Oru Raja Raniyidam
()
About this ebook
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Read more from Pattukottai Prabakar
Bharath And Pattampoochi Rating: 0 out of 5 stars0 ratingsThottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsBharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsPushpa Rating: 5 out of 5 stars5/5Uyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Ner Meley Nila Rating: 5 out of 5 stars5/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Mazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Bombay Panthayam Rating: 0 out of 5 stars0 ratingsThuppakki Munaiyil Rating: 0 out of 5 stars0 ratingsIravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsVaruvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsYaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsAnthapurathil Oru Poo Rating: 5 out of 5 stars5/5Netru Varai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsTick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5
Related to Oru Raja Raniyidam
Related ebooks
Puthithai Pirappom Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugathey Rating: 5 out of 5 stars5/5Oru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5En Iniya Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsIndhu Maha Sarithram Rating: 0 out of 5 stars0 ratingsOodathey! Thurathathey! Rating: 0 out of 5 stars0 ratingsDecember Poo Teacher Rating: 0 out of 5 stars0 ratingsNeruppodu Vilaiyadu! Rating: 5 out of 5 stars5/5Pasithalum Puli... Rating: 0 out of 5 stars0 ratingsNila Satchi Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Oru Indian Rating: 5 out of 5 stars5/5Atho Ange Aarambam Rating: 5 out of 5 stars5/5Thorkathe Thozha Rating: 0 out of 5 stars0 ratingsThottu Vaa Thendraley Rating: 5 out of 5 stars5/5Thaandathe Thandikkapaduvai Rating: 5 out of 5 stars5/5Miss India Missing Rating: 5 out of 5 stars5/5December Punnagai Rating: 5 out of 5 stars5/5Antharangamana Abathu Rating: 5 out of 5 stars5/5Brindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Ini Illai Idaivelai Rating: 5 out of 5 stars5/5Priyangaludan Naane Rating: 5 out of 5 stars5/5Imaikkum Nerathil Rating: 5 out of 5 stars5/5Oru Kaadhalan Oru Kaadhali Rating: 5 out of 5 stars5/5Ragasiyam Ramyamanathu Rating: 5 out of 5 stars5/5Anamikavuku Anjali Rating: 5 out of 5 stars5/5Avaloru Kathanayagi Rating: 5 out of 5 stars5/5Ippadithan Aarambikkirargal Rating: 5 out of 5 stars5/5Vetri Kodu Rating: 5 out of 5 stars5/5Poo Mattum Puyalodu... Rating: 5 out of 5 stars5/5Kadaisi Thotta Rating: 5 out of 5 stars5/5
Reviews for Oru Raja Raniyidam
0 ratings0 reviews
Book preview
Oru Raja Raniyidam - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
ஒரு ராஜா ராணியிடம்
Oru Raja Raniyidam
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
1
ஐந்து மணிக்கு அலாரம் வைத்திருந்தேன். ஆனால் அடுத்த காம்பவுண்ட்டில் கொளுத்தின 5,000 வாலா சரப் பட்டாசு சடசடவென்று இரண்டு நிமிடங்களுக்கு மேல் விடாமல் ஒலித்ததில் உறக்கம் கலைந்து போய் மணி பார்த்த போது அதிகாலை நாலு முப்பது தான் ஆகியிருந்தது...
சரவெடி ஓய்ந்து லேட் கம்மர்ஸ் போல் ஒன்றிரண்டு துணுக்குகளும் வெடித்து நின்றது. எழுந்து ஜன்னலருகே வந்து திரையை ஓரமாக ஒதுக்கி விட்டுப் பார்த்தேன்.
விடியப் போவதற்கான எந்தத் தடயமும் வானத்தில் இல்லை. சுத்தமான சிலேட்டுக் கறுப்பு. லேசான பூந்தூறல் இருந்தது. ஒரு உற்சாகக் காற்றில் என் முகத்தில் பன்னீர் தெளித்தது. சிலிர்த்து அடங்கியது தேகம்.
தூர தூரமாக அங்கங்கே டம், டம் என்று வெடித்துக் கொண்டிருந்தார்கள். கறுப்பைக் கிழித்துக் கொண்டு 'விர்ர்' என்று நெருப்புக் கோடு விலைவாசிக் கோடாக மேலே உயர்ந்து ஒரு வெடிச் சத்தத்துடன் மத்தாப்பாகச் சிதறியது.
இன்னும் பத்து நிமிஷம் படுக்கலாம் என்கிற கெஞ்சல் இப்போது மனசில் இல்லை. தூக்கக் கலக்கம் விரட்டப்பட்டிருந்தது. மூன்றாவது மாடியிலிருந்து என்றாலும் தெரு நோக்கில் ஜன்னல் என்பதால் வீதி முழுக்க புஸ்வான ஒளிச் சிதறல்களையும், சங்குச் சக்கர ஒளிச் சுழற்சிகளையும் மாறி மாறி பார்க்க முடிந்தது.
எங்கள் அபார்ட்மெண்டின் அசோசியேஷன் தலைவர் பதினாலாம் நம்பர் ராமச்சந்திரன் தன் குழந்தைகளோடு வீதியில் நின்றார். ஆளுக்கொரு கம்பி மத்தாப்பு பிடித்திருந்தார்கள். ஒன், ட்டூ, த்ரீ சொல்லி ஒரே நேரத்தில் ஆளுக்கொரு புஸ்வானம் வைத்து விட்டு ஒதுங்கினார்கள். நான்கு புஸ்வானங்களும் ஒரே நேரத்தில் சீறத் துவங்கி ஒரே நேரத்தில் உயரமாக நெருப்புப் பூக்களைப் பொழிந்த போது கைதட்டிக் குதூகலித்தனர்.
அந்த உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது அறைக்கு வெளியே வந்தேன். சோபாவில் அப்பா லேசாக வாய் பிளந்து உறங்கிக் கொண்டிருந்தார். சற்றுத் தள்ளி பாய்களில் ஒன்றில் லலிதா கழுத்து வரைப் போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்க... அருகில் அம்மா இல்லை. குளியலறையில் இருந்து தண்ணீர் சத்தம் வந்து கொண்டிருந்தது.
அலாரம் அடித்ததும் நான் எழுந்து எல்லோரையும் எழுப்புவதாகப் பேச்சு. ஆனால் அம்மாவுக்கும் என்னைப் போலவே தொடர்ந்த வெடிச் சத்தத்தில் விழிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.
லலிதாவை தோளில் அசைத்து எழுப்பினேன்.
எந்திரி லலிதா. ஏய்! ஹேப்பி தீபாவளி!
அவள் புரண்டு படுத்தபடி, ஹேப்பி தீபாவளி
என்று மட்டும் முனகி விட்டுத் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.
ஊரெல்லாம் எந்திரிச்சி வெடி வெடிச்சிட்டிருக்காங்க இன்னைக்கு ஒரு நாள் கொஞ்சம் சீக்கிரம் எந்திரிக்கப் கூடாதா? எந்திரிம்மா.
லலிதா வேறு வழியில்லாமல் எழுந்து அமர்ந்தாள். இரட்டைப் பின்னலை பின்னால் தள்ளி விட்டுக் கொண்டு, கண்களைக் கசக்கி, கொட்டாவி விட்டு, மணி; என்னண்ணா?
அஞ்சாகப் போகுது
என்று பொய் சொன்னேன்.
நீ குளிச்சுட்டியா?
இன்னும் இல்லை, அம்மா குளிச்சிட்டிருக்காங்க.
இருக்கறது ஒரு பாத்ரூம். இப்ப எதுக்கு என்னை அர்ஜெண்ட்டா எழுப்பினே? ஒண்ணு செய்யேன், ப்ளீஸ்...
என்ன?
அம்மா குளிச்சி, நீ குளிச்சதும் என்னை எழுப்பேன். அதுவரைக்கும் தூங்கறேன்
கெஞ்சினாள்.
பால்கனிக்கு வந்து நின்னு கொஞ்ச நேரம் தெருவைப் பாரு. தூக்கம் தன்னால் போகும்.
தூக்கத்தைக் கலைக்கிறதைவிட பெரிய பாவம் உலகத்தில் இல்லைண்ணா! உனக்குத் தூக்கம் கலைஞ்சிடுச்சி. அதனால் எல்லோரையும் எழுப்பியாகணும். பொறாமை! பொறாமை!
செல்லமாக என் தலையில் குட்டியபடி எழுந்தாள் லலிதா. தாவணியைச் செய்து கொண்டாள்.
அவளின் போர்வையை நான் மடித்துப் போட்டு விட்டு ஹாலுக்கு அருகில் வீதியைப் பார்க்க இருக்கும் சிறிய கட் அவுட்டிற்கான கதவைத் திறந்தேன். ஒன்றடிக்கு எட்டடி இருந்த அந்த சின்ன பால்கனியில் இருந்து மறுபடியும் வீதியைப் பார்த்தேன்.
லலிதாவும் அருகில் வந்து நின்று கொண்டு தலையில் அரை வட்டமாக வைத்திருந்த வாசம் போன பூவை அகற்றியபடி பார்த்தாள். இப்போது முன்னை விட அதிக வீடுகளின் வாசல்களில் அக்னியின் கோலாகலம் இருந்தது. அடுத்த காம்பௌண்ட்டில் திடீரென்று வெடித்த ஒரு ஒற்றை அணுகுண்டுக்கு நடுங்கி தன்னையறியாமல் காதுகளைப் பொத்திக் கொண்டாள் லலிதா.
"பத்து வருஷத்துக்கு முன்னாடி நாம மன்னார்குடில இருந்தப்ப அப்பா வாங்கி வர்ற பட்டாசு, மத்தாப்பை எல்லாம் உடனே உட்கார்ந்து உன்னோடது, என்னோடதுன்னு பங்கு பிரிச்சுக்குவோம் ஞாபகமிருக்கா லலிதா?''
"நான் சின்னப் பொண்ணுங்கிறதால பங்கு பிரிக்கிறதில நீ திருட்டுத்தனம் பண்ணுவே. அதுவும் ஞாபகமிருக்கு. தீபாவளிங்கிறது இப்பவும் சந்தோஷமாதான் இருக்கு ஆனா சின்ன வயசுல கிடைச்ச சந்தோஷம் அதிகம் இல்லைண்ணா?''
ஆமாம். சிந்தனை இல்லாத வயசுக்கு உற்சாகம் இயல்பா வந்துடும் லலிதா. நமக்கு இன்னைக்கு உற்சாகமா இருக்கணும்னு ஒரு கான்ஷியசோடவே உற்சாகம் வரும்.
காலையில இந்த மாதிரி புரியாம ஏதாச்சும் உளறாதே, அங்கே பாரு, மிஸஸ் ராமச்சந்திரன் வெடிக்கு நெருப்பு வைக்கறதுக்கு எவ்வளவு பயப்படறாங்க பாரு.
நீ கூடத்தான் பயப்படுவே.
''அதெல்லாம் அந்தக்காலம். சரவெடிகளைப் பத்தவெச்சு கைலயே பிடிச்சிட்டிருப்பேன் இப்ப பந்தயத்துக்கு வர்றியா?''
"வேணாம். நீ சூப்பர் வுமன்! ஒத்துக்கறேன். விபரீதமான விஷயத்துல எல்லாம் பந்தயம் வேணாம்.''
நந்தா
என்று அம்மாவின் குரல் கேட்டது. திரும்பினால், அம்மா ஈரத்தலையில் சுற்றின துண்டோடு, நெற்றியில் உத்தேசமாக வைத்துக் கொண்ட குங்குமத்தோடு நின்றாள். "எந்திரிச்சிட்டீங்களா ரெண்டு பேரும்? தண்ணி சூடா இருக்கு. யாராச்சும் ஒருத்தர் குளிக்கப் போகலாம்.''
"நீ போறியா லலிதா?'' என்றேன்.
"இல்லை. நீ போ'' என்றாள்.
சாமி படத்துக்கு முன்பாக மனைப் பலகை போட்டிருந்தது. என்னை உட்கார வைத்து அம்மா நெற்றியில் குங்குமம் இட்டாள். தலையில் மூன்று முறை எண்ணெய் வைத்தாள். மீதி கிண்ணத்தை நீட்டினாள்.
"நல்லா எண்ணெய் வைச்சுக்கோ நந்தா, சீயக்காய்த் தூள் கரைச்சி வெச்சிருக்கேன். ரொம்ப நேரம் ஊறாம குளிச்சிட்டு வந்துடு. லலிதா குளிச்சப்புறம் அப்பாவை எழுப்பினால் போதும். நான் சமையல்கட்டு வேலையைப் பார்க்கறேன். நீ குளிச்சுட்டு வந்து புது துணிக்கெல்லாம் சந்தனம், குங்குமம் வெச்சிடு.''
அம்மா பரபரப்பாகி விட்டாள்.
நான் குளியலறையில் சீயக்காய் போட்டு, தலை குளித்துக் கொண்டிருந்தபோது தான் சட்டென்று அந்த எண்ணம் வந்தது.
எப்படியும் சாமி கும்பிட்டுவிட்டு, பலகாரங்கள் சாப்பிட்டு, பட்டாசு வெடித்து, புது உடைகள் அணிந்த பிறகு நண்பர்கள் வீட்டுக்கு பைக் எடுத்துக் கொண்டு போய் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்வேன்.
நிச்சயமாக ஜோதியின் வீட்டிற்கு அம்மாவிடம் கேட்டுப் பலகாரங்கள் கட்டி எடுத்துச் சென்று கொடுத்து வாழ்த்துச் சொல்லத்தான் போகிறேன்.
அப்படியே வாழ்த்துக்களோடு சேர்த்து என் மனதையும் நாகரீகமாக நயமாக, இதமாக் சொல்லி விட்டால் என்ன?
இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் மனதிற்குள்ளேயே பூட்டி வைப்பது? நிஜ எண்ணங்களுக்கு விடுதலை தேவை. இன்று நல்ல நாள். பண்டிகை நாள். மனதில் சந்தோஷமும் உற்சாகமும் நிறைந்திருக்கும் நாள். எவ்வளவு மனக் குழப்பங்கள் இருந்தாலும் அவற்றை நினைக்க விரும்பாத நாள்.
ஜோதியும் இன்று வெகு உற்சாகமாகத்தான் இருப்பாள். பல தடவை சொல்லியிருக்கிறாள். அவளுக்கு மிகவும் பிடித்த பண்டிகை தீபாவளி என்று.
பட்டுச் சேலை கட்டி, நகைகள் அணிந்து மங்களகரமாக உதடுகளில் நிரந்தரப் புன்னகையோடு இருப்பாள். நிச்சயமாக இன்று சொல்லிவிட வேண்டும். சரியான சந்தர்ப்பம்.
எனக்கு உடனே சிலிர்த்தது. குளித்து முடித்து தலை துவட்டி வெளியே வந்தேன். லலிதாவை குளிக்க அனுப்பினேன். துவைத்த பழைய லுங்கியும், பனியனும் அணிந்து கொண்டு தலைக்கு ஹேர்ட்ரையர் போட்டுக் கொண்டேன். தீபாவளியின் பண்டிகை உற்சாகத்தோடு, இன்றைக்கு ஜோதியிடம் சொல்லிவிடப் போகிற தீர்மானம் தந்த உற்சாகமும் சேர்ந்து கொண்டது.
தலை சீவியபடி வார்த்தைகளை மனதிற்குள் அமைத்துப் பார்த்தேன்.
'ஜோதி, உன்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும். தயவு செஞ்சி நான் சொல்லப் போறதை முழுக்க கேட்டுக்கோ. குறுக்கே எதுவும் பேசாதே. இது ரொம்ப நாளா மனசில எழுதி வைச்ச விஷயம் ஜோதி.'
சரியாய் இருக்கிறதா ஆரம்பம்? என்னமோ நாடகத் தனம் இருக்கிற மாதிரி படுகிறதே! எதற்காகப் பிசகை, தயார் படுத்துதல் எல்லாம்?
நேராக எளிமையான வார்த்தைகளில் பளிச்சென்று முதலில் சொல்லி விடுவது. விளக்கமான பேச்செல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாமே! அதுதான் சரி. அப்படியென்றால் என்ன வார்த்தைகள்?
'ஜோதி, நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள உறவு வெறும் நட்பு மட்டும் தான்னு இனிமேயும் வேஷம் போட எனக்கு விருப்பமில்லை. நான் உண்மை பேச விரும்பறேன் ஜோதி என் மனசு உன்னை தீவிரமா நேசிக்குதுங்கறது தான் உண்மை. யெஸ், ஐ லவ் யூ ஜோதி!'
எனக்கு இந்த வாக்கியங்கள் பிடித்திருந்தன. மீண்டும் ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
2
அப்பா குளித்துவிட்டு வந்ததும், எல்லோரும் சாமி மாடம் முன்பாக நின்றோம். அப்பா இடுப்பில் ஈரத் துண்டோடு நின்றார். தலையின் முக்கால்வாசி முடிகள் நரைத்திருந்தன. பஞ்சு மாதிரி சுருண்டிருந்தன. கண்கள் சிவந்திருந்தன.
அம்மாவும், லலிதாவும் சூடாகத் தயார் செய்த வடைகளை ஒரு தட்டில் கொண்டு வந்து நைவேத்தியத்திற்கு வைத்தார்கள். நான் வரிசையாக வைக்கப்பட்டிருந்த எல்லோருடைய புதுத் துணிகளிலும் சந்தனம், குங்குமம் வைத்துவிட்டு, படம் படமாக இருந்த சாமிகளுக்கு