Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaalam Thappiya Paadal
Thaalam Thappiya Paadal
Thaalam Thappiya Paadal
Ebook119 pages34 minutes

Thaalam Thappiya Paadal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தந்தையின் பாசம் மிக அளப்பறியது. ஒரு பெண்ணிற்கு தந்தையிடம் இருக்கும் பாதுகாப்பான உணர்வு வேறு யாரிடத்திலும் தோன்றாது. அதேபோல தான், இந்த கதையில் ஜனகன் தன் மகளான மஞ்சுவின் மீது வைத்த பாசமே அவனுக்கு எமனாக மாறிய விபரீதம். ஏன்? அவ்வாறு நடக்க நேர்ந்தது. ஜனகனின் மனைவியான திலகா, எதற்காக கொடூரமாக நடந்து கொள்கிறாள்? காரணம் என்னவென்று புரியாமல் ஜனகனின் மனநிலையோ எரிமலைக் குழம்பாய் வெடிக்கின்றன. அப்படி என்ன குழப்பம் அவர்களின் குடும்பத்தில் நடந்தது? அதற்கு காரணம் யார்? வாசித்து தெரிந்து கொள்வோம்…

Languageதமிழ்
Release dateSep 20, 2021
ISBN6580137107242
Thaalam Thappiya Paadal

Read more from R. Sumathi

Related to Thaalam Thappiya Paadal

Related ebooks

Reviews for Thaalam Thappiya Paadal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaalam Thappiya Paadal - R. Sumathi

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    தாளம் தப்பிய பாடல்

    Thaalam Thappiya Paadal

    Author :

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    சி.ஏ.டி. கேட். பி.ஏ.டி. பேட் மஞ்சு உரக்க சொல்லிக்கொண்டே வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தாள். அவளை மடியில் அமர்த்தி அவள் எழுதுவதை கவனித்த வண்ணம் அவளுடைய கேசத்தை வருடியபடியே அமர்ந்திருந்த திலகா, மகளின் எழுத்தை ரசித்தாள்.

    ‘மஞ்சு எல்.கே.ஜிதான் படிக்கிறாள். ஆனால் எத்தனை அழகாக எழுதுகிறாள்.’

    எழுதிக்கொண்டிருந்த மஞ்சு சட்டென்று தலையை உயர்த்தி தன் வண்டு விழிகளால் அம்மாவைப் பார்த்தாள்.

    அம்மா… நான் சீக்கிரம் ஹோம் வொர்க்கை முடிச்சிட்டேன்னா என்னை வெளியே கூட்டிட்டுப் போறியா?

    எங்கே கூட்டிட்டுப்போறது?

    பீச்சுக்குப் போகலாமே?

    அப்பா இல்லாம நாம மட்டும் எப்படி தனியாபோறது?

    போம்மா! அப்பா தினமும் லேட்டா வர்றாங்க. சன்டே அன்னைக்குகூட ஏதேதோ வேலையிருக்குன்னு சொல்லிட்டு வெளியே போயிடறாங்க. நாம எங்கேயும் வெளியே போகமுடியறதில்லை.

    ‘உண்மைதான். இந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகூட ஜனகன் ஏதோ அலுவலக வேலை என்று கூறிவிட்டு போய்விட்டான். குழந்தையின் ஏக்கம் புரிந்தது! அவன் தினமும் சீக்கிரம் வருவான் வருவான் என மஞ்சு எதிர்பார்த்து ஏமாந்துபோகிறாள். அவனை சொல்லியும் குற்றமில்லை.’

    ‘தினமும் சீக்கிரம் கிளம்பணும்னுதான் நானும் முயற்சி செய்யறேன். ஆனா ஏதாவது ஒரு வேலையை கொடுத்து

    எம்.டி. உட்கார வச்சுடறாரு. என்னை என்ன பண்ணசொல்றே?’ லேட்டாக வரும் அவன் சொல்லும் காரணம் இதுதான்.

    இல்லடா மஞ்சு, அப்பா இன்னைக்கு சீக்கிரம் வருவாங்க பாரு… நாம கண்டிப்பா இன்னைக்கு அப்பாகூட ஜாலியா வெளியே போகலாம்.

    போம்மா! நீ சும்மா பொய்சொல்றே! குழந்தை சிணுங்கியபடியே எழுதுவதில் தயக்கம் காட்டியது!

    அம்மா நிஜமாத்தான்டா சொல்றேன். நீவேணா பாரு, அப்பா சீக்கிரம் வருவார்.

    குழந்தையை கொஞ்சி கெஞ்சி சமாதானப்படுத்தி முழுவதுமாக எழுதவைத்தாள்.

    அதேசமயம்…

    அவளுடைய செல்போன் ஒலித்தது! எழுதுவதைப் போட்டுவிட்டு மஞ்சு ஓடிச்சென்று மேஜைமீதிருந்த செல்ஃபோனை எடுத்துவந்து கொடுத்தாள்.

    அம்மா, அப்பாதான்.

    திலகா மனதிற்குள் சிடுசிடுத்தாள்.

    ‘ம்… என்ன சொல்லப்போகிறான். இன்னைக்கும் தான் வரலேட்டாகும், குழந்தையை போரடிக்காமல் பார்த்துக்க. இதுதானே சொல்லப்போகிறான்.’ நினைத்தவாறே ‘ஹலோ’ என்றாள்.

    திலகா… என்ன பண்றே?

    ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கோம். என்ன இன்னைக்கும் லேட்டாகுமா வர? குழந்தை பாவம். அழுது நச்சரிச்சுக்கிட்டேயிருக்கா. பீச்சுக்குப்போணுமாம். என்னை கூட்டிட்டுப் போகச்சொல்றா. தனியா நான் எப்படி போறது!

    அப்பா… எண்ணெயில் கடுகைப்போட்ட மாதிரி ஏன் இப்படி பொரிஞ்சுதள்றே?

    பின்னே நீங்க தினம் தினம் லேட்டா வந்தா குழந்தை என்ன பண்ணுவா? அவளுக்கு போரடிக்காதா?

    அவளுக்கு மட்டும்தான் போரடிக்குதா? உனக்கில்லையா?

    அவனுடைய குரலில் மெல்ல காதல் எட்டிப்பார்க்க, அது அவளுடைய குரலுக்கும் ஒட்டிக்கொண்டது.

    பின்னே? எனக்கு மட்டும் போரடிக்காதா? சாயந்திரமானா ஜோடி ஜோடியா போறவங்களைப் பார்க்கும்போது பொறாமையாயிருக்கு.

    அட…டா… ரொம்பவே ஏங்கவச்சுட்டேன்னு நினைக்கிறேன்.

    புரிஞ்சா சரி.

    சரி… சரி கவலைப்படாதே. இன்னைக்கு ஒரு வேலையும் இல்லை. சினிமாவுக்கு டிக்கெட் எடுத்துட்டேன். கிளம்பியிரு. வந்து பிக்கப் பண்ணிக்கறேன்.

    நிஜமாவா?

    நிஜமாத்தான்.

    பொய் மட்டும் சொன்னீங்க, உங்களைக் கொன்னே போட்டுடுவேன்.

    எனக்குத் தெரியாதா உன்னைப்பத்தி. நீதான் சரியான ராட்சசியாச்சே. கடிச்சு குதறிடுவேன்னு…

    நான் என்ன ராட்சசி மாதிரியாயிருக்கேன்?

    எஸ்… பட் அழகான ராட்சசி.

    உங்களை…

    குட்டி பிசாசுக்கிட்டக் கொடு.

    அவள் கொடுப்பதற்குள் குட்டிப் பிசாசே அவளுடைய கையிலிருந்து செல்லைப் பிடுங்கியது.

    அப்பா… சீக்கிரம் வாங்கப்பா. போரடிக்குது.

    வெளியில கூட்டிட்டு போங்கப்பா.

    வரேன்டா கண்ணு. அப்பா உன்னை சினிமாவுக்கு கூட்டிட்டுப்போறேன். ஐஸ்கிரீம் வாங்கித் தர்றேன்.

    ஹய்யா… நிஜமாவா…? ஜாலி… ஜாலி!

    மஞ்சு கால்கொலுசு சத்தமிட குதிக்கத் தொடங்கினாள்!

    நிஜமாத்தாண்டா. வெள்ளைக் கலர் முத்துமாலை போட்டுக்க. அப்பா வரும் போது அப்படியே குட்டி தேவதை மாதிரி இருக்கணும்.

    ஹாய்… முன்னிலும் வேகமாக குதித்த மஞ்சு, செல்லை அம்மாவின் மடியில் போட்டுவிட்டு வீடு முழுவதும் சலங்கை சத்தம் எதிரொலிக்க ஓடினாள். பீரோவைத் திறந்து வெள்ளை நிற கவுனைத் தேடினாள்.

    அம்மா… வொயிட் கவுனை எடு. அப்பா என்னை அதைப் போட்டுக்க சொன்னார். அப்பறம் வொயிட் முத்துமாலை இருக்குல்ல, அதையும் போட்டுக்கச் சொன்னார். என்னைகுட்டி ஏஞ்சல் மாதிரி இருக்கச் சொன்னார். எங்க போச்சு அந்த கவுன்… ச்சே…?

    அப்பா உன்னை ஏஞ்சல் மாதிரி இருக்கச் சொன்னாரா?

    எந்த டிரஸ் போட்டுக்கணும்னுகூட சொல்லியிருக்கார்… எனக்கு எந்த புடவை கட்டிக்கணும்னு சொல்லவேயில்லை. வரட்டும், வச்சுக்கறேன்.

    மஞ்சுவிற்கு இதைக் கேட்டு சந்தோஷம் பொங்கியது.

    அப்பா உனக்கு ஒண்ணுமே சொல்லலையா?

    ஆமா சொல்லலை. நான் புடவையே கட்டிக்கப் போறதில்லை.

    ஐய்யோ… கண்றாவியாயிருக்கும். ஷேம்… ஷேம்… பப்பி ஷேம்…

    கண்களை தன் பிஞ்சுக்கரங்களால் பொத்திக்கொண்டு உதட்டை சுழித்து வெட்கமாக சிரித்த மஞ்சுவின் தலையில் குட்டினாள்.

    அப்படியே… அப்பா மாதிரியே பேசு.

    ஸாரிம்மா, என் வொயிட் கவுனை எடுத்துக்கொடு.

    போடி! நான் எடுத்துக்கொடுக்க முடியாது. நீயே எடுத்துக்க தலையில் செல்லமாகக் குட்டினாள்.

    நானே எடுத்துக்கறேன் போ… முகத்தை திருப்பி அம்மாவிற்கு

    Enjoying the preview?
    Page 1 of 1