Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Piragu Oru Maalaiyil...
Piragu Oru Maalaiyil...
Piragu Oru Maalaiyil...
Ebook87 pages59 minutes

Piragu Oru Maalaiyil...

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

ராகவன் ஒரு கதையாசிரியர். இவனுடைய எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு இந்து நட்புடன் பழகுகிறாள்.

இந்து தன் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள ராகவனை வீட்டிற்கு அழைக்கிறாள். வீட்டிற்கு சென்ற ராகவனுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சி என்ன? அந்த அதிர்ச்சிக்குப் பின் இவர்களின் நட்பின் நிலை என்ன? விறுவிறுப்பான நடையில் வாசித்துப் பாருங்கள்...

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580100906672
Piragu Oru Maalaiyil...

Read more from Pattukottai Prabakar

Related to Piragu Oru Maalaiyil...

Related ebooks

Related categories

Reviews for Piragu Oru Maalaiyil...

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Piragu Oru Maalaiyil... - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    பிறகு ஒரு மாலையில்…

    Piragu Oru Maalaiyil...

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    முதலில் அந்த அறை

    ஒரு பக்க சுவரில் வயிற்றுவலிக்கு காப்ஸ்யூல் தயாரிக்கும் கம்பெனியின் காலண்டர். அதில் அவள் இதுதான் வயிறு: இங்கேதான் வலிக்கும் என்று காட்டிக் கொண்டிருந்தாள். தள்ளி பிரேம் போட்டு மாட்டின டென்னிஸ் ராக்கெட், அப்புறம் ஒரு ஆணியில் தூக்கு மாட்டிக்கொண்ட நார்த்ஸ்டார் ஷூக்கள். ‘செருப்பை ஏண்டா சுவத்துல மாட்றே' என்று நல்லசாமி தினம் கத்திவிட்டு கீழே எடுத்துப் போடுவான். அறையின் குறுக்கே நைலான் கயிறு. தண்ணீர் சொட்டச் சொட்ட நாலு ஜட்டிகள், பனியன்கள், சங்கரா, ஒரு வாரம் சேத்து வச்சி உன் துணியை துவை... வேணாங்கலே. நல்லா பிழிஞ்சுட்டுக் காயப்போடேண்டா, தரையெல்லாம் ஈரம் பாரு என்று தல்லசாமி புலம்புவதில் புண்ணியமே இல்லை.

    இனி, புலம்புகிற நல்லசாமி -

    'கடைசியாய் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கையில் வாத்தியார் நல்லசாமி என்று அட்டெண்டன்ஸ் எடுக்கையில் அழைத்ததுதான். அப்புறம் கல்லூரியில் ஒருத்தன், பெயரின் ஆங்கில ஆக்கம் செய்து 'குட்காட்' என்றான். பரோடா பாங்கில் வேலை கிடைத்து இந்த அறைக்கு வந்ததும் அதுவும் சுருங்கி 'ஜிஜி' என்றானது. மிஸ்டர் நல்லசாமி என்று நீங்கள் அழைத்தால் யாரையோ என்று போய் விடுவான். தெருவில் இறங்கி பஸ் ஸ்டாப் வரும்முன்னர் பிள்ளையார் கோவில் வாசலில் அவசரமே இல்லாமல் தோப்புக்கரணம் போடுவான். பிராகாரம் சுற்றுவான். கண்ணாடி எல்லாம் பார்த்து விபூதி சரி செய்து கொள்ளமாட்டான். சங்கரனின் 5030-ன் ஸ்டீரியோ சிந்தும் மேற்கத்தியக் கத்தல்கள் மீறி கவசம் சொல்லுவான். மழை அடித்துக் கொட்டினாலும் ஆறு மணிக்கு எழுந்து குளித்து அயர்ன் பண்ணிக் கொண்டிருப்பான். இல்லை வீக்லி படித்துக் கொண்டிருப்பான், சங்கரனத்தான் நிறைய திட்டுவான்.

    இப்போது திட்டு வாங்குகிற சங்கரன்

    பிரின்சிபல்ஸ் என்று சிலதுகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறதெல்லாம் சங்கரனுக்குப் பிடிக்காத விஷயங்கள். நாலு மணிக்கு எழுந்து மழமழ என்று ஷேவ் செய்து கொண்டு. அஞ்சு மணிக்கு வெளியே போய்விட்டு வருவான் என்னடா என்றால், 'மார்னிங் வாக்கிங் எவ்வளவு நல்லது தெரியுமா’ என்று போதனை செய்வான். மறுநாள் ஒன்பது மாணிக்கு எழுந்து அவசரமாய் ஆட்டோ பிடித்து எக்ஸ்சேஞ்சுக்கு ஓடுவான். மௌண்ட்ரோடு டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் ஜே.ஈ. திடீரென்று ஒருநாள் டென்னிஸ் ராக்கெட் வாங்கிக் கொண்டு வந்தான். 'உடம்பை ஷேப்ல வைக்கும் இது. கிளப்ல சேர்த்துட்டேன்' என்றான். இது நடந்த்து ஒரு வருடமிருக்கும். இந்த ஒரு வருடத்தில் மூன்று முறை அதை ஆணியிலிருந்து கழட்டியிருக்கிறான். நல்லசாமி திட்டத்திட்ட ரூமுக்குள்ளேயே பீர், பிராந்தி குடிப்பான். டெலிபோன் ரசிகைகள் எனக்கு ஏராளம் என்று சுற்றுவான். 'பெருசா நீ என்னடா எழுதிக் கிழிக்கிறே. நான் கூடத்தான் எழுதுவேன்...' என்று நிஜமாகவே பதினைந்து நாள் கழித்து அவன் கதையை அச்சில் படித்துக்காட்டினான். அதற்கப்புறம் ஒரு ரீம் பேப்பரை வாங்கி வைத்துக் கொண்டான். எப்போது பார்த்தாலும் கதை எழுதுகிற ராகவனே மட்டம் தட்டிக் கொண்டே இருப்பான்.

    கடைசியாய்... கதை எழுதுகிற ராகவன் -

    தஞ்சாவூர் பக்கத்தில் அவதரித்து, டிபன்பாக்ஸில் டிபன் கொண்டு போய் பூண்டியில் பொருளாதாரம் படித்து முடித்து விட்டு வந்து, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒரு நூறு காப்பி போட்டுக் கொண்டு போட்டோ கேட்ட, கேட்காத எல்லா வேலைகளுக்கும் ஒட்டி ஓட்டி அனுப்பினான். மூணு வருஷம் கழித்து விரக்தியில் அப்போதுதான் ரொம்ப லேட்டாய் சிகரெட் கற்றுக் கொண்டான். கல்லூரியில் நாடகம் எழுதிய கையை கதை எழுத வைக்க யோசித்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1