Kalyaanamaalai
()
About this ebook
Read more from Parimala Rajendran
Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Ithayam Nanaikkum Mazhai Rating: 5 out of 5 stars5/5Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Ithayathil Nee Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Unnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Ithu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Perazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Osaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Malarntha Vizhigal Rating: 5 out of 5 stars5/5Maariyathu Nenjam Maattriyathu Yaaro Rating: 0 out of 5 stars0 ratingsKaalangalil Aval Vasantham Rating: 4 out of 5 stars4/5Pasumai Niraintha Ninaivugal Rating: 5 out of 5 stars5/5Nesam Niram Maarumo Rating: 0 out of 5 stars0 ratingsThaalaattum Poongattru Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maarum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsManasellaam NIrainjavane Rating: 4 out of 5 stars4/5
Related to Kalyaanamaalai
Related ebooks
Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsPonnaadai Rating: 4 out of 5 stars4/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Naan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsKankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5Oomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsKoottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsKannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Nenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Manamagale Marumagale Vaaa Rating: 0 out of 5 stars0 ratingsPirai Thedum Iravu Rating: 5 out of 5 stars5/5Anbu Malarkal Rating: 5 out of 5 stars5/5Thulasi Rating: 0 out of 5 stars0 ratingsUllam Irandum Ondru Rating: 0 out of 5 stars0 ratingsManase Manase Rating: 5 out of 5 stars5/5Penalla Penalla Rojapoo Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsPonmagal Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsVanaththil Oru Thevathai Rating: 5 out of 5 stars5/5Ennuyir Neethaney…! Rating: 5 out of 5 stars5/5Viral Thodum Thooraththile Rating: 5 out of 5 stars5/5Prayachchitham Rating: 4 out of 5 stars4/5Inaiyaana Ilamaane Rating: 4 out of 5 stars4/5Unnnai Thedum Nenjam Rating: 3 out of 5 stars3/5Irandu Manam Vendum Rating: 4 out of 5 stars4/5Assai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsIthayam Oru Kovil Rating: 4 out of 5 stars4/5En Vasam Naanillai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kalyaanamaalai
0 ratings0 reviews
Book preview
Kalyaanamaalai - Parimala Rajendran
18
1
சில்லென்ற பனிக் காற்று வீசும் விடியற்காலை பொழுது. குளிரில் உடல் லேசாக நடுங்கியது.
புடவையை இழுத்துப் போர்த்தி அருகில் நடந்து வரும் அம்மாவை பார்த்தாள் மதுமதி.
வாழ்க்கையில் எந்த சுகத்தையும் அனுபவிக்காதவள். குடும்பத்திற்காகவே உழைப்பவள்.
எந்த வருத்தத்தையும் முகத்தில் வெளிப்படுத்தாமல், தன்னம்பிக்கையுடன் ஆறுதல் சொல்பவள்.
எதற்குமே அசைந்து கொடுக்காத அம்மாவை... இதோ என் வாழ்க்கை அசைத்துப் பார்க்கிறது.
வயது இருபத்தாறை தொடப் போகிறது. கல்யாண சந்தையில் விலை போகாமல் கன்னியாக நிற்கிறேன்.
அழகில் குறையா... இல்லை... படிப்பு... அதவும் ஒரு டிகிரி கையில் இருக்கிறது.
அம்மாவின் வருமானத்தில் வாழும் குடும்பம். அப்பா என்ற பெயரில் ஒரு மகாராசன் இருக்கிறார்.
உங்க மகளுக்கு செவ்வாய் தோஷம். கடுமையாக இருக்கு. ஜாதகத்தை கையில் எடுக்கிறவங்க எல்லாரும் வேண்டாம்னு சொல்றாங்க. நான் என்னம்மா செய்யறது பார்ப்போம். இவளுக்கென்று ஒருத்தன் வராமலா போவான்.
ஜோசியரின் வார்த்தைகள். இந்த நிமிஷம் வரை வரவில்லை. கோவில் கோவிலாக பிரார்த்தனைகள். வேண்டுதல்கள். மாதங்களும், வருடங்களும் விடைபெற... வயது ஏறிக் கொண்டே போகிறது.
மது, என்ன யோசனை... போய்கிட்டே இருக்கே... கோவில் வந்தாச்சு.
அம்மாவுடன் திரும்பி இறக்கத்தில் நடக்கிறாள். சிவபெருமான் வீற்றிருக்கும் சிவஸ்தலம். ஆலயத்திலிருந்து இனிமையான பாடல் ஒலித்தது.
"நமசிவாய, நமசிவாய ஓம் நமசிவாய
அண்ணாமலையே போற்றி. சிவ ஓம் நமசிவாய"
எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி. மதுமதியிடம் கொடுக்கிறாள். வாங்கியவள்,
சாறை பிழிந்து, கைகளால் தரையில் மெழுகி, கோலமிட்டு, சந்தனம் குங்குமம் வைத்து, எலுமிச்சை தோலில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுகிறாள்.
அர்ச்சனை கூடையை குருக்களிடம் தந்தவள்,
மதுமதி சிம்மராசி, மகம் நட்சத்திரம்
என்றாள்.
ஈஸ்வரனுக்கு அர்ச்சனை நடக்க
கண்மூடி பிரார்த்திக்கிறார்கள்.
கடவுளே என் மகளுக்கு நல்ல வழிகாட்டு. என் வாழ்க்கை தான் போராட்டமாக அமைந்துவிட்டது. அவளுக்காவது நல்ல கணவனை கொடு...
அம்மாவுக்கு என் மூலமாவது ஒரு விடியலை காட்டு இறைவா.
இருவர் மனமும், கடவுளிடம் பிர்த்திக்கிறது.
முன்புறம் இருக்கும் சிறிய இடத்தில் பவளமல்லிக் கொடி, செம்பருத்தி, முல்லை என பூச்செடிகள்.
அழகாக மலர்ந்து ரம்மியமான நறுமணத்தை காற்றில் பரப்ப, கேட்டை திறந்து இருவரும் உள்ளே வருகிறார்கள்.
பொழுது விடியறதுக்குள் இரண்டு பேரும் அலங்காரம் பண்ணிக்கிட்டு நகர்வலம் கிளம்பியாச்சா... இப்படி கோவில், கோவிலாக போய் சாமி கும்பிட்டு என்ன பிரயோசனம். மாப்பிள்ளைங்க வரிசை கட்டி வந்து நிற்கிறாங்களா... நேரத்திதையும், பொழுதையும் வீணாக்கிகிட்டு... நடக்கிறது தான் நடக்கும்.
எதிரில் நந்தி மாதிரி வழிமறித்து நின்று பேசும் கணவனை ஏறிட்டுப் பார்க்கிறாள்.
உங்களை எந்த விதத்திலும் தொந்தரவு பண்ணலையே... எதுக்கு காலையில் வாக்குவாதம். வழிவிடுங்க... எனக்கு வேலை இருக்கு. ஸ்கூலுக்கு கிளம்பணும்.
அடடா... நீ போய் சொல்லிக் கொடுத்துதான் பசங்க உருப்படப் போகுது. பெத்த மகளையே உருப்பட வைக்க முடியலை.
ஏளனமான சிரிப்புடன் ஒதுங்கி நிற்க, கணவனை தாண்டி உள்ளே போகிறாள் ஜெயா.
அப்பா... காபி போட்டு குடிச்சீங்களா.
அந்த அக்கறையெல்லாம் இருக்கா? குடிச்சேன், போய் சூடாக இன்னொரு காபி போட்டு எடுத்துட்டு வா.
"சரிப்பா.’’
ஜெயாவுக்கும், நாதனுக்கும் திருமணமாகும் போது... மாப்பிள்ளை ரைஸ் மில்லில் மானேஜராக இருப்பதாக சொல்லி தான் திருமணம் முடித்தார்கள்.
கல்யாணமான பிறகு தான் ஜெயாவுக்கு தெரிந்தது. எந்த வேலையிலும் தொடர்ந்து இரண்டு மாதத்திற்கு மேல் இருக்க மாட்டான் என்று.
மில் ஓனர்ன்னா... பெரிய கொம்பா...? அவன்கிட்ட பணம் இருக்கு... அதுக்காக வேலை செய்யறவங்க அவன் அடிமையா...? கரெக்டா ஒன்பது மணிக்கெல்லாம் மில்லில் இருக்கணுமாம்... இவன் கொடுக்கிற சம்பளத்துக்கு இந்த அதிகாரம்... போடா நீயும் உன் வேலையும்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன்.
அதிர்ந்து போகிறாள் ஜெயா.
என்ன முழிக்கிறே... இது இல்லாட்டி இன்னொரு வேலை. போய் சிக்கன் வாங்கிட்டு வந்து பிரியாணி பண்ணு. சாப்பிட்டு குட்டி தூக்கம் போடறேன்.
பொறுப்பில்லாதவன்... இவனை நம்பி தான் இவள் வாழ்ககை பயணம் செல்லப் போகிறது.
படித்த படிப்பு கைகொடுக்க, உள்ளூரிலேயே ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது.
என்னங்க... தெரிஞ்சவங்க மூலம் சொல்லியிருந்தேன். ஸ்கூலில் டீச்சர் வேலை கிடைச்சிருக்கு. ஐந்தாவது படிக்கிற பிள்ளைகளுக்கு தமிழ் பாடம் சொல்லித் தரணும். நான் சம்பாதித்தால் குடும்பம் நடத்த சௌகரியமாக இருக்கும். என்ன சொல்றீங்க?
மனைவியை முறைக்கிறான்.
நான் கையாலாகாதவன்... குடும்பம் நடத்த வக்கில்லாதவன்னு நினைச்சியா...?
"அப்படி இல்லைங்க... நாளைக்கு குழந்தை பிறந்தா... இரண்டு பேர் வருமானம் இருந்தா நல்லது தானே...?’’
அப்படி சொல்றியா... சரி... வேலைக்கு போ... ஆனா ஒரு கண்டிஷன். வேலைக்கு போறேன்னு திமிர்தனமாக எனக்கு தெரியாம அதிக பிரசங்கித்தனமா எதுவும் செய்யக்கூடாது. வாங்கற சம்பளத்தை முழுசா அப்படியே என்கிட்டே தரணும் புரியுதா?
தலையாட்டுகிறாள் ஜெயா.
கையில் கணிசமாக பணம் கிடைக்க,
எதற்கும் ஆசைபடாத ஜெயா... சிக்கனமாக குடும்பம் நடத்த...
வீட்டில் உட்கார்ந்து கொண்டு கையில் பணத்தை வைத்து செலவழிப்பது சொர்க்கமாக தெரிய...
தனக்கென்று பொறுப்பாக எந்த வேலையும் தேடாமல்... இருக்கிற வேலையை தக்க வைத்துக் கொள்ளாமல் பொறுப்பற்றவனாக உலா வருகிறான் நாதன்.
மதுமதி பிறக்க, மூச்சுவிட முடியாமல் இறுக்கமான சூழ்நிலையில் இருந்தவள், அதிலிருந்து மீள்கிறாள்.
பேருக்கு கணவன் என்று பொறுப்பில்லாதவனாக நாதன் காலத்தை கடத்த, மகளுக்காகவே வாழத் தொடங்குகிறாள் ஜெயா.
இதோ இன்று வரை வாழ்க்கையில் எந்த சுகத்தையும் காணாமல், கணவனையும் சகித்துக் கொண்டு, குடும்பப் பொறுப்பையும் ஏற்று... வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறாள்.
"மதுமதி, நான் திவ்யா பேசறேன்."
சொல்லு திவ்யா... எங்கிருந்து பேசற...?
"அவர் டிரைனிங்ன்னு ஒரு வாரம் பெங்களூரு