Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal
Oru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal
Oru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal
Ebook543 pages6 hours

Oru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

Jayakanthan (24 April 1934 – 8 April 2015), popularly known as JK, was an Indian writer, journalist, orator, film-maker, critic and activist. Born in Cuddalore, he dropped out of school at an early age and went to Madras, where he joined the Communist Party of India. In a career spanning six decades, he authored around 40 novels, 200 short stories, APART from two autobiographies. Outside literature, he made two films. In addition, four of his other novels were adapted into films by others.

Jayakanthan's literary honours include Jnanpith and Sahitya Akademi awards. He was also a recipient of Padma Bhushan (2009), India's third-highest civilian honour, the Soviet Land Nehru Award (1978), and the Russian government's Order of Friendship (2011)

Jayakanthan wrote his first short story for a Tamil magazine titled Sowbakiyavathi, which got it published in 1953. Following early success, Jayakanthan started writing for mainstream magazines such as Ananda Vikatan, Kumudam and Dinamani Kadir, who published a number of short-stories particularly in the 1960s. In 1964, Jayakanthan entered films by co-producing and directing a venture titled Unnaipol Oruvan, based on his novel. The film focussed on the plight of slum-dwellers. Although a commercial failure, it won the President's Certificate of Merit for the Third Best Feature Film in 1965. The following year he made another film based on his namesake novel Yaarukkaga Azhudhaan which had Nagesh playing the lead role. His novel Sila Nerangalil Sila Manithargal (1970) won him the Sahitya Akademi Award (for Tamil) in 1972. Later this was adapted into a film of the same name by A.Bhimsingh, which won a National Film Award. Promoted by the film's success, Bhimsingh made one more film tilted Oru Nadigai Naadagam Paarkiral, based on his namesake novel.

In 2008, Ravisubramaniyan made a documentary film on Jayakanthan, the second of its kind, and was produced by Ilaiyaraja.



https://en.wikipedia.org/wiki/Jayakanthan
Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580103904710
Oru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal

Read more from Jayakanthan

Related to Oru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal

Related ebooks

Reviews for Oru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal - Jayakanthan

    http://www.pustaka.co.in

    ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்

    Oru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal

    Author:

    ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    முன்னுரை

    அன்புள்ள வாசகருக்கு,

    உங்களை நான் அறிந்ததைவிடவும் சிறப்பாக என்னை நீங்கள் அறிவீர்கள். உங்களைப் பற்றி நான் அறிவது ஒரு பொது அறிவே ஆகும். என்னைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது உங்களது சிறப்பான ஞான மேன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. உங்களில் பலர் நேற்று இருந்தவர்கள்; இன்று பெருகி நிலைப்பவர்கள்; நாளை பிறக்கப் போகிறவர்கள். உங்களின் இந்தத் திரிகால மேன்மையின் மீது நம்பிக்கை வைத்தே எனது இயக்கம் இங்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கும் எனக்கும் இடையே புரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கலாம்; ஆனால் பொய்யான விஷயங்கள் என்று ஒன்றும் நம்மிடையே கிடையாது.

    இந்த எனது நாற்பதாண்டு வாழ்க்கையில் ஓர் பத்தாண்டுகளுக்கும் குறைவாகவே எனது பெற்றோர்க்குப் பிள்ளையாக நான் வாழ்ந்திருப்பேன். அதன் பிறகு என் வாழ்க்கையில் நேர்ந்தனவற்றையெல்லாம் தொகுத்து சுயசரிதை எழுதும் நோக்கம் எனக்கில்லை. ஆயினும் நான் எழுதுவதெல்லாம் சுயசரிதம் போல் அமைந்து போகிறது. எனவேதான் ஒவ்வொரு பகுதியாக என்னை நான் பார்க்கிறேன். அதன் மூலம் என்னை அல்லாமல் எனது அனுபவங்களை நான் மறுதரிசனம் கொள்கிறேன். இந்த அரசியல் அனுபவங்களின் போது எனக்குப் பரிச்சயமான பிற ஈடுபாடுகளை, சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை, காதல்களை, மோதல்களை, இழப்புகளை, சாதனைகளைப் பற்றிய விவரங்களைத் தவிர்த்தே எழுதியிருக்கிறேன். அவ்விதம் தவிர்க்காதிருந்தால் இதன் முனைப்பு திரிபுற்று கதைபோல் ஆகியிருக்கும்.

    ஆனால் எப்போதுமே நான் என்னை எனது காலத்தின் - எனது வாழ்க்கையின் - எனது கதையின் ‘பற்றற்ற நாயகன்’ என்ற பாத்திரமாகவே சுயதரிசனம் பெற்றிருக்கிறேன். அதற்குக் காரணம் ஒரு சித்தாந்தத்தின் புத்திரனாக என்னை நானே வரித்துக் கொண்டுவிட்டது தான். கம்யூனிஸ்ட் கட்சியே எனது ஞானத் தந்தை ஆயிற்று. விதிவசமாய் ஒரு ஞானத் தந்தை ‘அஞ்ஞானி’யாகிற பொழுது ஒரு ஞான புத்திரன் அந்த அஞ்ஞானத்தையும் சுவீகரித்துக்கொள்ள முடியாது, என்பது பெறப்படுமேயானால் எனது கடமை உணர்ச்சியின் காரணமாக கம்யூனிஸ்ட்களை நான் விமர்சித்திருக்கிறேன் என்பது தெளிவாகும். அது பகைமையினாலோ பந்தமற்ற காரணத்தினாலோ அல்ல என்பதை நீங்களே அறியலாம். எனது மரியாதைக்குரிய கம்யூனிஸ்ட்களும் என்னைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்; கட்சியின் அதிகார பூர்வமான ஏட்டிலேயே விமர்சித்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில்கூட விமர்சித்திருக்கிறார்கள்.

    ஆனால் ‘அவற்றை நான் செய்தேன்’ என்று சில ஆண்டுகள் கழித்துப் பெருமையோடு பிரகடனம் செய்யவோ, பதிவு செய்யவோ அங்கு ஒரு நபர் இல்லை என்பதற்காக அந்த விமர்சனங்களை அடிப்படை அற்றவை என்று நான் ஒதுக்கவில்லை. கம்யூனிஸ்டுகளின் மீதோ அவ்வியக்கத்தின் மீதோ உள்ள எனது நம்பிக்கை என்றும் தளர்ச்சியடைந்ததில்லை.

    மேலும், அவர்களின் விமர்சனங்கள் எனக்கு உதவின. எனது நிலைகளை நான் உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், நானே மறந்து போகக்கூடிய ஒரு சூழ்நிலையில் அந்த மகத்தான கம்யூனிஸ்ட் உறவுகளை மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் அந்த ‘ஆத்திர மூட்டல்’கள் என்னை எச்சரித்து உதவின.

    கொடுமைக்காரக் கணவனிடம் சிக்கிக் கொண்டு, தந்தையிடம் வாதாடும் ஓர் அன்பு மகனின் மீது மனம் கரையும் அன்பு வைத்திருக்கிற அன்னைமார் மாதிரி என் மீது நம்பிக்கையும் அபிமானமும் கொண்ட பல தோழர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் எனக்கு உண்டு. ஆனாலும் அவர்கள் ‘தாலி’ கட்டிக் கொண்ட மெஜாரிட்டித் ‘தலைமை’க்குப் பதிவிரதையாக வாழ்ந்தனர் என்பது எனக்கும் பெருமை தருகிற விஷயம்தான். கட்சிக் கட்டுப்பாட்டை மீறுகிற எந்தக் கம்யூனிஸ்ட்டோடும் எனக்கு நல்லுறவு இருந்ததில்லை.

    கம்யூனிஸ்டுக் கட்சியின் கதவுகள் எனக்கு எப்போதும் திறந்தே வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நான் நன்றியோடும் மகிழ்ச்சியோடும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அது சிலருக்கு நிர்த்தாரணமாய் அடைக்கப்பட வேண்டும் என்பதே என் அபிலாஷை!

    ஒரு தந்தை தன் மகன் விஷயத்தில் காரணமற்றுக் கொடுமைக்காரனாவது போல் கம்யூனிஸ்ட் கட்சி பலர் விஷயத்தில் ‘தவறா’ன, மிகத் தவறான நிலைகளை மேற்கொண்டது என்று இவ்வளவு காலத்துக்குப் பிறகு நான் கூறுவது துஷ்பிரசார நோக்கத்தினால் அல்ல எனினும் எந்தத் தனிமனிதரையும்விட இந்த இயக்கம் மகத்தானது என்பதை நான் அறிவேன்.

    சரி, சரி. அதெல்லாம் இருக்கட்டும். என் கதையும் ஓர் இடைக்காலத்திற்கு வந்து விட்டது. இனி என்ன செய்ய வேண்டும்? இப்போது உள்ள நமது சமூகச் சூழ்நிலை என்ன? உலகம் நம்மைக் கடந்து எவ்வளவோ தூரம் முன்னேறி இருப்பினும் நம்மோடு மிக நெருக்கமாக உறவாடி, இந்த நிமிஷமே உலக அளவில் நம்மையும் சேர்த்துக் கொள்ளுகிற நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி இருப்பது எதனால்?

    தியாகமும் ஞானமும் படைத்த தமது சுதந்திரப் போராட்ட வீரர்களும், சோஷலிஸச் சித்தாந்திகளும் ஒன்றுபட்டு ஒரு புதிய உலகத்தை வார்க்க வேண்டிய தருணம் இன்னும் இங்கு வாய்க்கவில்லையா என்றெல்லாம் ஏங்கித் தவிப்பதே ஓர் இலக்கிய இதயம். இந்த ஏக்கத்தின் பரிபாஷைப் புலம்பலே எனது கதைகள். எனவேதான் எந்தத் துறையில் என்னைப் பிரஷ்டனாகக் கருதினாலும் இலக்கியச் சந்திதானத்தில் சங்கரருக்கு வாய்த்த சண்டாளன் மாதிரி நானே குருவாகி நிற்பேன். இது என் விருப்பமன்று; விதி.

    நேர்மையும் அஞ்சாமையும் எல்லாராலும் புகழப்படுகிறது. அதை நம்பி ஒருவன் நேர்மையோடும் அஞ்சாமையோடும் வாழ்வது, எத்தகு புயல்களை உருவாக்கும் என்பதை எனது பயணத்தின் ஒவ்வொரு மைல் கல்லிலும் நான் ‘மார்க்’ பண்ணியிருக்கிறேன். முப்பதாண்டுக்கால உலக அரசியல் பிரக்ஞை எனக்கிருக்கிறது. மூவாயிரமாண்டு கலாசாரப் பின்னணியும் எனக்கு உண்டு. கால் நூற்றாண்டுக் காலத் தமிழ் இலக்கிய வரலாறு எனது பணியால் பெருமையுறுகிறது. இதை நான் உணர்வது எனது தலைக்கனம் என்று கணிப்பவர்களின் தலைகளில் சூன்யமல்லாமல் வேறு என்ன குடி இருக்கும்?

    எனக்கு இந்தச் சமூகத்தில் விருதுகளும், பரிசுகளும், மரியாதைகளும் ஏராளமாகக் கிடைப்பதில் நான் ஒருபோதும் திருப்தியடைய முடியாது. எனது ‘கம்யூனிஸ்ட் நேர்மை’ பல சமயங்களில் அவற்றைத் துச்சமாக மதித்து இந்தச் சமூகப் பெரியார்களை அவமதிக்கவே தூண்டுகிறது.

    நான் எப்போதும் என்னை ஒரு கம்யூனிஸ்டு முழுநேர ஊழியனாகத்தான் மனத்துள் பாவிக்கிறேன். அந்த பாவனை மிகுகிறபோது இந்தச் சுரண்டல் சமூகத்தோடு எனக்குள்ள ‘பொய்யுறவை’க்கூட என் நெஞ்சு பொறுக்கமாட்டாது பொருமுகிறது!

    என்னதான் ஒருவன் மாபெரும் எழுத்தாளனானாலும் எந்த ஒரு தனிமனிதரின் ஆத்ம திருப்தியும் அர்த்தமுடையதாகாது. நான் அப்படிப்பட்ட தனி மனிதனும் அல்லன். இன்றைய வியாபாரச் சமூகம் ஒரு போதும் என்னை விழுங்க இயலாது. ஆனால் அது என்னை விழுங்க முயன்றதுண்டு. ஒவ்வொரு முறையும் அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு நான் வெளிப்போந்ததும் உண்டு. ஆனாலும் இந்த நவீன வியாபார வேசைக்குத்தான் எத்தனை வயிறுகள்! எல்லாவற்றையும் கிழிக்க என் ஒருவனால் ஆகுமா? ஆகும்... ஆகும்! அதற்கு நாளும் ஆகும். அப்பொழுது ஒருவன் என்பது ஒரு பெரு நெருப்பின் பொறி என்றும் ஒரு மகா சமுத்திரத்தின் துளி என்றும் உலகுக்குத் தெரியவரும்.

    எவர் எவரிடமிருந்து இந்த இயல்புகளையெல்லாம் அதிபாலியப்பருவத்தில் கற்றேனோ, அவர்களை விட்டும் மிக விரைவில் நான் பிரிந்தேன். அவர்களை நான் எனது வர்க்க எதிரிகளின் கூடாரத்திலும் கண்டேன். அவர்களையும் வருத்திக் குலைத்து அவமதித்த சுரண்டல் சமூகத்தின் கைகளில் ஆட்பட மறுத்தேன்; அவர்கள் மத்தியில் மனிதாபிமானத்துடன், இலக்கிய வீறுடன் நான் நடத்திய போராட்டத்தின் DOCUMENT இது.

    இந்தப் போராட்டம் இதுவரை நான்கு ரவுண்டுகள் முடிந்திருக்கிறது. இந்த நான்கு ரவுண்டுகளிலும் எனது அணியே பாயிண்டுகளைக் குவித்திருக்கிறது!

    எனது எதிரி நான் பிறக்கும்போது உச்சத்தில் இருந்தான். கருவில் நான் உதித்த காலத்திலேயே அந்தக் கம்ஸன் பூதேவியின் கர்ப்பம் கலங்கி, ஆகாசமே சிதறி வீழ்கிற மாதிரி, சினந்து கொக்கரித்தான். எனது கோகுலம் சூறையாடப்பட்டது. எனது அன்னையரும் தந்தையரும் சிறைப்பட்டிருந்தனர். அவர்கள் அச்சத்தின் நடுவே என் மீது அன்பும் காட்டினர்.

    நான் ஒரு பக்கம் உயிர் வாழ்க்கைக்குப் போராடிக் கொண்டும் மற்றோர் பக்கம் லீலாவினோதங்கள்’ புரிந்து கொண்டும் வளர்ந்தேன். ஒன்று எனது அரசியல், மற்றொன்று எனது இலக்கியம். இன்று உலகத்திற்குக் கம்ச பயம் முற்றாகத் தீர்ந்தது. ஆனால் கௌரவர்கள் கொட்டம் அடங்கவில்லை. கெளரவர்களை விடக் கம்சனே கொடியவன். ஏனெனில் அவன் மூல வித்தையே நாசம் செய்ய மூளைத்தவன்.

    உலகத்தை அந்த ஆபத்திலிருந்து காத்து ரட்சித்து உலகத் தொழிலாளி வர்க்கம் பாஞ்சசன்யத்தை முழக்கிச் சங்க நாதம் செய்து விட்டது!

    இந்தச் சித்திரத்தை எனக்குத் தீட்டிக் காட்டியவர் நமது ஞானகுரு மகாகவி பாரதியே ஆவார். அவர்தான் முதலில் ருஷ்யாவைப் புகழ்ந்தது மாத்திர மன்னியில் அது கலியை அழித்ததும் கிருதயுகத்தைக் கொணர்ந்ததுமான கிருஷ்ணதத்துவம் என்று சொன்னார்.

    அந்த ஓவியத்தின் மேன்மையும் அழகும் ஒரு கம்யூனிஸ்டான, இந்தியனான, தமிழனான எனக்குப் புரிகிற மாதிரி உலகில் எவருக்கும் புரிய முடியாது. ஆனால் நாம் இதனைப் புரிய வைக்க முடியும் என்று இமயம் போல் நான் நம்புகிறேன்.

    இலக்கியமும் அரசியலும் இணைகிற பொழுது இப்படிப்பட்ட கவி மேன்மையில் சத்தியங்கள் வெளிப்படும். எந்த அரசியலில் இருந்து இலக்கியமும் கவிதையும் வெளி வராதோ அது மக்களுக்கு உகந்தது அல்ல. எந்த அரசியலிலிருந்து பொய்க் கவிதையும் புழுத்த இலக்கியமும் புறப்படுமோ அதுவே நான் தாக்கி அழிக்க வேண்டிய இலக்கு.

    அவ்விதம் நேரும் காலையில் ஆசார்ய துரோணரை எதிர்த்து நான் திருஷ்டத்யும்னனை அனுப்புவேன்; பிதாமகர் பீஷ்மரை எதிர்த்துச் சிகண்டியை அனுப்புவேன். இறுதி விதி அறிந்து இடையில் மனிதாபிமானத்தோடு தூதும் போவேன். வீமனுக்குத் தொடை தட்டியும் காண்பிப்பேன். எனது அன்பர்களின் நலனைக் காக்கும் பொருட்டு எதிரியின் அஸ்திரங்களை எல்லாம் ‘வஞ்சக’மாகவும் அபகரிப்பேன்.

    என்னை ஒதுக்கிப் புறக்கணித்துவிட்டு இந்தப் பஞ்சவர்கள் சூதில் போய்ப் பணயப்பட்டாலும் எனது அன்னை மானம் குலைந்து மனங்குமுறிக் கதறினால் அழைப்பின்றியே அங்கு நான் ஓடோடி வருவேன்.

    ‘சேலை திருடிய சோரன்’ என்றும் எனக்குப் பெயர் உண்டு.

    இலக்கியமும் அரசியலும் இணைந்ததன் விளைவே இந்த இதிகாசம்!

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திரத்தை வரைவதற்கான தகுதியோ வல்லமையோ எனக்கில்லை. ஆனால் கிருஷ்ணதத்துவத்தையும் கிருஷ்ண சரிதத்தையும் என்னால் புதுமை செய்ய முடியும். ‘எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்’ என்றதன் சூட்சுமப் பொருள் இதுதான்.

    இந்திய அரசியல் அரங்கில் ஒரு மகாபாரதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் ஆயுதம் எடுப்பதில்லை என்று நான் விரதம் கொண்டிருக்கிறேன். ஆனால் சாரத்தியம் செய்வேன். அதுவே என் இலக்கியப்பணி.

    இந்தப் பூமியின் மேல் தர்மமே வெல்லும் - என்கிற நம்பிக்கையை இதுவரை வென்ற தர்மங்களின் பட்டியலிலிருந்து எவரும் சுலபமாகப் பெறலாம்.

    இந்த எனது சிறிய ஆயுளில் எவ்வளவு கேவலமான சதிகளையும் கொடுமைகளையும் ‘அசுரர்’கள் புரிந்துள்ளனர்!

    காந்திஜியைக் கொன்றதிலிருந்து சிலி நாட்டு அலெண்டே கொலை வரை நடத்துகிற அந்தச் சைத்தான் என்ன சாமான்யமானதா?

    எனது மக்களின் மனத்தையும் அறிவையும், மேன்மையையும், மானத்தையும் வீரத்தையும் விலைபேசி வீணடிக்கிற பிடாரிக் கூட்டத்தின் தொகை என்ன குறைவா?

    எனினும் மனிதரின் தர்மம் வலிது. கடவுள் நம்பிக்கை முற்றிலும் அற்றுப்போகிற காலத்திலும் கடவுளர் மனிதராக வந்து அவதரிப்பர்! அவர்களே மகா புருஷர்களாவர். அவர்கள் சித்தமும் சிந்தனையும் நம்மைக் காக்குமாறு உலகில் மனிதர் உயர்ந்து நிற்கின்றனர். நாமும் உயர்தல் வேண்டும். அதுவே நமக்கு உய்வைத் தரும்.

    - த. ஜெயகாந்தன்

    இந்தியாவின் சுதந்திரத்துக்காகத்

    தங்களை அர்ப்பணித்துக் கொண்ட

    உண்மையான காந்தியவாதிகளுக்கும்

    இந்தியாவில் சோஷலிசத்துக்காகத் தங்களை

    அர்ப்பணித்துக் கொள்ளப் போகிற

    உண்மையான மார்க்ஸியவாதிகளுக்கும்

    இந்த நூல் சமர்ப்பணம்.

    ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்

    ஈச்வரோ ரக்ஷது!

    என்னைத் தமது பத்திரிகையில் எழுதச் சொல்லி விட்டு, ‘கடவுள் காப்பாற்றுவார்’ என்கிறார் ‘துக்ளக்’ ஆசிரியர். துக்ளக் பத்திரிகையில் எழுத ஆரம்பிக்கும்போது நானும் அதே நினைப்புடன் ஆரம்பிக்கிறேன். கடவுள் நம் எல்லாரையுமே காப்பாற்றட்டும்.

    நான் என்னென்ன எழுதப் போகிறேனோ? எவர் எவரிடம் சிக்கிக் கொண்டு அறுபடப் போகிறேனோ என்றும் பயமாக இருக்கிறது. எல்லாரும் எதிர்பார்க்கிற மாதிரியே இந்தப் பக்கங்களில் நான் எழுதப்போவதை மிக ஆவலோடு நானும் எதிர்பார்க்கிறேன் என்ற உண்மையை ஒப்புக் கொள்கிறேன்.

    நான் எனது அரசியல் அனுபவங்களையும் எனது கருத்துக்களையும் ஒளிவு மறைவு இல்லாமல், சுயநோக்கில் எழுதுகிற இந்தப் பக்கங்களில் வருகிற கருத்து யாரை உறுத்தினாலும் அது யாருக்கும் ஆதரவாக நான் செய்கிற பிரச்சாரமாகாது.

    ஓர் அரசியல் கட்சிக்குச் சார்பாகக் கொடி தூக்கிப் பிரச்சாரம் செய்வது எனக்குப் பழக்கப்பட்ட காரியம்தான். ஆனால் இப்போது நான் அந்த நிலையில் இல்லை. அதற்கு என்ன காரணம் என்று இப்போதே சொல்லி விட்டால் இந்தக் கட்டுரைத் தொடருக்கு விஷயம் இல்லாமல் போய் விடும்.

    இப்போது எனக்கு அரசியலில் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. எப்போதுதான் இருந்தது என்பது வேறு விஷயம். சில மாதங்களுக்கு முன்னால் வரைக்கும் இருந்த எதுவோ - அதுகூட இப்போது இல்லை. அதனால் நடந்தவையெல்லாம், நான் நடத்திய சொற்பொழிவுகள் எல்லாம் கடந்த கால நினைவுகளாக, மிகவும் ரசமுள்ள நிகழ்ச்சிகளாக நினைவு கொள்ளத்தக்க தொலைவிலே போய் நிற்கின்றன. ஒன்று மட்டும் மிகத் தெளிவு, நான் அரசியலையோ, அல்லது அரசியல் என்னையோ கைவிட்டுவிட்ட நிலைமை மட்டும் மிகமிக நிஜமானது. கடவுள் என்னை எப்படியோ காப்பாற்றியிருக்கிறார்!

    எனக்கு உண்மையான அரசியலோடும், அரசியல் தலைவர்களோடும், சாதாரணத் தொண்டர்களோடும் ஏற்பட்ட உறவும் நட்பும் தோழமையும் மிக உயர்வானவை; இனியவை; பயனுள்ளவை; நிரந்தரமானவை.

    எனது அரசியல் சம்பந்தத்துக்காக நான் துளிக்கூட வருத்தப்பட வேண்டிய அவசியம் எனக்கில்லை. மாறாக நான் நினைத்து நினைத்து மகிழவும், கம்பீரமாகப் பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்கவும், அனுபவங்களைப் பெறவும், அவற்றால் நான் வளரவுமான வாய்ப்புக்களே எனது அரசியல் அனுபவங்களின் மூலம் எனக்குக் கிட்டியுள்ளன.

    இந்தப் பகுதியில் நான் எழுதுகிற விஷயங்களை எந்தக் கட்சியைச் சேர்ந்தவராயினும் பயனுறப் படிக்க வேண்டும் என்ற நோக்கம் தவிர, கொள்கைப் பிரச்சாரம் செய்யும் நோக்கம் எனக்கில்லை. அதாவது இப்போது இல்லை. கூடிய வரை எனது நோக்கங்களுக்கு மாறாக நான் செயல்பட்டு விடாமல் - அதாவது இந்தப் பகுதியில் எழுதிவிடாமல் - கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இக்கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கிறேன்.

    1

    அப்போது இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்தது. எனக்குப் பத்து வயதோ, அதற்கும் பார்வோ - சரியாக நினைவில்லை. அடிக்கடி அபாயச் சங்கு அலறும். எப்போது குண்டு விழும் என்று சிறுவர்கனான நானும் எனது நண்பர்களும் ஆவலாக எதிர்பார்ப்போம். ‘குண்டு விழுந்தால் என்ன? அது பெரிய பட்டாசு மாதிரி வெடிக்கும்’ என்று எனது விளையாட்டுத் தோழர்களுக்கு விளக்கம் சொல்லி அவர்களையும் அதை எதிர்பார்க்க வைக்கும் விதத்தில் கற்பனையான கதைகள் சொல்லுவேன் நான்.

    ஆனால் அது பற்றிய பயம் பெரியவர்களைப் பிடித்தாட்டுவதைக் கண்டு எனக்கு மரணபயம் ஏற்பட்டது. உலகமே மரண பயத்தில் அலறிக் கொண்டிருந்த காலம் அது. அப்போதும்கூட எல்லா இடிபாடுகளின் மத்தியிலும் நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்ற சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கையும் இருந்தது எனக்கு.

    ஜப்பான்காரன் என்ற வார்த்தையே வெறுப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியது எனக்கு. ஜெர்மானியர்கள் என்று பார்த்து எனக்குப் பின்னாளில்தான் தெரிந்தது. ஆனாலும் ஹிட்லரை எனக்குத் தெரிந்திருந்தது. அவன் ஜெர்மானியன் என்று தெரிந்தபோது ஜெர்மனி என்கிற வார்த்தையும் எனக்குப் பிடிக்காது போயிற்று.

    அந்த ஜெர்மானியர்களும், ஜப்பானியர்களும் இந்த நாடகத்து வளைத்து வந்து நம் ஊரில்தான் கைகுலுக்கிக் கொள்ளப் போகிறார்கள் என்று பையன்கள் எனக்கு ‘உலக தான்’ சுற்றுத் தருவார்கள்.

    அந்தக் காலத்தில் ஹிட்லர் உலகப் பிரபலமான ஸ்டார்! எனினும் நான் ஹிட்லரின் எனிமி! பல பையன்கள் ஹிட்லர் கட்சி. அதாவது ஹிட்லர் ஒரு மாவீரன். உலகையே நடுங்க வைக்கிறானே என்றெல்லாம் புகழ்ந்து, வெள்ளைக்காரர்களை அவன் வந்து துவம்சம் செய்யப் போகிறான் என்றெல்லாம் அவர்கள் பேசுவார்கள் அவர்கள் பேசுவார்கள்.

    எனக்கு ஹிட்லரை அப்போது பிடிக்காததற்குக் காரணம்; அவன் மீசை எனக்குப் பிடிக்காததே! என் தந்தை அதே மாதிரி மீசை வைத்திருப்பார். எனக்கு அவரையும் பிடிக்காது அந்தக் காலத்தில், ஹிட்லரின் மீசையை அப்பா வைத்திருந்ததால் அப்பாவைப் பிடிக்கவில்லையா, அல்லது அப்பாவின் மீசையை ஹிட்லர் வைத்திருந்ததால் ஹிட்லரைப் பிடிக்கவில்லையா என்று தெளிவாகப் புரியவில்லை. ஆக, ‘சர்வாதிகாரிகளை’ எனக்குப் பிடிக்காது போலும்!

    அக்காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த வீர புருஷன் மகா ஸ்டாலின். ஸ்டாலினுடைய ‘மீசை’க்கு முன்னால் அந்த ஹிட்லர் ‘மீசை’ தோற்றுப்போகும் என்று நான் சிறுவர்களுடன் வாதாடுவேன்.

    அப்போதெல்லாம் நான் வழிபடுகிற தெய்வம் எங்கள் வீட்டுக் கூடத்தில் பெரிதாக மாட்டியிருந்த மகாத்மா காந்தியின் படம்தான். காந்தி ஒரு மனிதர் என்று தெரிய எனக்கு ரொம்ப நாளாயிற்று. ராமர், கிருஷ்ணர், பாரதமாதா மாதிரி காந்தியும் ஒரு கடவுள் என்று நம்பியிருந்தேன். எங்கள் ஊர்க் கோயில் கோபுரத்தில் அவரது சிலை இருந்தது இதற்கு ஒரு காரணம் என்று தோன்றுகிறது.

    அவர் நம்மை மாதிரி நடமாடுகிற ஒரு மனிதர்தான்; அவர் தெய்வத்துக்குச் சமமான மகான் என்றெல்லாம் பின்னால் தெரிந்தது.

    காந்திஜி எங்கள் ஊருக்கு வந்தார். நான் போய் தரிசனம் செய்தேன். நான் என்னை ஒரு காந்தியத் தொண்டன் என்று ஏனோ நினைத்துக்கொண்டேன்.

    பூகோள ஞானமோ, தேசம் என்கிற உணர்வோ, அரசியல் அறிவோ எதுவுமே அற்ற ஒரு பருவத்தில் இந்தக் காலத்துப் பிள்ளைகள் ஏதாவது ஒரு சினிமா நடிகனுக்குப் பின்னால் தங்களை அணி சேர்த்துக் கொள்வது மாதிரி, அந்தக் காலச் சூழ்நிலையில் அந்தக் காலத்துக்கு ஏற்ப நான் என்னை மகாத்மாகாந்தியின் தொண்டர்களில் ஒருவனாய்ச் சேர்த்துக் கொண்டேன். அறியாமையும் பேதைமையும்கூட அக்காலத்தில் சற்றுத் தரமானவையாக இருந்திருக்கின்றன போலும்.

    பாரதியார் பாடல்கள் அப்போது தடை செய்யப்பட்டிருந்ததோ, பள்ளிக்கூடத்தில் அனுமதிக்கப்படாதிருந்ததோ? நினைவில்லை. எங்கள் வீட்டில் ஒரு புத்தகம் இருந்தது. அதை ரகசியமாக வைத்துக்கொண்டு எல்லாப் பாடல்களையும் நான் மனனம் பண்ணியிருக்கிறேன். சத்தம் போட்டுப் பாடினால் ‘போலீஸ்காரன் பிடித்துக்கொண்டு போய் விடுவான்’ என்று பயமுறுத்துவார்கள்’ பையன்களைச் சேர்த்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் எதிரே போய் நின்று ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று கூவிவிட்டு நாலாபுறமும் சிதறி ஓடுவிடுவதில் ஒரு சந்தோஷம். இப்படிப் பல தடவை செய்திருக்கிறேன்.

    நான் இருந்தது அக்ரகாரத்தில். என் சிநேகிதர்களும் பிராமணப் பையன்கள். எங்கள் தெருக்கோடியில் சாரங்க பாணி என்றொரு பையன் இருந்தான். அவனும் நானும் என் அத்தை நடத்திக்கொண்டிருந்த திண்ணைப் பள்ளிக் கடத்திலும், அப்புறம் மூன்றாம் வகுப்பில் ஒரு முஸ்லிம் பள்ளியிலும் வகுப்புத் தோழர்கள் விளையாட்டுத் தோழர்கள். அவனுக்குத் தாய் கிடையாது. அந்த வயதில் தினந்தோறும் காலையில் விளக்கேற்றித் தாயின் படத்தையோ நினைவையோ அவன் மிகுந்த பக்தி சிரத்தையோடு வழிபடுவான்; மிகவும் துடிப்பாக இருப்பான்.

    அந்த முஸ்லிம் பள்ளியில் ஹெட்மாஸ்டராக இருந்தவர் ஜஸ்டிஸ் கட்சியையோ சுயமரியாதை இயக்கத்தையோ சேர்ந்தவர். மிகத் தீவிரமாக யுத்த ஆதரவுப் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த காலம் அது.

    பள்ளிக்கூடத்தில் நாடகம் போட்டார்கள். அதில் சாரங்கபாணியையும், என்னையும் தேர்ந்து எங்கள் இருவரையும் பரிசீலித்த போது என்னைவிட அவன் துடிப்பாகப் பேசியதனால் அவனுக்கு வேஷம் கிடைத்தது. எனக்குச் சந்தோஷமாக இருந்தது. அப்புறம் ஒரு தடவை பள்ளிக் கூடத்தில் பேச்சுப் போட்டிக்குப் பேர் கொடுத்து விட்டு மேடையில் போய் நின்று பேச வராமல் - ஒன்றுமே பேசாமல் ‘இத்துடன் முடித்துக் கொள்கிறேன்’ என்று நான் சொல்ல, எல்லோரும் சிரித்தது எதற்கு என்று புரியாமல் நான் விழித்துக் கொண்டிருக்கும்போது எனக்குப் பிறகு மேடை ஏறிய சாரங்கபாணி மிகுந்த ஆர்ப்பாட்டத்தோடு ‘வீர முழக்கம்’ செய்ததைப் பார்த்து நானும் கைதட்டினேன்.

    சில நாட்களுக்குப் பிறகு கடைத்தெருவில் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள திடலில் ஒரு பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் பன்னிரண்டு வயது நிரம்பாத அந்தச் சிறுவன் ஏறி நின்று பிராமணர்களையும், நமது புராணங்களிலுள்ள ஆபாசங்களையும், கடவுள்களையும் ‘கிழி கிழி’ என்று கிழிப்பதை வாயைப் பிளந்து கொண்டு நானும் பார்த்தேன். நல்லவேளை! நான் அதிலிருந்து தப்பினேன்.

    அவன் எங்கள் அக்ரஹாரத்தின் வழியாகத்தான் வீட்டுக்குப் போகவேண்டும். அவன் போகும்போது நாங்கள் திண்ணையிலுள்ள அறையில் ஒளிந்து கொண்டு சாரங்க பாணி ஒழிக! என்று கூச்சலிடுவோம். அவனோ மார்பை விரைத்துக்கொண்டு தைரியமாக நடந்து போவான்.

    நாமும் அவனை மாதிரி ஏன் பேச முடியவில்லை என்று மனம் புழுங்கினேன். அவன் பேசிய கருத்துக்கள் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை. அதற்குச் சரியான பதில்களும் என் மனத்தில் தோன்றின. ஒரு மேடை போட்டு அவனுக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்றெல்லாம் துடித்தேன்.

    பல சமயம் நான் அவன் வீட்டில் போய்க் காரசாரமாக விவாதம் புரிந்தேன். எனது நண்பர்களான பிராமணச் சிறுவர்களையெல்லாம் கூட்டி வைத்துக்கொண்டு அக்ரஹார வீட்டுத் திண்ணைகளில் நாங்கள் ‘பொதுக் கூட்டம்’ போட்டோம். அதில் நான் பேசி இருக்கிறேன்.

    கொஞ்ச நாட்களில் அந்த சாரங்கபாணியின் பேர் ஊரெல்லாம் பரவிற்று. நாங்கள் அக்ரஹாரத்துக்குள்ளேயே ஆவேசமாகக் குதித்துக் கொண்டிருந்தோம்.

    அந்தச் சாரங்கபாணிதான், இன்றைய திராவிடக் கழகப் பிரமுகரும், விடுதலை நாளேட்டின் ஆசிரியருமான எனது நண்பர் திரு. கி. வீரமணி அவர்கள்.

    1946ல் ஒரு தேர்தல் வந்தது. காங்கிரசுக்கு மஞ்சள் பெட்டி எங்கள் ஊரில் காங்கிரஸை எதிர்த்து நின்றவருக்குப் பச்சைப் பெட்டி.

    நாமும் மேடையில் ஏறி, காங்கிரசுக்கு ஆதரவாகவும் வெள்ளைக்காரனை எதிர்த்தும், இந்தியா சுதந்திரம் பெற்றுத் தீரவேண்டிய அவசியத்தையும், நியாயத்தையும் எடுத்துப் பேச வேண்டும் என்கிற ஆசையும், பேச முடியும் என்கிற தைரியமும் எனக்கு அப்போது ஏற்பட்டிருந்தன!

    எங்கள் குடும்பத்தில் பலர் அரசியல் சம்பந்தப்பட்டிருந்ததால் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்திற்கு நான் போனபோது என்னை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டு பாட்ஜ்கள், நோட்டீஸ்கள் முதலியன கொடுத்து விநியோகம் செய்யச் சொன்னார்கள்.

    அவற்றை விநியோகம் செய்யப்போன இடங்களில் சிறுபையனாக இருக்கும் என் வாயைக் கிளறிப் பலரும் என்னோடு விவாதம் செய்வார்கள். நானும் பதிலுக்கு ஆவேசமாகப் பேசுவேன். சில சமயங்களில் கோபம்கூட வந்துவிடும் எனக்கு எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் எதிர்த்தும் பழித்தும் பேசிவிடுவேன். 1946இல் கூட ‘இந்தியாவுக்காவது சுதந்திரமாவது’ என்று கேலி செய்து சிரித்தவர்கள் இருந்திருக்கிறார்கள். எனக்குப் கோபம் வராதா, என்ன?

    நான் அவர்களோடு காரசாரமாக விவாதம் செய்தும், சண்டை போட்டும், அவர்களை வைதும் எனது அரசியல் ஆர்வத்தையும் அறிவையும் வளர்த்துக் கொண்டேன் என்பது பின்னால் புரிந்தது. கடைத்தெருவுக்குப் போனால் என்னை அழைத்து உட்காரவைத்து வாயைக் கிளறிப் பார்ப்பதில் பல கடைக்காரர்களுக்கு மிக உற்சாகம்.

    அப்போது நான் ஐந்தாம் வகுப்பில் இரண்டாவது வருஷமோ மூன்றாவது வருஷமோ படித்துக் கொண்டிருந்தேன். நான் படித்துக் கொண்டிருந்தது பூராவும் அந்த வகுப்பில் மட்டும்தான். வகுப்பில் வாத்தியார் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுவதற்கு வார்த்தையும் வராது; குரலும் வராது. அரசியலில் இருந்த கவர்ச்சியும், ஆர்வமும், தேசத்தைப்பற்றி இருந்த சிந்தனையும் அறிவும் எனக்குப் பள்ளிக்கூடப் படிப்பில் இல்லை.

    எனது சிந்தனையெல்லாம் - ‘அகிம்சை வழியிலும், சத்தியாக்கிரகத்தின் மூலமும் இந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தை மகாத்மாவால் வெல்ல முடியுமா? பிரிட்டிஷ்காரன் காந்தியைப் பிடித்து ஜெயிலில் வைக்கிற மாதிரி தேசத்தையே விட்டு வேறெங்காவது கொண்டுபோய் விட்டால் இந்தத் தேசம் என்னவாகும்? மிகவும் படித்தவர்கள், பெரிய மனிதர்கள் எல்லாம் ஏன் வெள்ளைக்காரனை விரும்புகிறார்கள்? முஸ்லீம்கள் வேறு பாகிஸ்தான் கேட்கிறார்களே... அப்படியானால் இங்கு இருக்கிற முஸ்லீம்கள் எல்லாம் அங்கே போய் விடுவார்களா? அங்கே இருக்கிற இந்துக்கள் எல்லாம் இங்கே வந்து விடுவார்களா? அப்படி வராமல் அங்கங்கே இருக்கிற ஹிந்துக்களும் முஸ்லிம்களும் அப்படியேதான் இருப்பார்கள் என்றால் எதற்கு பாகிஸ்தான் கேட்கிறார் ஜின்னா? இந்தப் பிரச்னைகள் எல்லாம் எப்படித் தீரும்? சுதந்திரம் எப்போது வரும்?’ என்றெல்லாம் கவலையுடன் யோசித்துக் கொண்டிருப்பவனுக்குப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கிற பழைய சரித்திரமும் பஞ்சாங்கக் கணக்கும் எப்படி புத்தியில் ஏறும்?

    ‘காந்தி - ஜின்னா சந்திப்பு வேண்டும்’ என்று பி.ஸி. ஜோஷி எழுதிய சிறு பிரசுரத்தை அப்போது நான் படிக்க நேர்ந்தது. பி.ஸி. ஜோஷி அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் காரியதரிசி.

    பி.ஸி. ஜோஷியை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். காரணம், அவர் முகம் குழந்தை மாதிரி இருக்கும். காந்தி இன்னா சந்திப்பு வேண்டும் என்ற அந்த நூலில் அவர் எழுதியிருந்த விஷயங்கள் என் அறிவுக்கு ரொம்ப இணக்கமாக இருந்தன. அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட்களைத் துரோகிகள் என்றும், ஆகஸ்டுப் புரட்சியைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்றும், மாஸ்கோ கூலிகள் என்றும், பிரிட்டிஷ்காரனுடன் புத்த ஆதரவு பிரசாரம் செய்ய ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்துவிட்டுச் சிறை மீண்டவர்கள் என்றும், பரவலாக கம்யூனிஸ்ட் எதிர்ப்பு உணர்ச்சி பரவியிருந்தது. எங்கள் குடும்பத்தில் எனது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சிலர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து சிறைக்குப் போயும், வீட்டிலிருந்து வெளியேறியும் இருந்தார்கள். எனக்கு அவர்களை அவதூறாக நினைக்க மனம் வரவில்லை. எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருகிற பல கம்யூனிஸ்டுகள் பழக இனியவர்களாக இருந்தனர்.

    அப்போது கம்யூனிஸ்ட்டுகளின் நிலையையும் அவர்களது கொள்கைகளையும், தேசப்பற்றினையும் விளக்கி பி.ஸி. ஜோஷி மகாத்மாவுக்குக் கடிதங்கள் எழுதியிருந்தார். மகாத்மாவும் ஜோஷிக்குப் பதில் எழுதியிருந்தார்.

    அந்தக் கடிதங்களை ‘காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து’ என்றொரு புத்தகமாக நான் படிக்க நேர்ந்தது. இதன் காரணமாக, கம்யூனிஸ்ட்டுகள் மீது எனக்கொரு அபிமானம் உள்ளுர வளர்ந்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக ‘மஞ்சள் பெட்டியில் வோட்டுப் போடுங்கள்’ என்று பிரசாரம் செய்து கொண்டே கண்ணைப் பறிக்கும் செங்கொடியின்மீது மனத்துள் ஒரு காதலை நான் வளர்த்துக் கொண்டிருந்தேன். அவர்களும் ஹிட்லரின் எனிமிகள் என்பதால் எனக்கு அவர்கள்மீது மிகுந்த அபிமானம் ஏற்பட்டது.

    1946 தேர்தலில் எங்கள் ஊரில் காங்கிரஸின் சார்பாக தேவநாயக ஐயா என்பவர் போட்டியிட்டு வெற்றியடைந்தார். அதற்காக என்னையும் தனிப்பட்ட முறையில் பலர் பாராட்டினார்கள். அப்போதெல்லாம் கூட்டங்களுக்கு ‘மைக்’ கிடையாது. பெரிய தலைவர்கள் கலந்து கொள்கிற மாநாடுகள், மைதானக் கூட்டங்கள் போன்றவற்றுக்குத்தான் மைக் உண்டு. தேர்தல் நாளுக்குள் ‘மெக்கஃபோனி’ல் கத்தி கத்தி எனக்கு தொண்டை கட்டிக்கொண்டு இருமினால் ரத்தம் வர ஆரம்பித்தது. மெக்கஃபோன் வாயில் அழுந்தி அழுந்தி உதடுகளைச் சுற்றிப் புண் வந்துவிட்டது. இவ்வளவுக்கும் பலனாய்ப் பச்சைப் பெட்டி, மண் கவ்வியது; மஞ்சள் பெட்டி பெரு வெற்றி அடைந்திருந்தது.

    அதே காலத்தில், கடலூர் மஞ்சக்குப்பத்தில் தென்னாற்காடு ஜில்லா காங்கிரஸ் ஊழியர் மகாநாடு நடந்தது. அப்போது காங்கிரஸுக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் என்ற பெயரோடு இருந்தவர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் அந்த மகாநாட்டில் கலந்து கொள்வதற்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர்.

    கையில் கதர்க் கொடியுடன் நானும் ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். ‘தேசீய சர்க்கார் வேண்டும். இடைக்கால சர்க்கார் வேண்டும். ‘இந்து - முஸ்லீம் ஒற்றுமை ஓங்குக’ என்றெல்லாம் கோஷம் போட்டுக்கொண்டு பெரிய ஊர்வலமாகக் கம்யூனிஸ்டுகள் வந்து காங்கிரஸ் ஊர்வலத்தில் கலந்து கொண்டது எனக்குப் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

    ஆனால், இது ஏனோ காங்கிரஸ்காரர்களுக்குப் பிடிக்கவில்லை. மகாநாட்டுப் பந்தலில் கம்யூனிஸ்டுகளை விடக் கூடாது. என்று வாசலில் பெரிய ரகளையே நடந்தது. காந்திக்கு ‘ஜே’ போடுகிற, கதர்க் குல்லாயும் கதர்ச் சட்டையும் மணிந்த சில தேசியத் தோழர்கள், கையில் கம்பெடுத்துச் சுழன்றாடிய காட்சியைக் கண்டு நான் திகைத்தேன். பல கம்யூனிஸ்டுகள் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு மண்டை உடைந்ததையும் நான் பார்த்தேன்.

    கம்யூனிஸ்டுகள் - அந்த மகாநாட்டில் கலந்து கொள்கிற முயற்சி தோற்றுப் போயிற்று. மகாநாட்டில் அநுமதிக்கப் படாத கம்யூனிஸ்டுகள் ஓர் ஊர்வலமாகச் சென்று, பெண்ணையாற்று மணலில் பாலத்து நிழலில் கூடிக் கூட்டம் போட்டார்கள். எனக்கு அவர்களிடம் ஒரு பரிதாபம் பிறந்தது. கையிலிருந்த கதர்க்கொடியை யார் கையிலோ கொடுத்து விட்டு தானும் வந்து கம்யூனிஸ்டுகளுடன் அந்தக் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டேன். அவர்கள் என்னென்னவோ பேசினார்கள். ஒவ்வொருவராக எழுந்து - அநேகமாய் வந்திருந்தவர்கள் எல்லாருமே பேசினார்கள். அமைதியாகவும், நிதானமாகவும் இவ்வளவுக்கும் பிறகு அவர்கள் பேசினார்கள். என்ன பேசினார்கள் என்று நினைவில் இல்லை.

    இறுதியில், அந்தக் காலத்தில் கம்யூனிஸ்டுகள் நடத்துகிற நிகழ்ச்சிகளின் முடிவில் பாடப்படும் சர்வ தேசிய கீதம் பாடப்பட்டது. எல்லோரும் எழுந்து நின்று ‘பாஸிஸ எதிர்ப்பு சல்யூட்’டுடன் முஷ்டியைத் தோளுயர்த்தி மடக்கிக் கொண்டு பாடினர். ஒருவர் ஓர் அடி பாட மற்றவர் அனைவரும் தொடர்ந்து பாடுகின்றமுறையில் அந்தப் பாட்டு இருந்ததால், ஏற்கனவே எனக்கும் அந்தப் பாட்டுத் தெரிந்திருந்ததால் நானும் அவர்களுடன் சேர்ந்து மிக உற்சாகத்துடன் மெய் சிலிர்த்துப் பாடினேன்.

    ‘பட்டினிக் கொடுஞ்சிறைக்குள்

    பதறுகின்ற மனிதர்காள்

    பாரில் கடையரே எழுங்கள்!

    வீறு கொண்டு தோழர்காள்!

    அப்போது என் மாமா பி. புருஷோத்தமன் என்பவர் தென்னாற்காடு ஜில்லாவில் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆர்கனைசராக இருந்தார், அதே சமயத்தில் அவர் ஒரு தொழிற்சங்கவாதியும்கூட. விழுப்புரத்தில் ரயில்வே லேபர் யூனியன், கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கில் மிகவும் செயலுடன் இருந்தது. அவர் விழுப்புரத்தில் முழுநேர ஊழியராக இருந்தார்.

    ஐந்தாம் வகுப்போடு நான் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். வயதுக்கு மீறிய அரசியல் சிந்தனையும், வாழ்வில் ஈடுபாடும் இருந்தும்கூட வயதுக்கே உரிய துஷ்டத்தனமும் குறும்புத்தனமும் என்னிடம் நிறைந்திருந்தன. எனவே, வீட்டில் நான் எப்பொழுதும் ஒரு பிரச்னையாக இருந்தேன். அந்தப் பிரச்னையைச் சமாளிப்பதற்குச் சக்தியும் சௌகரியமுமில்லாத குடும்பத்தினரால் ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குப் பந்து மாதிரி உதைபட்டுக் கொண்டிருந்தேன். ஒரு சமயம் கிடைத்த உதையில் நான் வந்து விழுந்த இடம் விழுப்புரம்.

    விழுப்புரத்தில் ஒரு பெரிய ரயில்வே காலனி உண்டு. ரயில்வே லைனை ஒட்டி ஒரு பெரிய விளையாட்டுத் திடலும் உண்டு. ரயில்வே காலனியின் நடுவில் ஒரு பிள்ளையார் கோயிலும் உண்டு. அந்தப் பிள்ளையாருக்குக் ‘கம்யூனிஸ்டுப் பிள்ளையார்’ என்று பெயர். அந்தப் பெயர் இப்போதும் உண்டோ என்னமோ தெரியவில்லை. அந்தப் பிள்ளையாரின் தொந்தியில் சிவப்பு வண்ணத்தில் பெரிதாக அரிவாள் - சுத்தியலை நானும் என் தோழர்களும் தீட்டி வைப்போம். அங்குள்ள தொழிலாளர்களுக்கே அந்தக் கோயிலும் பிள்ளையாரும் சொந்தமென்பதால் அப்போது அங்கே அதை யாரும் ஆட்சேபிக்கவில்லை.

    ரயில்வே காலனி மைதானத்தில் மாலை நேரங்களில் காக்கி நிஜாரும் வெள்ளைச் சட்டையுமணிந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் விளையாடுவதற்கும் தேகப் பயிற்சி செய்வதற்கும் வருவார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் ரயில்வே காலனிக்கு வெளியே இருந்து வருகிறவர்கள். ரயில்வே காலனியைச் சேர்ந்த சிறுவர்களோடு நான் அங்கே வேடிக்கை பார்க்கப் போவேன். நான் எப்போதுமே எந்த விளையாட்டிலும் கலந்து கொண்டதில்லை. எனவே, நான் வேடிக்கை மட்டும்தான் பார்ப்பேன். ஆனால் என்னோடு வேடிக்கை பார்ப்பதற்காக வந்த ரயில்வே காலனி சிறுவர்களில் சிலர், போன் எஸ். காரர்களின் விளையாட்டினால் கவரப்பட்டு ‘ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்’கில் சேர்ந்து விட்டார்கள்.

    இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களைப் பற்றி நான் என் மாமாவிடமும் வேறு சில கம்யூனிஸ்டுகளிடமும் கேட்ட பொழுது, அவர்களை ‘ஹிந்துமத வெறியர்கள்’ என்றும் ‘அகண்ட ஹிந்துஸ்தானம்’ அவர்களது லட்சியமென்றும், அந்தப் பக்கத்தில் முஸ்லிம் லீக் மாதிரி இந்தப் பக்கத்தில் இவர்கள் என்றும் அவர்களைப் பற்றிக் கூறியதிலிருந்து புரிந்து கண்டு, அவர்களை எதிர்த்து நான் ரயில்வே காலனியில் ஒரு சங்கம் ஆரம்பித்தேன்.

    அதற்கு ‘விழுப்புரம் ரயில்வே காலனி பாலர் சங்கம்’ என்று பெயர். நான்தான் அதற்கு கேப்டன்! எனக்குச் கமான வயதினரும் சற்றுப் பெரிய பையன்களுமாக ஐம்பது சிறுவர்களை நான் ஒன்று திரட்டினேன். அவர்கள் அத்தனை ரயில்வே தொழிலாளிகளின் பிள்ளைகள். எனக்குத் தனிப்பட்ட முறையில் விளையாட்டுக்களில் ஈடுபாடில்லாவிட்டாலும் இந்தச் சங்க நடவடிக்கைகளில் விளையாட்டுக்களே முதலிடம் பெற்றிருந்தன.

    மாலை நாலு மணிக்கெல்லாம் என் ‘மாமா

    Enjoying the preview?
    Page 1 of 1