரிமளாவின் ரேங்க் ஷீட்டோடு கம்பேர் செய்துவிட்டுத்தான் வீட்டில் அர்ச்சனை மழையைப் பொழிவார்கள்...

    இன்னிக்கு நீ நல்லா திட்டுவாங்குவே! இல்லே, சாந்தி?

    எதுக்கு?

    ரேங்க் ஷீட் கொடுத்திருக்காங்களே!

    நான் வீட்ல காட்டினாத்தானே!

    கையெழுத்து...!

    அஞ்சு நாள் வெச்சிருந்துட்டு நானே அப்பாவோட கையெழுத்தைப் போட்டுக் கொண்டு போய்க் கொடுத்துடுவேன்.

    நடக்காதே...

    ஏன்...?

    எங்கப்பா சும்மா இருப்பாரா... என்னோட ராங்க் ஷீட்டைப் பார்த்த மறு நிமிஷமே உங்க வீட்டுக்கு வந்துடுவாரே!

    மாசா மாசம் உங்கப்பாவினாலதான் நான் திட்டு வாங்கறேன்!

    ஏன்டி கொஞ்சம் ஒழுங்கா படிக்கறதுக்கென்ன...? நல்லாத்தானே படிச்சிட்டிருந்தே...! என்னிக்கு ஸ்கூல் நாடகத்துல முதல் ப்ரைஸ் வாங்கினியோ அன்னிலர்ந்தே நீ படிக்கறதை விட்டுட்டே...

    அலட்சியமாய் ‘பச்’ என்றாள் சாந்தி.

    ப்ச்’னா என்ன அர்த்தம்...?

    படிச்சுப் படிச்சு என்னத்தைக் கண்டோம்...? நடிகை பத்மலதா ரெண்டாவது படிக்கறப்போவே நடிக்கப் போயிட்டாளாம், தெரியுமா...?

    தலையில் நோகாமல் அடித்துக் கொண்டாள் பரிமளா.

    அவ நடிகைடி...!

    நானும் நடிகையாகப் போறேன்.

    என்ன...?

    வேணா பாரேன்...

    உனக்குப் பைத்தியம் தான்டி பிடிச்சிருக்கு! வீட்ல இந்த வார்த்தையைச் சொல்லிடாதே. உன்னோட ஆத்தா அடுப்புல கரண்டியைப் போட்டுச் சூடு வெச்சுடுவா...

    பேசிக் கொண்டே வந்தவள் சட்டெனத் தன் அருகே சாந்தியைக் காணாமல் திகைத்து நின்றாள். திரும்பிப் பார்த்தாள் பத்தடி தூரத்தில் சாந்தி நின்றிருந்தாள். எதையோ ஆர்வமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    திரும்பி நடையிட்டு அவளைத் தொட்டாள் பரிமளா. பக்கத்தில் போனதம்தான் தெரிந்தது. சுவரில் அப்பியிருந்த

    Enjoying the preview?
    Page 1 of 1