Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Koodai Nila
Oru Koodai Nila
Oru Koodai Nila
Ebook129 pages12 minutes

Oru Koodai Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.

இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பா. விஜய் இதுவரைக்கும் இலக்கியப் படைப்புகளாக கவிதை, நாவல், சரித்திர புதினங்கள், கட்டுரை படைப்புகள் என 47 படைப்புகளை எழுதியுள்ளார் உள்ளார் இவருடைய நூல்களில் இருந்து சுமார் 350 மாணவர்கள் எம்பில் ஆய்வும் 60க்கும் மேற்பட்டோர் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580127104803
Oru Koodai Nila

Read more from Pa. Vijay

Related to Oru Koodai Nila

Related ebooks

Reviews for Oru Koodai Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Koodai Nila - Pa. Vijay

    http://www.pustaka.co.in

    ஒரு கூடை நிலா

    Oru Koodai Nila

    Author:

    பா.விஜய்

    Pa. Vijay

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pa-vijay

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சொல் அன்பே – உன் 'சொல்' அம்பே!

    கார்கில் யுத்த பூமியில்

    இனி ஒரு வெடி செய்வோம்!

    கலைஞர் ஒரு மகாயுகம்

    ஆசிரியர்கள்..

    கண்ணாடி

    தாஜ்மஹால் வாசலில்

    சக்தி அம்மன்

    தீபா 'வலி'

    கம்பீரமான வரலாறு

    உயிர்மெய் எழுத்து உன் கையெழுத்து!

    மணிவிழா

    தமிழ்ப் புத்தாண்டு

    பெண்ணே நீ தீவிரவாதி

    அறுபது ஆண்டு அரசியல் காற்று

    அத்வைதத் தேடல்

    தீபாவளி விண்ணப்பம்

    எப்போது ஒரு பெண் அழகாகிறாள்

    ஐசக் நியூட்டனாய்க் காத்திருக்கிறேன்

    சொல் அன்பே – உன் 'சொல்' அம்பே!

    நூறு தென்னை மரங்கள்

    ஒரு சேர எனக்கு

    காற்றடிப்பதும் ஒன்றுதான்!

    உன் முந்தானைச் சேலை

    ஒருமுறை என்மேல்

    படுவதும் ஒன்றுதான்!

    ஒரு ஆழமான சுழலைக்

    கண்களுக்குள் வைத்திருக்கிறாய்!

    நீந்தத் தெரியாதவனான நான்

    அதற்குள் விழுகிறேன்!

    நிலா இல்லாத

    அமாவாசைகளில்

    உன் புகைப்படத்தை

    வானத்தில் மாட்டி வைக்கத்

    தோன்றுகிறது!

    மேஜை விளக்கைப்

    பார்க்கும் போதெல்லாம்

    உன் குனிந்த முகமே

    நினைவுக்கு வருகிறது!

    என் கைகளில் எப்போதும்

    பேனா இருப்பதைப் போல

    உன் கைகளில் எப்போதும்

    நான் இருக்க வேண்டும்!

    மின்சாரக் கம்பியின்மேல்

    காகம் உட்கார்ந்திருப்பதைப்போல

    காதலின் மேல்

    கவனமாக நான்!

    என் இதயத்தை

    உன் காலடியில் வைத்தேன்

    அதை நீ

    எடுத்துக்கொண்டு போவாய்

    என்பதற்காக அல்ல..

    மிதித்துவிட்டாவது போவாய் என்றே!

    *****

    கார்கில் யுத்த பூமியில்

    ஏவுகணைகள் பறக்கின்றன

    எப்போது நாம் பறப்பதென்று

    ஏங்குகின்றன இரு பறவைகள்!

    ஒரு பறவை

    பாகிஸ்தானிற்கு போகலாமென்றது

    ஒரு பறவை

    இந்தியாவிலேயே இருக்கலாமென்றது!

    பீரங்கிப் புகையிலும்

    பனி புகையிலும்

    Enjoying the preview?
    Page 1 of 1