Osaiyidum Poongaatre
By Usha
4/5
()
About this ebook
Read more from Usha
Vannathupoochikku Vazhi Vidu Rating: 4 out of 5 stars4/5Velicha Poove Vaa Rating: 4 out of 5 stars4/5Minsaara Kannaa Rating: 4 out of 5 stars4/5Mazhaithuli Mattum Unakku Rating: 5 out of 5 stars5/5Thaai Veedu Rating: 0 out of 5 stars0 ratingsVannam Konda Vennilave Rating: 5 out of 5 stars5/5Kangal Solkindra Kavithai Rating: 4 out of 5 stars4/5Neeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Oreedam Nee Koduthaai Rating: 4 out of 5 stars4/5Aval Oru Sittu Rating: 5 out of 5 stars5/5Maththaappoo Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Thinamum Malaginrana Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Thedum Paravaikal Rating: 0 out of 5 stars0 ratingsErimalai Pookkal Rating: 4 out of 5 stars4/5Manasu Pona Idam Rating: 4 out of 5 stars4/5Ellaam Penne Unnaale Rating: 5 out of 5 stars5/5Malare Vaa Manathai Thaa Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Nilaaakkaalam Rating: 5 out of 5 stars5/5Viral Thodum Thooraththile Rating: 5 out of 5 stars5/5Vellai Niraththil Oru Vannaththupoochi Rating: 4 out of 5 stars4/5Ullukkulle Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Pattaampoochigal Parakkum Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsIthu Pol Mazhaikkaalam Rating: 5 out of 5 stars5/5Netru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5Veethiyellaam Pooppanthal Rating: 0 out of 5 stars0 ratingsMayil Pola Ponnu Onnu Rating: 5 out of 5 stars5/5Vanaththil Oru Thevathai Rating: 5 out of 5 stars5/5Innoru Koodu Innoru Paravai Rating: 5 out of 5 stars5/5MiniMinik Kaadu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Osaiyidum Poongaatre
Related ebooks
Ithu Pol Mazhaikkaalam Rating: 5 out of 5 stars5/5Mayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Vaanam Thedum Paravaikal Rating: 5 out of 5 stars5/5Kaathal Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsAppavin Nizhal Rating: 5 out of 5 stars5/5Penalla Penalla Rojapoo Rating: 0 out of 5 stars0 ratingsIru Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsUravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 5 out of 5 stars5/5Neruppu Malar Rating: 5 out of 5 stars5/5Poo Maalaiyil Oru Poo Rating: 5 out of 5 stars5/5கனவு காணும் வாழ்க்கை Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Kaanum Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsPogumidam Vegu Thooramillai Rating: 5 out of 5 stars5/5Paattu Kalantidave Rating: 0 out of 5 stars0 ratingsNenjin Neruppu Rating: 5 out of 5 stars5/5Paasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsபாச மலர்கள் Rating: 0 out of 5 stars0 ratingsUllamengum Alli Thelithean Rating: 0 out of 5 stars0 ratingsPalingu Pookalin Oorvalam Rating: 4 out of 5 stars4/5Uyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaakave Rating: 0 out of 5 stars0 ratingsIvala En Magal? Rating: 0 out of 5 stars0 ratingsPoo Viluntha Saththam Rating: 4 out of 5 stars4/5முத்தழகி Rating: 0 out of 5 stars0 ratingsMuththazhagi Rating: 0 out of 5 stars0 ratingsRathidevi Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsSevvanathil Oru Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nerathu Udhayam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Osaiyidum Poongaatre
1 rating0 reviews
Book preview
Osaiyidum Poongaatre - Usha
24
1
"நிகாரிகா... ஒரு நிமிடம் வாயேன்..." - அப்பாவின் குரல் கேட்டது.
தோட்டத்தில் கீரைப் பாத்திகளுக்கு நீர் தெளித்துக் கொண்டிருந்தவள் இதோ வரேம்ப்பா...
என்று மெல்ல பூவாளி நீரை சொரிந்துவிட்டு கீழே வைத்தாள்.
இன்றைய காலைப்பொழுது அழகாக இருந்தது. வெயில் காலத்திற்கான இளம் சூடும் இளங்காற்றும் சூழலை ரம்மியமாக்கி இருந்தன. குமரனின் நினைவு இயல்பாக மேலெழுந்தது.
‘ஒவ்வொரு விடியலும் ஒவ்வொரு நம்பிக்கையையும், வாய்ப்பையும் கொண்டு வருகிறது நிகாரிகா’ என்று அவன் சொல்வான். கூடவே ‘உன்னோடு சேர்ந்து நின்று இந்த விடியலை ரசிக்க வேண்டும். அந்த நாள் எந்த நாள் என்று தான் தெரியவில்லை நிகாரிகா’ என்றும் சொல்லி புன்னகைப்பான். பதில் சொல்லாமல் அவள் வெறும் புன்னகையுடன் வேறு பேச்சுக்கு மாறி விடுவாள்.
என்னப்பா? சமையலை நீங்களே செஞ்சு முடிச்சுட்டீங்களா? அன்னம்மா வரலையா இன்னிக்கு
என்று தக்காளி ரசம் கொதிக்கும் வாசனையை முகர்ந்தபடி வந்தாள் அவள்.
ஆமாம்மா... ஏதோ கால் வலியாம்... பாவம் போகட்டும்... வயதானவள் இல்லையா?
என்றார் அப்பா. இதுதான் அப்பா. உடனே இளகிவிடுகிற மனது. ஈரம் கசிந்து கொண்டே இருக்கும் இதயம்.
ரசம் பண்ணி, தேங்காய் தொவையல் அரைச்சுட்டேன்... அம்மாவுக்கு எப்பவும் போல் கஞ்சி, பால் எல்லாம் ரெடி... இன்னிக்கு டோர்னமென்ட் இருக்கு... நான் கிளம்பட்டுமா?
என்றார் அப்பா கெஞ்சுவதைப் போல.
அட... எதுக்குப்பா இவ்வளவு வேலைகளை நீங்களே செஞ்சுகிட்டு? நான் பண்ண மாட்டேனா? பத்தரை மணிக்கு தானே எனக்கு ஆபீஸ்?
இருக்கட்டும்மா... ராத்திரி நல்ல தூக்கம் எனக்கும்... அம்மாவுக்கும் ஒண்ணும் கேக்கலே... ஸோ, அயாம் வெரி பிரஷ் நவ்
ப்ராக்டிஸ் பண்ணீங்களாப்பா?
தினமும் டெய்லி ஒரு மணி நேரம்... ஷீத்தல் வந்ததும் நான் கெளம்பிப் போனேன் இந்த மாசம் முழுசா... நல்ல பிட்டா இருக்கேன்னு தான் நெனைக்கிறேன்...
அப்பா சிரித்தார்.
அந்த பளீர் பற்களின் வரிசையும், இனிமையான முகமும், உயரமும், நிறமும் எல்லாம் சேர்ந்து ஒரு நிமிஷம் இந்திப் படங்களில் வரும் இளம் அப்பா போல் அவ்வளவு அழகாக இருந்தார். உண்மையிலேயே அவருக்கு இப்போது தான் ஐம்பது நெருங்குகிறது. என்றும் உடனே தோன்றியது அவளுக்கு.
சூப்பர்ப்பா... ஆல் தி வெரி பெஸ்ட்... ஹெல்த் ட்ரிங்க் ஏதாவது, குடிச்சுட்டு போங்கப்பா... ஐ மீன், கஞ்சி, ஜூஸ் இப்படி...
இதோ... நம்ம எல்லோருக்கும் சேர்த்து தான் போட்டிருக்கேன்... ராகி கஞ்சி...
தாங்க்ஸ்ப்பா...
வரட்டுமா கண்ணு?
என்றார் தலையை வருடி.
போயிட்டு வாங்க... ஜெயிச்சுட்டு வாங்க...
என்று பாட்மின்டன் பேட்டை எடுத்து அப்பாவிடம் கொடுத்து விட்டு அவள் சமையல் அறையை சுத்தம் செய்தாள்.
கார் கதவை மென்மையாக மூடிவிட்டு அப்பா கிளம்பினார்.
அம்மாவின் இருமல் ஒலி கேட்டது. எங்கோ தொலைவில் இருந்து கேட்கும் குருவிச்சத்தம் போல...
உள்ளே விரைந்தாள்.
எப்பொழுதும் போல் கண்மூடி படுத்துக் கிடந்தாள் அம்மா. காலத்தால் மட்கிப்போன ரவிவர்மாவின் ஓவியம் போல இருந்தாள். அம்மாவையே பார்த்துக் கெண்டு நின்றாள் அவள். கண்களின் ஈரம் இரண்டு துளிகள் சொட்டின.
பத்தாவது வயது வரை அம்மாவின் செல்லக்குட்டியாக, கண்ணின் மணியாக அவள் அணைப்பிலேயே வளைய வந்த தினங்கள் நினைவுக்கு வந்தன.
‘பெரிய அழகியாக்கும் என் அம்மா’ என்ற நினைவு எப்போதும் இருக்கிற சுட்டிப்பெண்ணாக அவள் அம்மாவையே சுற்றி சுற்றி வருவாள். தொட்டுத் தொட்டுப் பார்ப்பாள். வழுவழுத்த அம்மாவின் தேகமும், பூபோன்ற முகமும், திராட்சை விழிகளும், மென்மையான பேச்சும், கவர்கிற முறுவலும் அவளை கர்வம் கொள்ள வைக்கும். ‘எனக்குக் கிடைத்த தங்க அம்மா இவள்’ என்று பள்ளிக்கூடம் முழுக்க சொல்லிக் கொண்டு திரிவாள்.
அடுத்த பத்து வருடங்கள் எல்லாமே தலைகீழாக மாறிப் போனது ஏன் என்று தான் தெரியவில்லை. பெரிய காய்ச்சல் வந்தது அம்மாவுக்கு. மூளைக் காய்ச்சல், எலிக்காய்ச்சல் என்றெல்லாம் பெரிய பெரிய நோய்களின் பெயரைச் சொன்னார்கள். ஒரு முழு வருடம் தீவிர சிகிச்சையில் இருந்தாள் அம்மா. உயிரை மட்டும் விட்டு விட்டு வெறும் பொம்மையாக அவளை மாற்றி, படுக்கையில் கிடத்தி விட்டதே அது விதியா, தலையெழுத்தா என்று யாருக்கும் தெரியாது. செமி கோமா என்கிறார்கள். ஆழ்மன நினைவுகளில் பாதிப்பு இல்லை என்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் மூளை சுறுசுறுப்படையலாம் என்றார்கள். திடீரென்று இயல்பாகி பேசத் தொடங்கினாலும் ஆச்சரியமில்லை என்றார்கள். இதுவரையில் எந்த அற்புதமும் நிகழவில்லை.
அம்மா...
அழைத்தாள்.
அருகில் உட்கார்ந்தாள்.
நிகாரிகா வந்திருக்கேன்... உன் செல்லப் பொண்ணு... தினம் கேட்கிற கேள்வியை இப்பவும் கேட்கட்டுமா?
என்று மெல்ல தாயின் தலையைக் கோதினாள்.
இமைகளின் உள்ளே லேசான அசைவு இருப்பது போலிருந்தது. பிரமைதானா?
‘இது என்னம்மா பெயர் எனக்கு? ஸ்வேதா, ஸ்வப்னா, மோனிகா, வர்ஷா இப்படித்தானே இருக்கு என் தோழிகள் பெயர் எல்லாம்? நிகாரிகா ரொம்ப புதுசா இருக்கும்மா... நீதான் வெச்சியாமே இந்தப் பெயரை? ஏம்மா? காரணம் தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கும்மா எனக்கு..."
ம்... ம்...
என்று முணகலாக ஒலி வந்தது அம்மாவிடமிருந்து.
அவ்வளவுதான்.
மறுபடி உறக்கத்திற்குப் போய்விட்டாள்.
வாசலில் ஸ்கூட்டியின் ஒலி.
ஷீத்தல் வந்து விட்டாள்.
டே கேர் நர்ஸ். பகல்பொழுது முழுக்க அம்மாவின் உறுதுணை இவள் தான்.
வா ஷீத்தல்... காபி சாப்பிடறியா?
இல்லே மேடம்... இப்ப தான் காபி டிபன் சாப்பிட்டேன்... அம்மாவை இன்னிக்கு குளிப்பாட்டணும்... அதான் கொஞ்சம் சீக்கிரமா வந்தேன்...
என்றாள் ஷீத்தல் புன்னகைத்து.
2
அலுவலகம் இன்று பரபரப்பாக இருந்தது. எம்.டி. ஒருவேளை வந்திருக்கிறாரோ என்ற நினைத்தபடி அவள் தன் இருக்கைக்குப் போனாள்.
தள்ளியிருந்த ஹெச். ஆர். குழுவிலிருந்து மாலினி கையசைத்தாள். சிரித்தாள். இவளும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு, தன் கணினியை இயக்கினாள்.
விழிகள் தாமாக குமரனைத் தேடின. இன்னும் அவனைக் காணவில்லை. ஆச்சரியம்தான். காலம் தவறாமை என்பது அவன் மறுபெயர் என்று கூட சொல்லலாம். அவ்வளவு பஞ்சுவாலிட்டு இதில் மட்டுமல்ல. எந்த நற்குணத்திற்கும் சொந்தக்காரன் அவன். முக்கியமாக எளிமை. தான் ஒரு சிறந்த ஆர்க்கிடெக்ட்