Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Rojavum Sila Thottakkalum
Oru Rojavum Sila Thottakkalum
Oru Rojavum Sila Thottakkalum
Ebook83 pages55 minutes

Oru Rojavum Sila Thottakkalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Oru Rojavum Sila Thottakkalum

Read more from Rajeshkumar

Related to Oru Rojavum Sila Thottakkalum

Related ebooks

Related categories

Reviews for Oru Rojavum Sila Thottakkalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Rojavum Sila Thottakkalum - Rajeshkumar

    19

    1

    மேஜை மேல் இருந்த இண்டர்காம் ஈனஸ்வரத்தில் முனகியதும் - தலையங்க ப்ரூப்பை சரிபார்த்து கொண்டிருந்த ரிப்போர்ட்டர் கிருஷ்ணமூர்த்தி ரிஸீவரை எடுத்தான்.

    மறு முனையில் எடிட்டர் பேசினார்.

    கிருஷ்ணமூர்த்தி! ஏதாவது வேலையா இருக்கியா?

    தலையங்கம் பார்த்துட்டிருக்கேன் ஸார்

    என்னோட ரூமுக்கு வா... ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும்

    வர்றேன் ஸார்...

    ரிஸீவரை வைத்துவிட்டு எழுந்த கிருஷ்ணமுர்த்தி இளைஞன். ஜர்னலிஸம் படித்தவன். நன்றாக கவிதை எழுதுவான். ஆனால் பரக்க கட்டுரைகளும் எழுதுவது உண்டு. புனைப் பெயர் சூரியக்குஞ்சு, கதர் அணிவதில் அதிக ஈடுபாடு. அவன் எழுதிய கவிதைகள் எல்லாமே - ஏதாவது ஒரு பக்கம் சலசலப்பை உண்டாக்கியிருக்கின்றன. போன மாதம் சாமியார்களைப்பற்றி அவன் எழுதியிருந்த ஒரு கவிதை ஆஸ்திக வட்டாரத்தில் அனலை அள்ளிக் கொட்டியது.

    சாமியாரை வீட்டுக்கு –

    கூட்டி வந்து - உட்கார வைத்து

    பணிவிடை செய்து –

    யோசிக்காமலேயே - உன்

    தலையால் அவர் காலைத்

    தொடுகிறாயே! அவர்

    ஆசிர்வதிக்க மட்டுமா வந்துள்ளார்?

    உன்னிடம் யாசிக்கவும்தான்

    வந்திருக்கிறார்.

    காசின்றி நீ இருந்த காலத்து

    ஆசிர்வதிக்க இவர் ஏன் வரவில்லை?

    கிருஷ்ணமூர்த்தி எந்தக் கவிதையை எழுதினாலும் அதில் அமிலம் தோய்ந்திருக்கும். ஏப்ரல் மாதத்தின் சூரிய வெப்பம் அதில் ஒளிந்திருக்கும்.

    எடிட்டரின் அறைக்கதவு சாத்தப்பட்டிருக்க - மெல்ல தட்டினான்.

    எடிட்டரின் குரல் உள்ளேயிருந்து கேட்டது.

    வா... கிருஷ்ணமூர்த்தி...

    கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனான். எடிட்டருக்கு முன்னால் போடப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் ஒன்றில் - நிவேதிதா உட்கார்ந்திருந்தாள். அந்த பத்திரிகை அலுவலகத்தில் அவளும், ஒரு ரிப்போர்ட்டர், பெண்களுக்கான பக்கங்களை கவனித்துக் கொள்பவள், பார்க்கிற இந்த நிமிஷம் சுடிதாரில் இருந்தாள்.

    எடிட்டர் நாற்காலியைக் காட்ட - கிருஷ்ணமூர்த்தி உட்கார்ந்து அவர் முகத்தை ஏறிட்டார்.

    அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார். கிருஷ்ணமூர்த்தி நானும் நிவேதிதாவும் மஹாராஷ்ட்ரா பூகம்பத்தைப் பத்தி பேசிட்டிருந்தப்ப - ஒரு யோசனை தோணிச்சு. அந்த யோசனையை செயல்படுத்தலாமா, வேண்டாமான்னு கேட்கத்தான் உன்னைக் கூப்பிட்டேன்...

    என்ன யோசனை ஸார்...?

    எல்லா வார இதழ்களும் - செய்தித்தாள்களில் வந்த ஆதாரத்தை வெச்சுகிட்டுத்தான் கட்டுரை எழுதறாங்க... சம்பவம் நடந்த இடத்தை ஒரு செய்திப் பத்திரிகையின் நிருபர் பார்க்கிறதுக்கும் - ஒரு வாரப் பத்திரிக்கையின் நிருபர் பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இதை நீ ஒத்துக்கறியா?

    ஒத்துக்கிறேன் ஸார்...

    அப்படீன்னா... நம்ம பத்திரிக்கையிலிருந்து - ரெண்டு பேரை பூகம்பம் நடந்த அந்த மகாராஷ்ட்ரா ஊர்களுக்கு ஏன் அனுப்பி வைக்கக் கூடாது...?

    தாராளமா அனுப்பலாம் ஸார்... பூமி வாய் பிளந்த அந்த மண்ணோட அவலங்களைப் பத்தி - நல்லாவே தெரிஞ்சுட்டு வரலாம்...

    எடிட்டர் புன்னகைத்தார்.

    மஹாராஷ்ட்ரா மாநிலம் வாத்தூர், உஸ்மானாபாத் மாவட்டங்களை உலுக்கிய பூமி அதிர்ச்சியின் கோபம், உக்கிரம் இன்னும் தணியலை. அந்த ஊர்களுக்கு நீயும், நிவேதிதாவும் போய் - உண்மையான விபரங்களை சேகரிச்சுட்டு வரணும்ங்கிறது என்னோட விருப்பம்...

    ஸார்... கிருஷ்ணமூர்த்தி நிமிர்ந்தான்.

    நிவேதிதா சம்மதம் கொடுத்தாச்சு... இனி எனக்கு தேவைப்படறதெல்லாம் உன்னோட சம்மதம்தான்.

    நான் ரெடி ஸார்...

    எடிட்டர் சிரித்தார்.

    இதுதான் கிருஷ்ணமூர்த்தி. நிவேதிதா! நான் சொல்லலை...?

    எப்ப புறப்படணும் ஸார்...?

    இன்னிக்கு ராத்திரிக்கே கூட ட்ரெயின் இருக்கு. கிளம்பறதாயிருந்தா இன்னிக்கே கிளம்பலாம்... எவ்வளவு சீக்கிரத்துல அந்த ஸ்பாட்டுக்கு போறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது...

    இன்னிக்கே கிளம்பறோம் ஸார்...

    டிக்கெட்டுக்கு ஏற்பாடு பண்ணட்டுமா?

    ம்...

    நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் திங்க்ஸை ரெடி பண்ணுங்க... ராத்திரி பத்து மணிக்கு ட்ரெயின். நாம் மறுபடியும் சாயந்தரம் அஞ்சு மணிக்கு இங்கே சந்திப்போம். ஸ்பாட்டுக்கு போய் - அங்கே என்னென்ன செய்யணும்ங்கிறதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்...

    தலையாட்டிக்கிட்டு - நிவேதிதாவும் - கிருஷ்ணமூர்த்தியும் வெளியே வந்தார்கள்.

    கிருஷ்ணமூர்த்தி கேட்டான்.

    Enjoying the preview?
    Page 1 of 1