Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolaikku Saatchi Illai
Kolaikku Saatchi Illai
Kolaikku Saatchi Illai
Ebook98 pages35 minutes

Kolaikku Saatchi Illai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இக்கதையில் வரும் நாயகன் கணபதிராமன் செய்யாத தவறுக்கு தண்டனையை அனுபவித்து அதனால் மனம் உடைந்து, அதன் பிறகு சூழ்ச்சி செய்து அவனை வலையில் மாட்டிவிட்டவர்களை சாட்சிகளே இல்லாமல் எப்படி வஞ்சிக்கிறான் என்பதை அழகாக சொல்லும் கதை. தலைப்பை பார்த்தாலே புரியும் அளவிற்கு அழகான க்ரைம் கதை.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580131005008
Kolaikku Saatchi Illai

Read more from S. Kumar

Related authors

Related to Kolaikku Saatchi Illai

Related ebooks

Related categories

Reviews for Kolaikku Saatchi Illai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolaikku Saatchi Illai - S. Kumar

    http://www.pustaka.co.in

    கொலைக்குச் சாட்சி இல்லை

    Kolaikku Saatchi Illai

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    மூன்று ஆள் உயரச் சுவர். அதிகாரி, வார்டர்கள், கான்விக்ட்வார்டர்கள் என்ற மூன்று அடுக்குக் காவல் சுவர்.

    அது சிறை.

    ரோல்காலுக்காக கைதிகள் வரிசையாக நின்றார்கள்.

    திட்டமிட்டு வடிவமைத்த இந்த இரும்புக் கோட்டையின் இன்னொரு பாதுகாப்பு நடைமுறை இந்த ரோல்கால்.

    கைதிகள் அழைக்கப்பட்டனர்.

    தங்கு தடையில்லாமல் அவர்கள் தங்களின் இருப்பை உறுதி செய்து கொண்டிருந்தனர்.

    411

    பதிலில்லை.

    யாருய்யா, அவன்? என்ற சிறை அதிகாரி ரிச்சர்டின் மீசையும் கன்னப் பரப்பும் துடித்தன.

    இரண்டு காரணங்கள். ஒன்று ஆத்திரம். மற்றொன்று அச்சம்.

    சிறைக் காவலிலிருந்து கைதிகள் தப்பிப்பது சுலபமல்ல. ஆனால் நடந்திருக்கிறது.

    கணபதிராமன்

    பதில் சொன்னவன் வரிசையிலிருந்து இழுக்கப்பட்டான்.

    அவன் தங்கராஜ்.

    எங்கேடா அவன்?

    தெரியாது, சார்

    அவனோட செல்லில் இருக்கிறவன் யார் யாரு?

    வார்டர் பொன்னு சொன்னான்.

    இந்தத் தங்கராஜும் நாராயணனும்

    வரிசையிலிருந்து புதிதாக முன் வந்த நாராயணனும் தங்கராஜும் நடுங்க ஆரம்பித்தார்கள்.

    என்னால இப்ப நேரத்தை வீணாக்க முடியாது. ஒவ்வொருத்தனும் தனக்குத் தெரிஞ்ச தகவல்களைக் கக்கிடனும். கடைசியா அவனை யார் யாரு, எங்கெங்கே பார்த்தீங்கன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்.

    இருபது, முப்பது பேர்களின் எண்பது, தொண்ணூறு வார்த்தைகள் மொத்தமாய் இழைந்தன.

    ஒருவொருத்தறாச் சொல்லு... வேகமா...

    ஒட்டு மொத்த மௌனம்.

    "உனக்குத் தெரியுமா?... உனக்கு... உனக்கு...'

    தச்சுப் பட்டறையில் பார்த்தேன்

    நானும் அங்கே தான்!

    எப்போ?

    அரை மணி நேரத்துக்கு முன்னால

    நான் பார்த்து பதினஞ்சு நிமிஷம் இருக்கும்

    பதினஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம் - யாராவது பார்த்திங்களா?

    நாராயணன் சொன்னான் - ராஜப்பன்கிட்ட பேசிட்டிருக்கிறதை நான் பார்த்தேன்

    ராஜப்பன் யாரு?

    முன்னால் வந்தான்.

    எங்கேடா அவன்?

    தெரியாது

    சொல்லு என்று உலுக்கினார்?

    …..

    ராஜப்பன் பிறவி கிரிமினல். மீசை, கன்னத் தழும்பு, நீண்ட சிறை அனுபவங்கள்.

    அந்தப் பையனுக்கு அவ்வளவு தைரியம் வராது. உன்னை மாதிரிப் பொறுக்கியோட சாவகாசம் வச்சா எல்லாம் தோணும். சொல்லு, நீ என்ன யோசனை சொல்லிக் கொடுத்தே! அவன் எங்கே ஒழிஞ்சான்?

    தெரியாது

    வாங்கிய அறையில் அவன் வாய் கரித்தது.

    சொல்லுடா!

    சார்... எனக்குத் தெரியாது, சார். ஏதோ உடம்பு சரியில்லாத மாதிரி டல்லா இருந்தான். ஏன் இப்படி இருக்கே. உடம்புக்கு ஏதாவது முடியலியான்னு விசாரிச்சேன். அதுக்குள்ள நேரமாயிட்டது. இங்கே வந்து நின்னுட்டேன்.

    நீ வந்து நின்னுட்டே! அவன் எங்கேடா?

    …….

    போய்த் தேடுங்கய்யா... கொலைக்காரன், கொள்ளைக்காரனெல்லாம் உள்ளே பத்திரமா இருக்கான். ஆஃப்டர் ஆல் ஒரு வருஷ குற்றவாளி தப்பிக்கிறான்னா... என்னால நம்பவே முடியலே. க்விக், தரோவா சர்ச் பண்ணுங்க.

    சிறைகளை நோக்கி ஏசுதாசன், பட்டரையை நோக்கி பொன்னு, சுவர்களை நோக்கி பிறர் என்று வார்டர்கள் சிதறினார்கள்.

    முதுகுக்குப் பின்னால் கையைக் கட்டிக் கொண்டு ரிச்சர்டிடம் லாத்தி நெறிபட்டது. முஷ்டிகள் ஏறி இறங்கின.

    கிடைக்கட்டும் அவன். இன்னிக்குக் கிழிச்சிடறேன்.

    கைதிகளின் வரிசை சற்று கலைந்தது.

    ஒழுங்கா நில்லுங்கடா. அப்புறம் உட்கார முடியாம சாவிங்க சொன்ன வேகத்தில் ஒருவனின் பிருஷ்டத்தைத் தாக்கினார்.

    வலியில் கோணலாகும் அவன் முகம் அவருக்குத் தற்காலிக சந்தோஷம் தந்தது.

    சார் - பொன்னுவிடம் அவசரம்.

    என்ன?

    யாராவது ரெண்டு பேரை அனுப்புங்க. அவனைத் தூக்கிட்டு வரணும்.

    என்னாச்சி?

    பட்டரையில பெஞ்சுக்கடியில மயங்கிக் கிடக்கிறான்

    மயங்கிக் கிடக்கிறானா?

    அவர் உத்தரவு பெறாமலே இரண்டு கான்விக்ட் வார்டர்கள் அவசரமாக பொன்னுவை நெருங்கினார்கள்.

    ம்

    ஓடினார்கள்.

    கணபதிராமனை அவர்கள் கொண்டு வந்து கிடத்திய போது அவன் சுய நினைவற்றிருந்தான்.

    எல்லாரையும் அவங்க செல்லில வச்சி பூட்டுங்க. பொன்னு. நீ டாக்டரைக் கூட்டிட்டு வா

    சரிங்க, ஐயா

    பொன்னு டாக்டரின் குவார்ட்டர்சுக்குப் போனார்.

    மற்றவர்கள் கைதிகளை ஒழுங்குப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றார்கள். கைதிகளெல்லாம் ஓட்டிச் செல்லப்பட்டதும் மைதானம் வெறிச்சோடி கிடந்தது.

    குழப்பத்தில் இருந்த ரிச்சர்டின் எதிரில் கணபதிராமன் தரையில் கிடந்தான்.

    காலால் அவனைப் புரட்டிப் போட்டார்.

    பின் மண்டையில் சிறிய காயம் பெற்று, ரத்தம் சிந்தியிருந்தான். காயம் சில நிமிடப் பழசாகி ரத்தம் உறைந்து

    Enjoying the preview?
    Page 1 of 1