Un Manasula Naan Irukkena?
By Maheshwaran
()
About this ebook
உங்கள் மனதில் எனக்கென சிறப்பான தனி இடத்தை தந்திருக்கிறீர்கள். என்னுடைய வாழ்க்கையின் மிகமிக உன்னதமான விஷயம் இதுமட்டும்தான். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி.
'உன் மனசுல நான் இருக்கேனா?' தவிப்பான கிராமத்துக் காதல் கதை. அன்பாக இருந்தாலும் சரி, நட்பாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி நாமாக வலிய தேடிச் சென்றால் அவமானமே மிஞ்சும்.
பணமிருந்தால் எதைவேண்டுமானாலும் விலைக்கு வாங்கிவிடலாம். காதலை வாங்க முடியுமா? விரும்பிய இதயத்தில் குடியேற முடியுமா? 'நீ வேண்டவே வேண்டாம்' என விலகிச் செல்லும்போது ஒதுங்கி கொள்வது நல்லது. இல்லாவிட்டால் இதயம் முழுவதும் ரணமாகி கிடக்க வேண்டியதுதான்.
இக்கதையின் நாயகன் முத்தமிழ் தான் நினைத்த பெண்ணையே கரம்பிடித்தானா? கல்யாண பூமாலை முத்தமிழின் கழுத்தில் விழுந்ததா? காயம்பட்ட இதயத்தில் பூக்கள் பூத்ததா இல்லையா?
வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள்
மிக்க அன்புடன் உங்கள்
மகேஷ்வரன்
Read more from Maheshwaran
Kuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5Linga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsVaruvean Naan Rating: 5 out of 5 stars5/5Karuppu Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsPachaikili Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsTick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5Mayanginean Solla Thayanginean Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kobam Varum! Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsIravum Pagalum Un Uruvam Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik Thilothi Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nagam Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Poovai Maarivida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsPovom Ini Kaadhal Desam Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naanuranga Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kiliye Kobama? Rating: 0 out of 5 stars0 ratingsMayanguthu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Aasai Kodi Sumanthu… Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Poi Pesuma? Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Pattampoochi Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Vizhuntha Thirumana Maalai! Rating: 0 out of 5 stars0 ratingsElla Muthangalum Enakke! Rating: 0 out of 5 stars0 ratingsUyirai Pirikka Mudiyuma? Rating: 0 out of 5 stars0 ratingsMudhalai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Un Manasula Naan Irukkena?
Related ebooks
Saayatha Bommaigal Rating: 5 out of 5 stars5/5Ingeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsPani Nilavai Pathiyanidu Rating: 0 out of 5 stars0 ratingsPallakku Payanam Rating: 0 out of 5 stars0 ratingsArabu Desathil Thagappan Samy Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsThoongum Maanaviyai Sight Adippathu Thappa? Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugathey Rating: 5 out of 5 stars5/5Veduk Veduk Vekulamba Rating: 0 out of 5 stars0 ratingsAagayathil Oru Theevu! Rating: 5 out of 5 stars5/5Oru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5Sorna Rating: 0 out of 5 stars0 ratingsChittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhalin Climax Rating: 0 out of 5 stars0 ratingsNeruppuden Uravu Rating: 0 out of 5 stars0 ratingsSamathiley Naan Varava Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Brindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Nenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Uthikatha Iravu Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsKaakitha Medai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Oliyin Nizhalil... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Bothai Rating: 0 out of 5 stars0 ratingsAabathu August 10! Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalam Idhu Rating: 0 out of 5 stars0 ratingsIni Illai Idaivelai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Un Manasula Naan Irukkena?
0 ratings0 reviews
Book preview
Un Manasula Naan Irukkena? - Maheshwaran
http://www.pustaka.co.in
உன் மனசுல நான் இருக்கேனா?
Un Manasula Naan Irukkena?
Author:
மகேஷ்வரன்
Maheshwaran
For more books
http://pustaka.co.in/home/author/maheshwaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
'உங்கள் மனதில் நான்....’
என் இனிய வாசகர்களே!
உங்கள் மனதில் எனக்கென சிறப்பான தனி இடத்தை தந்திருக்கிறீர்கள். என்னுடைய வாழ்க்கையின் மிகமிக உன்னதமான விஷயம் இதுமட்டும்தான். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி.
'உன் மனசுல நான் இருக்கேனா?' தவிப்பான கிராமத்துக் காதல் கதை. அன்பாக இருந்தாலும் சரி, நட்பாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி நாமாக வலிய தேடிச் சென்றால் அவமானமே மிஞ்சும்.
பணமிருந்தால் எதைவேண்டுமானாலும் விலைக்கு வாங்கிவிடலாம். காதலை வாங்க முடியுமா? விரும்பிய இதயத்தில் குடியேற முடியுமா? 'நீ வேண்டவே வேண்டாம்' என விலகிச் செல்லும்போது ஒதுங்கி கொள்வது நல்லது. இல்லாவிட்டால் இதயம் முழுவதும் ரணமாகி கிடக்க வேண்டியதுதான்.
இக்கதையின் நாயகன் முத்தமிழ் தான் நினைத்த பெண்ணையே கரம்பிடித்தானா? கல்யாண பூமாலை முத்தமிழின் கழுத்தில் விழுந்ததா? காயம்பட்ட இதயத்தில் பூக்கள் பூத்ததா இல்லையா?
வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள்
மிக்க அன்புடன் உங்கள்
மகேஷ்வரன்
1
நாளந்தா நகைக்கடை.
நகரிலேயே பெரிய, பிரபலமான நகைக்கடை.
எப்போதும் பரபரப்பாகத்தான் இருக்கும்.
தரமான, சுத்தமான கே.டி.எம். தங்கமும், வெள்ளியும் கிடைக்கும் என்பதால் கூட்டம் அலைமோதும். கைராசியான கடைவேறு. கேட்கவா வேண்டும். தங்கம் விலை சவரன் இருபத்திஐந்தாயிரத்தை நெருங்கி விட்டது. இன்னும் ஐந்தாயிரம் கூடினாலும் வாங்குகிறவர்கள் வாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள்.
நாளந்தா நகைக்கடை மூன்றடுக்கு மாடிக்கட்டிடம்.
முதல் புளோரில் வெள்ளி சாமான்கள்.
இரண்டாவது புளோரில் தங்கம்.
மூன்றாவது புளோரில் வைரம், நவரத்தினம் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் முழுவதும் குளுகுளு வசதி செய்யப்பட்டிருந்தது. இரவு எட்டரை மணி. தங்க நகைகள் பிரிவில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் பூச்செண்டு. கிளிப்பச்சை வண்ண பாவாடை, தாவணி. அரக்கு சிவப்பில் பிளவுஸ், இரட்டை ஜடை, இரண்டையும் மடக்கி கட்டி நிறைய பிச்சிப்பூ சூடியிருந்தாள்.
அதிகாலையிலேயே சூடிய பூ என்பதால் வாடி வதங்கிப் போயிருந்தது. காதுகளில் கவரிங் ஜிமிக்கிகள், கழுத்தில் கறுப்பு மணி, மூக்கில் மட்டும் சின்னதாய் மினுக்கும். ஒற்றைக்கல் தங்கமூக்குத்தி, கைகள் நிறைய கண்ணாடி வளையல்கள். அப்பாவித்தனமான கிராமத்து அழகு.
கள்ளம்கபடம் இல்லாத மஞ்சள் நிலா முகம். மருளும் மான்விழிகள், தித்திக்கும் செந்தமிழ் தேன்குரல்.
வாடிக்கையாளர்களிடம் மரியாதையாகவும், பொறுமையாகவும் பேசுவாள். பூச்செண்டு இருக்கிற பிரிவிற்கு வருகிற இளம்பெண்கள் எதையாவது வாங்கிக்கொண்டு தான் நகருவார்கள்.
அக்கா இந்த ஆரம் உங்க கழுத்துக்கு அழகா இருக்கும்
எது? மூணு சவரன்ல காட்டுனீங்களே அதா?
அய்ய! மூணு சவரன் என்னத்துக்கு? ஆறு சவரன்ல இருக்கறதை சொல்றேன் நா
அவ்ளோ ரூவா கொண்டு வரலியேம்மா நாங்க.....
என்பான் நகை வாங்க வந்த பெண்ணின் கணவன்.
வாங்கறதுதான் வாங்குறீய... அதை உருப்படியா வாங்குங்கண்ணே! இன்னிக்கு ஆரத்தை எடுத்து செலக்ட் பண்ணி பேரை எழுதி வெச்சுட்டு, இருக்கிற பணத்தை முதலாளிகிட்டே கொடுத்துட்டுப் போயிடுங்க. ஒரு வாரத்துல மிச்சப் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்தீங்கன்னா ஆரத்தை வாங்கிப் போயிடலாம்
இவளாகவே யோசனையையும் சொல்லிக் கொடுப்பாள்.
என்னங்க. அந்தப் பொண்ணு சொல்றபடியே செஞ்சிடலாம்ங்க. மூணு சவரன் கழுத்துல மாட்டி கழட்டறதுக்குள்ளேயே தேய்ஞ்சு முறிஞ்சுப் போயிடும். ஆறு சவரன்லயே வாங்கிடலாம்ங்க. காலத்துக்கும் திடமா அப்படியே இருக்கும்
என்பாள் நகை வாங்க வந்த பெண்.
ஆசைப்பட்டுட்டே! முடியாதுன்னு சொன்னா கேட்கவா போறே? மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்குவே! உன் விருப்பப்படியே செய்
என்பான் கணவன்.
அய்ய! இதை சந்தோஷமா சொல்றதுக்கென்ன?
வெற்றி பெருமிதத்தோடு, பளீரென புன்னகைப்பாள் பூச்செண்டு.
நாளந்தா நகைக்கடையில் அவள் ஒருத்திதான் கிராமத்துப் பெண்.
பூச்செண்டின் கள்ளம் கபடமில்லாத கிராமத்து பேச்சை கடை முதலாளியிலிருந்து அங்கே வேலை பார்க்கிற அத்தனை பெண்களுமே ரசிப்பார்கள்.
பூச்செண்டை எல்லோருக்குமே பிடிக்கும். காலையில் ஒன்பதரை மணி முதல் இரவு எட்டரை மணி வரை வேலை. மாதம் மூவாயிரத்து சொச்சம் சம்பளம். அப்படியே வாங்கிபோய் சித்தியின் கையில் கொடுத்து விடுவாள். பூச்செண்டுக்கு அம்மா கிடையாது. பூச்செண்டு குழந்தையாக இருக்கும் போதே மஞ்சள்காமாலை நோய்க்கு பலியாகி விட்டாள்.
பூச்செண்டின் அப்பா வைத்தியநாதன் சொற்ப நிலம் வைத்திருக்கும் விவசாயி.
பூச்செண்டை வளர்ப்பதற்காகத்தான் வேதநாயகியை இரண்டாம் தாரமாக கட்டிக் கொண்டார்.
வேதநாயகி ஆரம்பத்தில் பூச்செண்டு மீது பாசமாகத்தான் இருந்தாள்.
கண்ணுக்குள் வைத்து தான் தாங்கினாள்.
தோளிலும், மார்பிலும் போட்டுதான் தாலாட்டினாள். நிலாவையும் நட்சத்திரங்களையும் காட்டிதான் சோறூட்டினாள்.
எல்லாம் கொஞ்ச காலம்தான். அவளுக்கென்று இரண்டு பெண் குழந்தைகள் அடுத்தடுத்து பிறக்கவும் முழுமையாய் மாறிப்போனாள்.
தன் குழந்தைகளிடம் தாயாகவும், பூச்செண்டிடம் பேய் போலவும் நடந்து கொண்டாள். பூச்செண்டை தேள் போல கொட்டி துடிக்க வைப்பாள். வார்த்தை சவுக்காலேயே அடித்து விளாசுவாள். ஒழுங்காய் வயிற்றுக்கு கூட சோறு போடமாட்டாள்.
வேதநாயகி நூறு கத்திகளுக்கு சமமானவள். ஆயிரம் விஷ பாம்புகளுக்கு இணையானவள். பூச்செண்டை பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க அனுப்பவில்லை. நகைக்கடை வேலைக்கு அனுப்பி விட்டாள். ஐந்து வருடமாக நாளந்தா நகைக்கடையில் தான் வேலை செய்கிறாள் பூச்செண்டு.
பூச்செண்டின் தங்கைகள் இளம்பிறையும், தாமரையும் நல்ல குணம் கொண்டவர்கள். பூச்செண்டு மீது பாசமாய் இருப்பார்கள். 'அக்கா அக்கா' என உருகுவார்கள்.
இளம்பிறை பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாள்.
தாமரை பத்தாம் வகுப்பு. தங்கைகள் இருவருக்காகவும்தான் சித்தியின் கொடுமைகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருந்தாள் பூச்செண்டு.
வைத்தியநாதன் வாயையே திறக்கமாட்டார். வேதநாயகியிடம் எதிர்த்து ஒருவார்த்தை கூட பேச முடியாது.
பேசினால் அவ்வளவுதான். இருக்கிற நிம்மதியும் பறிபோய் விடும்.