Oru Santhippil...
()
About this ebook
"ஒரு சந்திப்பில்" ராமாயணத்தில் "கூனி" கதாபாத்திரம் எப்படி பேசப்படுகிறோதோ, அதேபோல் இந்த நாவலில் "பங்கஜம்" கதாபாத்திரம் கண்டிப்பாக பேசப்படும். பெண்களுக்கு எதிரி பெண்கள் தான், என்பதை இந்த நாவல் பேசும். மேலும் இந்த நாவலைப்பற்றி நான் மேற்கொண்டு எதுவும் சொல்ல மாட்டேன்.இந்த "பங்கஜம்" உங்கள் மனதை கண்டிப்பாக ஆட்டி படைப்பாள். இன்னொன்றும் உறுதி, படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் வைக்க மாட்டிர்கள். விமர்சனத்தை எதிர் நோக்கி
- காஞ்சி. பாலச்சந்திரன்
Read more from Kanchi Balachandran
Un Ullam Ennidam Rating: 5 out of 5 stars5/5Maranthean, Mannithean Rating: 0 out of 5 stars0 ratingsKannile Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Vithiyasamanaval Rating: 0 out of 5 stars0 ratingsManam Pona Pokkile Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Poonthotiti... Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Neram Rating: 0 out of 5 stars0 ratingsNijam Pondra Poi Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Kaithanean! Rating: 0 out of 5 stars0 ratingsPanama? Pasama? Rating: 0 out of 5 stars0 ratingsKaalangalil Aval Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsKadavul Thantha Irumalargal Rating: 0 out of 5 stars0 ratingsVaarangal Valartha Nila Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVandhana Oru Kelvikuri! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oru Santhippil...
Related ebooks
Kaatril Kalanthavale...! Rating: 0 out of 5 stars0 ratingsEn Veedu Rating: 0 out of 5 stars0 ratingsTheertha Karaiyiniley Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsIrandu Manam Vendum Rating: 0 out of 5 stars0 ratingsNeerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Maranthean Thendrale Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsMudindhu Vitta Aasai Rating: 0 out of 5 stars0 ratingsEngum Nee...! Endrendrum Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsAanathikkam Rating: 5 out of 5 stars5/5Nee Sirithal Naan Siripean Rating: 0 out of 5 stars0 ratingsPala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratingsThoorathu Nilavu Rating: 5 out of 5 stars5/5Ondru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsGanga Nathi Theerathile Rating: 0 out of 5 stars0 ratingsEnnennavo En Nenjile... Rating: 0 out of 5 stars0 ratingsInaiyaana Ilamaane Rating: 4 out of 5 stars4/5Ullukkulle Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Roja Malarae Rating: 0 out of 5 stars0 ratingsAan Manam Rating: 0 out of 5 stars0 ratingsMegathile Methaidu Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Azhagu Deivam Rating: 0 out of 5 stars0 ratingsVedhamadi Nee Enakku... Rating: 0 out of 5 stars0 ratingsYaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsKaayam Patta Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsMayangukiraal Oru Maathu Rating: 5 out of 5 stars5/5
Reviews for Oru Santhippil...
0 ratings0 reviews
Book preview
Oru Santhippil... - Kanchi Balachandran
http://www.pustaka.co.in
ஒரு சந்திப்பில்…
Oru Santhippil…
Author:
காஞ்சி பாலச்சந்திரன்
Kanchi Balachandran
For more books
http://pustaka.co.in/home/author/kanchi-balachandran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
என்னைப் பற்றி…
என் கண்மணி வாசகர்களுக்கு பணிவான வணக்கம். கண்ணிலே அன்பிருந்தால், நிஜம் போன்ற பொய், காலங்களில் அவள் வசந்தம் போன்ற நாவல்கள் மூலம் ஏற்கனவே உங்களோடு பரீட்சயமானவன்.
‘ஒரு சந்திப்பில்’ என்ற இது எனது நான்காவது நாவலாகும். இந்த நாவலை பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஒன்று மட்டும் உறுதி. விறுவிறுப்பில் உங்களை வியப்பில் ஆழ்த்தும் பங்கஜம் என்ற கதாபாத்திரம் உங்கள் மனதை ஆட்டிபடைக்கும் நன்றி வணக்கம்!
என்றும் நட்புடன்
காஞ்சி. பாலச்சந்திரன்.
1
கவுசல்யா, சுப்ரஜா, ராமபூர்வா, சுப்ரபாதம் இனிமையான குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது. தீப ஆராதனையை காட்டினாள் கிருஷ்ண வேணி.
பூஜைத் தட்டிலுள்ள மலர்களை தெய்வங்களுக்கு அர்ப்பணித்தவள் கீழே குனிந்து வணங்கிட்டு எழுந்தாள்.
சாம்பிராணி புகையை எடுத்துக் கொண்டுபோய் மற்ற அறைகளுக்கும் காட்டிவிட்டு ஈரக் கேசத்தை உலர்த்தத் தொடங்கினாள்.
தலைமுடியின் ஈரம் ஜாக்கெட்டை நனைத்திருந்தது.
அம்மா!
என்னம்மா?
தீப ஆராதனை தட்டை நீட்டினாள்.
ரெண்டு கைகளாலும் ஒற்றி கும்பிட்டாள். விபூதியை எடுத்து நெற்றியில் பூசினாள்.
விஜய் எங்கே?
இன்னும் எழுந்திருக்கல்லே!
வேலைக்குப் போகல்லையா!
எதுவும் சொல்லலே
காயத்ரி, விஜயா எங்கே?
மாடியில் இருக்காங்க
சரி! விஜய் வேலைக்குப் போவதற்கு முன் என்னைப் பார்த்துட்டுப் போகச் சொல்லு.
சரிம்மா
கிருஷ்ணவேணி பூஜை செய்யும் போது, வீட்டு வாசலிலும் பின் கதவில் மாட்டியிருக்கின்ற அந்த தகடுகளுக்கும் சாம்பிராணி புகை காண்பிச்சிடு.
சரிம்மா!
அந்த தகடுகள் இருக்கிற வரைக்கும் நம்ம குடும்பத்தை யாரும் எதுவும் செய்ய முடியாது. எதுவும் உள்ளே வராது.
சரிம்மா
அடுக்கடுக்கான உத்திரவுகள் அவை உடனே நிறைவேற்றப்பட வேண்டும். இந்த வீட்டின் மூத்த தலைவி பங்கஜம். வயது அப்படியொன்னும் அதிகம் கிடையாது. எழுபதுதான். அந்த அம்மாளுக்கு ஒரே பெண் - உத்திரவுகளை உடனுக்குடன் நிறைவேற்றும் கிருஷ்ணவேணி.
இந்த அம்மாளுக்கு மற்ற ரெண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் முடிந்து ஒருத்தன் மும்பையிலும் அடுத்தவன் ஹைதராபாத்திலும் வசிக்கிறார்கள். அவர்களின் மனைவிகளுக்கு அதாவது மருமகள்களுக்கு இந்தம்மாவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் விலகிப்போய் விட்டார்கள். மகளை தன் பிடியில் வைத்துக் கொண்டு தலையாட்டி பொம்மையாக ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறார்.
கிருஷ்ணவேணியின் கணவர் குப்புசாமி, அவர் வேலை பார்க்கும் இடங்களுக்கெல்லாம் தன் குடும்பத்தை அழைத்துச் சென்றார். இவர் இருக்கிற வரைக்கும் குடும்பம் அமைதியாகவும், சந்தோஷமாகவும் நகர்ந்தன. அந்த சந்தோஷத்தின் அடையாளமாக விஜய், காயத்ரி, விஜயா பிறந்தார்கள்.
மாமியார் தொல்லைத் தாங்காமல் இவர்களைப் பிரிந்து கிருஷ்ணகிரிக்கு மாறுதல் வாங்கி சென்றுவிட்டார். ரெண்டு மூனு மாசத்திற்கு ஒரு முறை சென்னை பக்கம் வருவார். வீட்டில் இவரை யாரும் மதிப்பதில்லை.
பாட்டிக்குப் பயந்தா? இல்லே அப்பா தங்களை தவிக்கவிட்டு சென்ற ஆத்திரமா?
புரியாத புதிர்.
விஜய் ஒரு இன்ஜினீயர். வாட்சன் எலக்ட்ரிகல் கம்பெனியில் வேலை அடுத்தடுத்த மகள்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
பங்கஜம் கணவர் கிராம் அதிகாரியாக அந்த காலத்தில் பணியாற்றியவர். இந்த எழுபது வயதுக்கும் அவர் போட்ட பிச்சையாக பென்ஷன் வருது. போதாக்குறைக்கு இந்தம்மா பெயரிலேயே சொந்த வீடு சென்னையில்.
பங்கஜம் ஊஞ்சலில் படுத்து விட்டத்தைப் பார்த்தால். ஏதோ ஒரு திட்டம் ஆரம்பமாகப் போகின்றது என்று அர்த்தம்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது இந்தம்மாவுக்கு கைவந்த கலை.
கிருஷ்ணவேணி தன் தாயார் பொறுப்பாக தன்னையும் தன் பிள்ளைகளையும் பாதுகாத்து வருகிறார் என்ற நினைப்பு. கணவன் கைவிட்டுப் போனபிறகு இந்தம்மாதான் எல்லாமே என்ற எண்ணம் மேலோங்கி நின்றது. அதைப் பயன்படுத்தி பங்கஜம் அந்த குடும்பத்தில் விஷ விதைகளைத் தூவி விட்டாள். அதுவும் படறத் தொடங்கிவிட்டது.
தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தன்னுடைய சுயநலத்திற்காக இந்த குடும்பத்தையே தன் அதிகார வளையத்துக்குள் கொண்டு வந்து விட்டார்
மொத்தத்தில் பங்கஜத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் கூனி சூழ்ச்சி எப்படி செயல்பட்டதோ, அப்படியே இந்த குடும்பத்திலும் தொடர்ந்தது.
அம்மா டிபன் கொடுக்கவா?
கொண்டா..!
தட்டில் நிறைய இட்லிகளை அடுக்கி தக்காளி சாம்பாரோடு கொண்டு வந்தாள்.
என்ன கிருஷ்ணவேணி!
இப்படியா கொண்டு வர்றது! யாராவது பார்க்கப் போறாங்க! திருஷ்டிப்பட்டுடாது?
நம்ம வீட்டுக்கு யாரும்மா வர்றப் போறாங்க. கதவைச் சாத்தித் தானே கிடக்குது. நீங்க சாப்பிடுங்க.
இந்த வயசுக்கும் அந்தம்மா கொஞ்சம் கொஞ்சமாக பத்து இட்லிக்கும் குறையாமல் சாப்பிட்டார். சாம்பார் நன்றாக இருப்பதாக சான்றோடு!
அடுத்து சத்து மாத்திரைகளை விழுங்கிவிட்டு தன் அறைக்குச் சென்றாள்.
2
விஜய் இன்று ஒரு கம்பெனியில் பொறுப்பான அதிகாரியாக இருந்தாலும் அவன் படித்த பொறியாளர் படிப்பு அந்தஸ்து சம்பளம் என்று தன்னை வளர்த்துக் கொண்டாலும் அவனை அவர்கள் வீட்டில் பொத்தி பொத்தி என்று சொல்வார்களே அப்படியே வளர்க்கப்பட்டான். அவன் எங்கு சென்றாலும் தன் கம்பெனியில் பார்த்தாலும் பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை போன் பண்ணி பேசாமல் விடமாட்டாள் அவன் அம்மா.
விஜய் ரெடியாகி கீழே வந்தான்.
டிபன் ரெடியா?
எல்லாம் ரெடி
என்னப்பா ராத்திரி தூக்கமில்லையா.. முகமெல்லாம் சோர்வாத் தெரியுது…?
அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா!
உடம்பு சரியில்லேன்னாச் சொல்லு, குரோசின் தர்றேன்..!
வேண்டாம்! வேலைக்குப் போகணும்!
நீ சாப்பிட்டு முடி! கால் டாக்ஸிக்குப் போன் பண்றேன். அதிலே கம்பெனிக்குப் போ…
சரிம்மா…
அதற்குள் அங்கே வந்த காயத்ரி என்னம்மா அண்ணனை எதற்கு டாக்சியில் அனுப்புறே? என் ஸ்கூட்டியை எடுத்துட்டுப் போகச் சொல் லேன்.
ஏய்! நீ சும்மாயிரு! அவன் வெயிலில் போனா கறுத்துப் போயிடுவான்! அவன் உடம்பு வேறே சரியில்லாமல் டல்லாயிருக்கான். நீ கால் டாக்ஸியில் போயிடுப்பா…
செல்லில் எண்களை அழுத்தினாள். டாக்ஸி வந்து நின்றது.
கம்பெனிக்கு போனவுடன் போன் பண்ணு. நேரத்துக்கு ஜூஸ் குடி! அப்புறம் லஞ்ச் முடிஞ்சதும் ரெஸ்ட் எடு. வெளியில் எங்கும் சுத்தாதே! உடம்பை பத்திரமாய்ப் பார்த்துக்கப்பா.
சரிம்மா
அவன் காலையில் வேலைக்குப் போய், மாலை வீடு திரும்பப்போறான். ஏதோ ஒரு மாதம் இவர்களை பிரிந்து வெளியூர் செல்வதைப் போல் விசாரிப்பு, அக்கறையான ஆலோசனை எல்லாம் அம்மாச் சொன்னாள்.
பாட்டி உன்னை கேட்டாங்கப்பா! போகும்போது போய் பாரு..!
சரிம்மா.
பாட்டி அறைக்குச் சென்றான்.
"என்ன