Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indha Nerathil Ival
Indha Nerathil Ival
Indha Nerathil Ival
Ebook197 pages1 hour

Indha Nerathil Ival

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பலருடைய தனித்தன்மைகள் ஒரு கிராம சமூகத்தில் என்னைப் பெருவியப்பில் ஆழ்த்தின. அவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த நாவலின் எல்லாப் பாத்திரங்களின் இயல்புகளையும் நான் சித்தரித்து இருக்கிறேன். இந்த நாவலில் வரும் அனைவருமே எனது அன்புக்கு உரிய எனது முன்னோர்கள் ஆவர்; மூதாதையரும் கூட.

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580103906906
Indha Nerathil Ival

Read more from Jayakanthan

Related to Indha Nerathil Ival

Related ebooks

Reviews for Indha Nerathil Ival

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indha Nerathil Ival - Jayakanthan

    https://www.pustaka.co.in

    இந்த நேரத்தில் இவள்

    Indha Nerathil Ival

    Author:

    த. ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    "1860-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘தந்தையரும் தனயர்களும்’ என்ற நாவலின் முதல் கருத்து என் மனத்தில் உதயமாயிற்று... கிராம இளம் மருத்துவன் ஒருவனுடைய தனித்தன்மை என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவனை அடிப்படையாகக் கொண்டே நாவலின் பிரதான பாத்திரமான பஸாரவின் இயல்பைச் சித்திரித்திருக்கிறேன்... பஸாரவ் என் அன்பிற்குரிய படைப்பு. இதை உருவாக்குவதற்கு என்னிடம் இருந்த வண்ணங்கள் அனைத்தையும் செலவிட்டுவிட்டேன்" என்று ருஷ்ய எழுத்தாளர் இவான் துர்கேனிவ் அந்த நாவலைப் பற்றிய உரையில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பற்றிக் கூறி இருக்கிறார்.

    இந்த நேரத்தில் இவள் என்ற நாவலுக்கு முன்னுரை எழுத அமர்கிற போது எனக்கு இந்த வரிகள் நினைவுக்கு வந்து அதற்கு எதிர்மறையான இன்னொரு கருத்தை எழுதுமாறு நிர்ப்பந்திக்கின்றன.

    1970-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நான் என் மூதாதையர்கள் வாழ்ந்த சொந்த கிராமத்தை ‘மியூஸியம்’ பார்க்கப் போனது போல் சென்று பார்த்துப் பல நினைவுகளில் ஆழ்ந்தபோது ‘இந்த நேரத்தில் இவள்’ என்ற இந்த நாவலுக்கான முதல் கருத்து என்னுள் முகிழ்த்தது.

    இந்த நாவலுக்குத் தந்தையர்களும் தனயர்களும் என்ற தலைப்பே பொருத்தம். அது ஏற்கனவே ருஷ்ய மொழியில் ‘இவான் துர்கேனிவா’ல் எழுதப்பட்ட ஒரு நாவலின் தலைப்பு என்று நான் அறிந்திருந்ததினாலும், அந்த நாவலைப் படித்து அனுபவித்து இருந்த காரணத்தினாலும் அதே பொருளுடைய தலைப்பை இந்த நாவலுக்கு இட வேண்டாம் என்று தவிர்த்தேன். அதனினும் நல்ல தலைப்பு இந்த நாவலுக்கு ‘மனவெளி மனிதர்கள்’ என்பது ஆகும். இந்த நாவலை, ஒரு தொடர்கதையாக ஒரு தமிழ் வாரப் பத்திரிக்கையில் எழுத நேர்ந்த காலத்தில் ‘மனவெளி மனிதர்கள்’ என்ற தலைப்பு என் நினைவில் தோன்றவேயில்லை. அதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயமும் இல்லை. இந்த நாவலைக் குறித்து ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லிவிட்டால் வாசக நண்பர்களுக்கு நான் உதவி செய்தவன் ஆவேன். ஒரு படைப்பாளியின் தர்மமும் அதுவே.

    இது முடிவுபெறாத, இடைப்பகுதியைக் கூட இன்னும் தாண்டாத பாத்திர அறிமுக அத்தியாயமே.

    தலையும் தாடியும் நரைத்த அந்த ருஷ்ய எழுத்தாளன் சொன்னதுபோல ‘என்னிடமிருந்து வண்ணங்களை எல்லாம் இதற்குச் செலவழித்துவிட்டேன்’ என்று, சொல்லுகிற நிலையில் நானில்லை. தலையும் தாடியும் நரைத்த போதிலும்கூட இப்படி ஒரு நிலையை நம் தமிழ்நாட்டுப் பத்திரிகைக்காரர்கள் எனக்கு உருவாக்கப் போவதில்லை. ஆனால் எனக்கு என் கைவசமுள்ள வண்ணங்களெல்லாம் தீர்ந்துபோக வேண்டுமென்பதுதான் ஆசை. அந்த ஆசை இந்த ஜன்மத்தில் நிறைவேறாது போலிருக்கிறது.

    நான் உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும் போது, நான் எழுதாத எவ்வளவோ பாத்திரங்கள் என்னோடு சேர்ந்து, உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்வார்கள். இதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்பதால் உங்களுக்கு வருத்தம் இல்லை. இதை அறிந்திருக்கிற நான் இதன் பொருட்டு, சில சமயங்களில் வருந்துவதும் உண்டு. அவர்களை நான் உருவாக்கிவிட்டு விடுவேனோயானால் அவர்கள் உங்களோடு நிரந்தரம் கொண்டு விடுவார்கள். அப்படியில்லையென்றால் அது அவர்களின் பொறுப்பே ஆகும்.

    இந்த நாவலைப் பொறுத்தவரை அப்படி ஒரு குறை எனக்கு இல்லை. அதனாலேயே இதனை நூல் வடிவில், இதுவரை எழுதியவற்றைத் தொகுத்துத் தந்து இதையும் ஒரு முழுமையாகக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். ஏனெனில் இதுபோல் இன்னும் மூன்று மடங்கு விஸ்தாரமும், கால விரிவும் உள்ள ஓர் களத்தில் இறங்கி நடிக்க ஆயத்தமான, ஒரு முழுமையான பாத்திரங்களின் குழுவை உங்களுக்கு அறிமுகம் செய்விக்கிற பணி இந்த முதல் பாகத்தில் முழுமை அடைகிறது. அதாவது இதில் பங்கு பெற்றுள்ள பாத்திரப் படைப்புகள் அனைத்தும் இந்த நாவலில் அறிமுகமாகி விட்டன என்று கொள்ளலாம். ஒரு பாத்திரம் மட்டும் பாக்கி இருக்கிறது. அது பற்றிய விஸ்தாரம், சிருஷ்டி ரகஸ்யத்தைத் தெருவில் போட்டு உடைக்கிற அசூயை ஆகிவிடும். மேலும் அந்தப் பாத்திர அறிமுகத்தில்தான் இந்த நாவல் முழுமை பெறுகிறது என்பதால் இப்போது அதைப் பற்றிய பிரஸ்தாபம் தேவையற்றதே!

    இதையடுத்து வருகிற இரண்டாம் பாகத்தில் கூட அந்தப் பாத்திரத்தின் ஜனனம் நிகழாது. இந்த நாவலைப் படிக்கிறவர்கள், இது நடக்கிற காலம், இது எழுதப்பட்ட காலத்திலிருந்து எழுபதாண்டுகள் பின்னோக்கி ஒரு வாழ்க்கையைச் சித்திரிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை என்று சில வாசக நண்பர்களின் மூலம் எனக்குத் தெரிய வந்தது. அது நாவலின் குறையோ நமது குறையோ அன்று.

    இப்பொழுது தெரிந்து கொண்ட செய்திக்குப் பிறகேனும் அந்தக் ‘குழப்பம்’ அவர்களுக்குத் தெளியலாம்.

    இவான் துர்கேனிவ் சொல்லுகிறாரே, அது போன்று பலருடைய தனித்தன்மைகள் ஒரு கிராம சமூகத்தில் என்னைப் பெருவியப்பில் ஆழ்த்தின. அவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த நாவலின் எல்லாப் பாத்திரங்களின் இயல்புகளையும் நான் சித்தரித்து இருக்கிறேன். இந்த நாவலில் வரும் அனைவருமே எனது அன்புக்கு உரிய எனது முன்னோர்கள் ஆவர்; மூதாதையரும் கூட.

    நானே எனது சர்வாதிகாரத்தின்கீழ் ஒரு பத்திரிகையை, அல்லது வெளியீட்டு நிறுவனத்தை ஏற்படுத்திக் கொள்ளுகிறபோது - அனேகமாக அதை ஏற்படுத்திக் கொண்டுவிட்டேன் என்றே கருதுகிறேன். சிறிது காலம் பொறுத்தினும் காண்போம்... இதன் இரண்டாம், மூன்றாம் பாகங்களைப் பெருமளவு வாசகர்கள் படிக்கும் வகையில் தொடர்ச்சியாய் முதலில் பிரசுரித்துப் பின்னர் நூல் வடிவில் தொகுக்கவே உத்தேசம்...

    ஜெயகாந்தன்

    சென்னை – 78

    17-2-77

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    ஆற்றில் புது வெள்ளம் வந்து கரைபுரண்டு போகிறதாம். காலையிலிருந்து ஊரே திரண்டு போய்ப் பார்த்து வருகிறது. தெருவில் போகிற ஜனங்கள் வாயைப் பிளந்துகொண்டு, கையை வீசி வீசி வெள்ளத்தைப் பற்றிப் பிரலாபிக்கிறார்கள். என்னவோ ஒரு வகை சந்தோஷம்; ஏதோ ஒரு வகைப் பீதி. சேரியில் இருந்து ஊருக்குள் பிரவேசிக்கிற பள்ளர்களும், பறையர்களும் பரிதாபமாகக் கடவுளைப் பிரார்த்திக்கிறார்கள். குடியானவர் தெருவில் வந்து மனிதர்களிடம் மெய்யாக முறையிடுகிறார்கள்; பொய்யாக அழுகிறார்கள். இன்னும் ஒரு பொழுதுக்குள் வெள்ளம் கரைமீறிவிடுமோ என்று கவலைப்படுகிறார்கள்.

    ஆனால் எல்லோருமே வெள்ளத்தைப்போய் வேடிக்கை பார்க்கிறார்கள்; ரசிக்கிறார்கள்; பரவசம் கொள்ளுகிறார்கள். இந்த நேரத்தில் இந்த வெள்ளம் வருமென்று இவர்கள் எதிர் பார்க்கவில்லையாம். மழையே இல்லாமல் எப்படி இவ்வளவு வெள்ளப்பெருக்கு வரமுடியும் என்று ஏதோ தங்களது உத்தரவுக்கு உட்பட்ட ஒன்று கைமீறிப் போனது மாதிரி வியப்பு மேலிடச் சிலர் விவாதம் செய்கிறார்கள். முன்னே ஒரு தடவை இது மாதிரி வெள்ளம் வந்து ஊரையே மூழ்கடித்ததாகச் சில முதியவர்கள் பயமுறுத்துவதுபோல் எச்சரிக்கை செய்கிறார்கள். ‘மேற்குப் பக்கம் நல்ல மழையாம்’ என்று இந்த வெள்ளத்தைக் கண்ட பிறகு யூகித்த விஷயத்தை ஏதோ வானசாத்திரம் பயின்ற வல்லமை போல், தனது ஏவலாளை அனுப்பி அறிந்து வந்து செய்தியை அறிவிக்கிற ஓர் எஜமானனைப்போல் சிலர் விஸ்தாரமாய் விளக்குகிறார்கள்.

    இந்த நேரத்தில் இங்கொரு வெள்ளம் வடியப் போகிறது:

    ‘விளக்கு வைக்கிற நேரமாச்சு. வெள்ளம் பார்க்கப் போனவளுவளை இன்னம் காணோம். வெள்ளம் வந்திருக்காம், புது வெள்ளம். ஆறு ரொம்பப் பழசுதான்; வெள்ளம் தான் புதுசு!’ என்று முனகிக் கொண்டு, நினைத்துக் கொண்டு, புரிந்து கொண்டு யாரையோ அழைக்க வாய் திறந்தாள் அம்பிகை.

    அம்மா, மாமி, அத்தை, அண்ணி, பாட்டி என்று பலராலும் ‘அடியே’ என்று அவராலும் அழைக்கப்படுகிற பல வடிவும் பல உறவும் கொண்டு இந்த வீட்டில் புகுந்து, வெள்ளமாய்ப் பெருகிப் பல விளைச்சலும் அறுவடையும் கண்ட ஓர் வாழ்க்கை நதியில் ஒரு பெருக்கின் வெள்ளம் வடியப்போகிறது. அம்மாள் புரண்டு படுக்கிறாள். இவளுக்கு அம்பிகை அம்மாள் என்று பெயர்.

    "தெருக்கதவு உட்புறமாய்த் தாழிடப்பட்டிருக்கிறது. இந்த வீடு நிறைய வாழ்ந்து கொண்டிருக்கிற இவளது மக்கள் அத்தனை பேரும் கொல்லைப்புற வழியாய் வெள்ளம் பார்க்கப் போயிருக்கிறார்கள். இந்த வீட்டுப் பெண்களைப் பொறுத்தவரை, புருஷன் வீட்டுக்குப் போகிற - வருகிற, அதாவது போன அல்லது ஒரேயடியாய்த் திரும்பி வந்த வழியைத் தவிர மற்றப் புழக்கங்களெல்லாம் கொல்லைப்புற வாசல் வழியேதான். ஊரிலும் பெயர் அப்படித்தான்; மகுடேசன் பிள்ளை வீட்டுப் பெண்கள் வீட்டு வாசற்படி தாண்ட மாட்டார்கள் என்று.

    ‘வாசற்படி தாண்டினால்தானா? வீட்டுக்குள் இருந்து கொண்டே லோகத்தைக் கவிழ்த்துவிட மாட்டாளுவளா!’ என்று தன் பெண்களைப் பற்றிய நினைப்பில் அம்பிகை கண்களை மூடியவாறே புன்னகை செய்கிறாள்.

    ‘இப்ப அவர் வந்தார்னா யார் கதவைத் திறக்கறது?’ இந்த அம்பிகையால் இன்னொருவர் உதவியில்லாமல் இந்தக் கட்டிலை விட்டுக்கூட இறங்க முடியாது. புரளுவது கூட இடது பக்கம் மட்டும்தான் முடியும். வலது பக்க உடம்பு இவளுக்குச் சொந்தமில்லாதது போலாகிவிட்டது எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் அவர் வரும் போது அவரது காலடி ஓசைக்காகக் காத்திருந்து எழுந்து போய், அம்பிகைதான் கதவைத் திறப்பாள். அவரது காலடி ஓசைதான் கேட்குமே; நடப்பதற்காக மட்டுமல்ல; அவர் வருவதைப் பிறருக்கு அறிவிப்பதற்காகவே அணிந்துள்ள அந்தப் பாதக்குறடுகளின் ஓசை அந்த வீட்டு மக்களின் செவிக்குப் பழக்கமானது. அதைக் கேட்ட மாத்திரத்தில் கூடத்தில் குழுமியிருக்கிற கும்பல் ஒரு நொடியில் சிதறும். ஆனால் அம்பிகை மட்டும் எழுந்து போய்த் தயாராகக் கதவைத் திறந்து நிற்பாள். அவர் கதவைத் தட்டமாட்டார்...

    அது ரொம்ப நாட்களுக்கு முன்னால் நடந்தது. ‘என் வீட்டில் வந்து நான் கதவைத் தட்டி நிற்க வேண்டுமென்று தலை எழுத்தோ?’ என்று அவர் கேட்ட கேள்வி அம்பிகையை மறுநாள்தான் வந்தடைந்தது. அவர் இரவெல்லாம் திண்ணையிலேயே படுத்திருந்தாராம். அம்பிகை அதற்காக ஒரு பகலெல்லாம் அழுதாள். ‘இதெல்லாம் இவளுவளுக்கு என்ன தெரியும்?’ என்று தன் மக்களை எண்ணி மறுபடியும் உதடுகளைப் பிதுக்கிக் கொண்டாள் அம்பிகை.

    இன்றோடு பதினைந்து நாளாகிறது. அமாவாசைக்குக்கூடப் பூஜை அறையை மொழுகிக் கோலமிட்டாள் அம்பிகை. அவருக்கு யார் வேண்டுமானாலும் சாப்பாடு பரிமாறலாம்; பூஜைக்கு சந்தனம் மட்டும் அவள்தான் அரைத்துத் தரவேண்டும். வருகிற அமாவாசைக்குச் சந்தனம் அரைத்துக் கொடுக்கத் தான் இருக்கப் போவதில்லை என்பது இவளுக்குத் தெரிந்திருக்கிறது. யார் கண்டது? இவள் ஆசைப்படுவது போல் இப்போது அவர் வந்தாரானால் கதவைத் திறக்க யாருமில்லையே என்கிற நினைப்பில், ‘அவர் வந்து காத்து நிற்கிறாரோ!’ என்ற பதைப்பில் சுரணையற்ற உடம்பில் சூடுபட்டது போல் துள்ளி எழுந்து

    Enjoying the preview?
    Page 1 of 1