Idhayam Meviya Kaadhalinaaley
By Shenba
4.5/5
()
About this ebook
படிப்பவரின் இதயத் துடிப்பை எகிற வைக்கும் திருப்பங்கள் இல்லாமல், செண்டிமென்டில் தாக்காமல், கண்ணீரில் கரைய வைக்காமல்... கடந்த காலக் கதைகள் என்று எதுவும் இல்லாமல், யதார்த்தமான குடும்ப உறவுகளுக்கு இடையிலான அன்பையும், பிணைப்பையும் பற்றிய கதையே இதயம் மேவிய காதலினாலே.
Read more from Shenba
Uyiril Un Peyar Ezhuthugiren Rating: 5 out of 5 stars5/5Sakiye Sagiye Rating: 5 out of 5 stars5/5Avalukkendru Oru Manam Rating: 2 out of 5 stars2/5Uyiraaga Vaa Nila Rating: 4 out of 5 stars4/5Maya Rating: 3 out of 5 stars3/5Kaadhal Kolla Vaarayo Rating: 4 out of 5 stars4/5Unnai Kandu Uyirthean Rating: 4 out of 5 stars4/5Kaadhaladi Nee Enakku Rating: 4 out of 5 stars4/5Nesa Kavithai Solladi Rating: 4 out of 5 stars4/5Ninnai Saranadainthean Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathirkku Ilakkanamillai Rating: 5 out of 5 stars5/5Idhaya Karuvaraiyil Rating: 4 out of 5 stars4/5Thoduvaanam Thodum Dhooram Rating: 4 out of 5 stars4/5Theeyiniley Valar Jyothiye Rating: 5 out of 5 stars5/5Ninnai Saranadainthean Part - 2 Rating: 5 out of 5 stars5/5
Related to Idhayam Meviya Kaadhalinaaley
Related ebooks
Theeyiniley Valar Jyothiye Rating: 5 out of 5 stars5/5En Mel Vizhuntha Mazhai Thuliye Rating: 0 out of 5 stars0 ratingsAnbe Anbe... Rating: 4 out of 5 stars4/5Nooru Jenmam Nee Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkagavey Naan... Rating: 5 out of 5 stars5/5Swasamadi Nee Enakku Rating: 4 out of 5 stars4/5Manathodu Veesum Thendral Rating: 5 out of 5 stars5/5Idhu Kaadhalendral Rating: 4 out of 5 stars4/5Ennai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsThoduvaanam Thodum Dhooram Rating: 4 out of 5 stars4/5Uravanai En Uyirae Rating: 5 out of 5 stars5/5Ninnai Saranadainthean Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsThiruttu Payale Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Karuvaraiyil Rating: 4 out of 5 stars4/5Enna Solla Pogiraai? Rating: 5 out of 5 stars5/5Kannanin Seethai Rating: 3 out of 5 stars3/5Idhayathil Yetho Ondru... Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthean Kaadhalane... Rating: 4 out of 5 stars4/5Avalum Naanum Rating: 5 out of 5 stars5/5Aaruyire... En Oruyire... Rating: 5 out of 5 stars5/5Nesa Kavithai Solladi Rating: 4 out of 5 stars4/5Ithu Irulalla! Rating: 5 out of 5 stars5/5Minminigal Kann Simittum!! Rating: 5 out of 5 stars5/5Uyir Unarum Va(li)zhiyo Kaadhal Rating: 3 out of 5 stars3/5Vizhigalukku Vilangidu Rating: 3 out of 5 stars3/5Brahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Rajanodu Rani Vanthu Serum! Rating: 4 out of 5 stars4/5Vettiveru Vaasam... Rating: 2 out of 5 stars2/5Mun Anthi Saral Nee... Rating: 5 out of 5 stars5/5Sindhum Pani Vaadai Kaatru Rating: 4 out of 5 stars4/5
Reviews for Idhayam Meviya Kaadhalinaaley
2 ratings0 reviews
Book preview
Idhayam Meviya Kaadhalinaaley - Shenba
https://www.pustaka.co.in
இதயம் மேவிய காதலினாலே
Idhayam Meviya Kaadhalinaaley
Author:
ஷெண்பா
Shenba
For more books
https://www.pustaka.co.in/home/author/shenba
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் – 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் – 1
அமுதா! இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருப்ப? நேரமாகுது. உங்க அம்மா இதோடு பத்து முறைக்கு மேலே, போன் செய்துட்டாங்க. உன்னுடைய கோபத்தைக் காட்ட, இது நேரமில்லை! கிளம்புமா…!
- முகுந்தன் கெஞ்சாத குறையாகச் சொல்லிக் கொண்டிருக்க, அமுதா அசையாமல் அமர்ந்திருந்தாள்.
அவளது கண்களின் விளிம்பில் நின்று கண்ணீர் எட்டிப் பார்த்தது. முகுந்தனுக்குக் கோபம் வந்த போதும், மனைவியின் ஈரவிழிகள் அவனைக் கவலையுறச் செய்தன.
அமுதா! என்ன இது?
என அவளது தோளைத் தொட்டதுதான் தாமதம், சட்டெனக் கண்ணீர் வெளிவந்துவிட, தலையைக் குனிந்து கொண்டாள். ம்ச்சு! என்னப்பா நீ?
என்றபடி மனைவியைத் தனது தோளில் சாய்த்துக்கொண்டான்.
சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தவள், எப்படிங்க உங்களால, இப்படிப் பேச முடியுது? நாம நினைச்சது என்ன? இப்போது நடக்கறது என்ன?
என்று குமுறினாள்.
உள்ளுக்குள் நிலவிய ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு, நினைச்சதெல்லாம் நடக்கணும்னு இருக்கா என்ன?
என்ற கணவனின் பதிலில், வெடுக்கென நிமிர்ந்தாள்.
இந்தத் தத்துவமெல்லாம் எனக்கு வேணாம். உங்க மனசுல கஷ்டம் இல்லைன்னு சொல்லுங்க!
என நேருக்கு நேராக அவனது முகத்தைப் பார்த்துக் கேட்டதும், பதில் சொல்லாமல் சோர்வுடன் இருக்கையில் அமர்ந்தான் அவன்.
அம்மா!
எனச் சப்தமிட்டபடி கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஓடிவந்தாள் நான்கு வயது கன்யா. அம்மா! அம்மா! ஃபங்ஷனுக்கு நான் இந்த ட்ரெஸ்ஸைப் போட்டுக்கட்டுமா?
ஆசையுடன் கேட்ட மகளின் முதுகில் ஓங்கி அறையொன்றை வைத்தவள், யாரும் எங்கேயும் போகப் போறதில்ல…!
எனக் கத்தினாள்.
அன்னையின் திடீர் ஆவேசத் தாக்குதலில் மிரண்ட குழந்தை, வெளிறிய முகத்துடன் உடல் நடுங்க ஓடிச் சென்று, தந்தையின் இடுப்பைக் கட்டிக்கொண்டது.
குழந்தையை அணைத்துத் தூக்கிக்கொண்ட முகுந்தன், ஏன்டி! நீ என்ன லூசா? உன் கோபத்தையும், ஆத்திரத்தையும்… குழந்தைமேலயா காட்டுவ?
என இறைந்தான்.
குழந்தையை அடித்துவிட்டதை எண்ணி தன்னையே நொந்து கொண்டிருந்தவள், கணவனின் கோபத்தையும் சேர்த்துக் காணநேர்ந்ததில், செய்வதறியாமல் திகைத்தாள்.
இங்கே பார்! உனக்கு அரைமணி நேரம் டைம். அதுக்குள்ள தயாராகி, காருக்கு வர்ற! இல்லைனா, நடக்கறதே வேற!
எனச் சொல்லிவிட்டு குழந்தையுடன் வெளியேறினான்.
இந்த ஒன்பது வருடத் தாம்பத்தியத்தில், அமுதா – முகுந்தன் இருவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தும், உணர்ந்தும் இருந்தனர்.
வங்கியொன்றில் உயர் அதிகாரியாகப் பதவி வகிக்கும் முகுந்தன், மிகவும் சாது. ‘சாது மிரண்டால்… காடு கொள்ளாது!’ என்ற சொல்லிற்கேற்ப, அவனுக்குக் கோபம் வந்தால், யாராலும் தாக்குப் பிடிக்க முடியாது. சொன்னால் சொன்னது தான்!
அமுதா எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பவள். மகப்பேறு மருத்துவராக இருந்த போதும், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நேரும் கணவனது இடமாற்றத்தின்போது, சளைக்காமல் அவனுடன் தனது பணியிடத்தையும் மாற்றிக் கொள்பவள் அவள். கணவனின் பேச்சிற்கு எதிராக, எதையும் மறுத்துப் பேசிப் பழக்கமில்லாதவள்.
வேண்டாவெறுப்பாக தேவையான உடைகளை பெட்டியில் அடுக்கினாள்.
வாசலில் நின்று யாரிடமோ பேசிவிட்டு, மொபைலை அணைத்துப் பாக்கெட்டில் வைத்துவிட்டு நிமிர்ந்தான் முகுந்தன்.
நான் ரெடி!
என எங்கோ பார்த்துக்கொண்டு சொன்ன மனைவியைப் பார்த்து முறுவலித்தான்.
பேகைக் கொடு!
என கை நீட்ட, பரவாயில்லை. கார் வரைக்கும் தானே…? நானே கொண்டு வரேன்
என நகர்ந்தவள் அப்போதுதான் நினைவு வந்தவளாக, நீங்க நிஷாவுக்குப் போன் செய்து, ஹாஸ்டலிலேயே இருக்கச் சொல்லுங்க!
என்று சொல்லிவிட்டுச் செல்ல, முகுந்தன் தவிப்புடன் பார்த்தான்.
***
காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வந்துசேர ஆகும் ஒன்றரைமணி நேரத்திற்குள், அலுத்துவிட்டது அமுதாவிற்கு. காரிலிருக்கும் ஏசி அதிக அளவில் இருந்தும் கூட, சுள்ளென அடிக்கும் வெயிலுக்கு முன்பாக, சற்றும் எடுபடவில்லை.
உஸ் என்று பெருமூச்சு விட்டபடி காரிலிருந்து இறங்கியவளுக்கு, அத்தை! அண்ணி வந்தாச்சு
எனக் குரல் கொடுத்தபடி ஓடிவந்தவளைக் கண்டதும், விழிகள் விரிந்தன.
ஹாய் அண்ணி! வாங்க… வாங்க! பாவம். அத்தைதான் புலம்பிட்டே இருந்தாங்க
என்றவள், ஹாய் கன்யா!
என்றபடி உறக்கத்திலிருந்து விழித்த குழந்தையைத் தூக்கிக்கொண்டாள்.
ஆமாம், நீ எப்போ வந்த?
என்று கேட்டாள் அமுதா.
நேத்து நைட்டே வந்துட்டேன் அண்ணி! அண்ணாகிட்டக் கூட காலைல பேசினேனே. கிளம்பிட்டேன்னு சொன்னாங்களே. என்ணண்னா! நீ, அண்ணிகிட்ட சொல்லலியா?
என முகுந்தனையும் நடுவில் இழுத்துவிட்டாள்.
அமுதா திரும்பி கணவனை முறைத்தாள்.
அவனோ தங்களை வரவேற்க வந்த மாமியாரை விசாரித்துக் கொண்டே நழுவ, அமுதாவின் எரிச்சல் இரண்டு மடங்கானது.
வா அமுதா! முன்னால நின்னு எடுத்துச் செய்யவேண்டியவங்களே இவ்ளோ லேட்டா வந்தா எப்படி?
என்று கேட்ட அன்னையை கடுப்புடன் பார்த்தாள்.
நாங்க வரலைனாலும் நேரத்துக்கு எல்லாம் நடந்துட்டு தானே இருக்கு. அப்புறம் என்ன கடமைக்குக் கேட்கறியாம்மா?
என்று பட்டென்று கேட்டாள்.
வசந்தாவின் முகம் வாடிவிட, அமுதாவிற்கே சற்று சங்கடமாகிவிட்டது.
‘மற்றவர் மீதிருக்கும் கோபத்தை, அம்மாவிடம் காட்டி என்ன செய்வது?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள். ஆனாலும், மனத்திலிருந்த சஞ்சலம் அத்தனைச் சீக்கிரம் விலகாது என்றே அவளுக்குத் தோன்றியது.
அன்னையின் கரத்தைப் பற்றிக் கொண்டு, சாரிம்மா! ஏதோ குழப்பத்துல அப்படி பேசிட்டேன்
என்றாள் வருத்தத்துடன்.
உன்னைப் புரிஞ்சிக்காம இல்ல அமுதா! எனக்கும் வருத்தம் தான். ஆனா, இதுல என்னால எதுவும் செய்ய முடியலம்மா.
நீ என்னம்மா செய்வ? சரி விடு. முடிஞ்சதைப் பேசி என்ன பண்ண முடியும்?
என்று பெருமூச்சு விட்டாள்.
உன் மாமனார் இன்னும் ஊரிலிருந்து வரலையா?
இல்லம்மா! டெல்லில ரொம்பப் பனி. அதனால ட்ரெயின் கான்சல் ஆகிருச்சி. அனேகமா ரெண்டுமூணு நாள்ள வந்திடுவாங்கன்னு நினைக்கிறேன்
என்றாள்.
அதேநேரம், அண்ணி! இந்தாங்க உங்களுக்காக ஜில்லுன்னு ஃப்ரெஷ் லைம் ஜூஸ்
என்று சிரித்தபடி டிரேயை நீட்டிய நாத்தனாரைப் பார்த்தாள்.
"உன்னை யார் கூட்டிட்டு வந்தது? என்று கேட்டாள் அமுதா.
பாரதி கூட வந்தேன் அண்ணி! ஆனா, சரியான ரம்பம்… அவனை ரொம்பப் பேசாதேன்னு சொல்லிவைக்கணும். ஹாஸ்டல்லயிருந்து இங்க வந்து சேர்றதுக்குள்ள மொக்கை ஜோக்குங்களா சொல்லி என்னை அறுத்துட்டான்
என்று அலுத்துக் கொண்டவள், அச்சச்சோ! கன்யா என்னைச் சீக்கிரமா வரச் சொன்னா நான் போறேன் அண்ணீ!
என்று ஓடியவளை, ஆயாசத்துடன் பார்த்தாள்.
காலேஜ்ல அடுயெடுத்து வச்சும் இன்னும் அந்தக் குழந்தைத்தனம் மாறவேயில்ல
என்று சிரித்தார் வசந்தா.
எல்லாம் உன் மாப்பிள்ளையும், என் மாமனாரும் கொடுத்த செல்லம் தான். அதான் காஞ்சிபுரத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் வந்ததுமே, இவளை இங்கேயே ஹாஸ்ட்டல்ல போட்டேன். வீட்ல இருந்தா இவளுக்கும், கன்யாவுக்கும் வித்தியாசமே தெரியாது
என்ற அமுதாவின் வார்த்தைகளில் வருத்தம் துளிகூட இல்லை. முழுக்க முழுக்க அன்பு மட்டுமே இருந்தது.
***
நிஷா! முகுந்தனின் ஒரே பாசமிகு தங்கை.
இருவருக்குமிடையே கிட்டதட்ட பதினைந்து வயது வித்தியாசம். அவள் பிறந்த போது, பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த முகுந்தன் ‘உடன் படிக்கும் மாணவர்கள் தன்னைக் கிண்டல் செய்கிறார்கள்’ என்று ஒருவாரம் பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு, அழுத காலமெல்லாம் உண்டு.
ஆனால், தங்கை வளரவளர அவளை அத்தனைப் பிரியமாக பார்த்துக் கொண்டான்.
அதிலும் இரத்த சோகையினால் ஏற்பட்ட பாதிப்பில், அவர்களது அன்னை இறந்த போது அவளுக்கு வயது ஏழு. அன்னையின் இறப்பிற்குப் பிறகு, அவளுக்கு ஒரு அன்னையாகவே மாறிப் போனான்.
ஆயினும், இரு ஆண்கள் எத்தனை நாட்களுக்குத் தான், ஒரு சிறு பெண்குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியும்? முகுந்தனும் அவனது தந்தை சிவராமனும் தவியாய் தவித்துப் போயினர். அதிலும் இரவில் அன்னை வேண்டும் என்று அழுபவளைக் காணவே இருவருக்கும் அச்சமாக இருக்கும்.
முகுந்தன் வங்கி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடமே ஆகியிருந்த நிலையில் அவனுக்குக் திருமணம் செய்து வைக்க எண்ணினார் சிவராமன். தூரத்து உறவு முறையிலேயே அமுதாவைப் பற்றிக் கேள்விப்பட்டு மகனுக்கு முடிக்க நினைத்தார்.
பெண் பார்க்க சென்ற போது அமுதாவிடம் தனியாகப் பேசினான் முகுந்தன்.
உங்க அப்பா இறந்ததுக்குப் பிறகு, பணப்பிரச்சனையால ரெண்டு வருஷத்தோட நீங்க உங்க படிப்பை நிறுத்திட்டீங்கன்னு கேள்விப்பட்டேன். இருந்தாலும் உங்ககிட்ட நான் ஒரு உதவியை எதிர்பார்த்து வந்திருக்கேன். நீங்க எனக்காக அதைச் செய்தால், உங்களை நான் மேற்கொண்டு படிக்க வைக்கிறேன்
என்று அவளுக்கு உறுதியளித்தவன் சொன்ன காரணத்தைக் கேட்டு, அமுதாவிற்குத் திகைப்பாக இருந்தது.
‘தங்கள் குடும்பத்திற்கு மருமகளாக மட்டும் அல்லாமல், தனது தங்கைக்கு ஒரு அன்னையாக இருக்கவேண்டும். அதோடு நம் இருவருக்குமே சின்ன வயசுதான். அதனால உங்கள் படிப்பு முடியும் வரை, என்னால் உங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது’ என்றவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
தந்தை இறந்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தனக்குத் திருமணம் செய்து வைக்க நினைக்கும் அன்னையை எதிர்க்கவும் முடியாமல், திருமணத்திற்குச் சம்மதிக்கவும் முடியாமல் இருந்தவளை, முகுந்தனின் பேச்சு வெகுவாக கவர்ந்து விட்டது.
‘இருபதே வயதாகும் தன்னால், ஒரு ஒன்பது வயது பெண்ணிற்குத் தாயாக இருக்க முடியுமா?’ என்று யோசித்தாள். தான் வந்தபோது ஹாலில் கொழுக்மொழுக்கென்று சைனா பொம்மை போல் அமர்ந்திருந்த குட்டிப் பெண்ணை, அவளுக்குமே பிடித்திருந்தது.
ஆனாலும், இப்போ சரின்னு சொல்லிட்டு, பின்னால என்னால முடியாதுன்னு சொன்னா…
என்று குறும்புச் சிரிப்போடு கேட்டாள் அமுதா.
நேராக அவளது கண்களைப் பார்த்தவன், நீங்க ஏமாத்தமாட்டீங்க
என்றான்.
அவனது பார்வையின் வீச்சை எதிர்கொள்ளமுடியாமல் வேறுபக்கம் பார்த்தபடி, எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?
என்று முனகினாள்.
சிறு புன்னகையை உதிர்த்தவன், என் மனசுக்குப் பிடிச்ச பொண்ணு, நிச்சயமா நல்லவங்களா தான் இருப்பாங்க. அந்த நம்பிக்கை தான்
என்றான்.
இதற்கு மேலும் பேச்சை வளர்ப்பது முட்டாள்தனம் என்று புரிந்து கொண்டவள் புன்னகையுடன், திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள்.
அடுத்த மூன்று மாதத்திலேயே முகுந்தன் – அமுதா இருவரது திருமணமும் மிக எளிமையாக நடந்தது.
சொன்னபடி அவளை மீண்டும் கல்லூரியில் சேர்த்தான். மகப்பேறு மருத்துவராக்கினான். வங்கித் தேர்வுகள் எழுதி, தன்னையும் உயர்த்திக் கொண்டான்.
அமுதாவும், நிஷாவைத் தனது மகளாகவே பாவிக்கத் துவங்கிவிட்டாள். இப்போதெல்லாம் அவளுக்கு அண்ணனை விட, எல்லாவற்றிற்கும் அண்ணி தேவைப்பட்டாள்.
சமயங்களில் அண்ணனும், தங்கையும் தன்னை உரிமைக் கோரி அடிக்கும் லூட்டியை, மனதாரக் கண்டு இரசிப்பாள்.
அத்தியாயம் – 2
சமையலறையில் மதிய உணவிற்குத் தயார் செய்து கொண்டிருந்த அமுதா, விசிலடித்தபடி வீட்டினுள் நுழைந்த தம்பியைப் பார்த்தாள்.
அவனோ, யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக மாடியிலிருந்த தனது அறைக்குச் செல்ல, திரும்பி அன்னையின் முகத்தைப் பார்த்தாள்.
வசந்தா தர்மசங்கடத்துடன் விட்ட வேலையைத் தொடர, அமுதா மனத்திற்குள் பொங்கிய ஆற்றாமையுடன் அடுப்பைக் கவனிக்கலானாள்.
‘உஸ்’சென்று மூச்சு விட்டு வெயிலின் தாக்கத்தை தீர்த்துக் கொள்ள முயன்றவன், சட்டை பொத்தானைக் கழற்றிக் கொண்டே தனது அறைக்குள் நுழைந்தான்.
அதேநேரம், பே…!
என்றபடி திடீரென தன்னெதிரில் வந்து குதித்தவளைப் பார்த்து ஒரு நொடி பதறிப் போனான்.
அவன் பயத்துடன் இரண்டடி பின்னால் விலக, அவளோ, திருதிருவென விழித்தபடி செய்வதறியாமல் நின்றிருந்தாள்.
அவன் திகைத்து நின்றது சிலநொடிகள் தான். அடுத்து அவனது வாயிலிருந்து சரமாரியாக வார்த்தைகள் வந்து விழலாயின.
ஏய்! என் ரூம்ல என்னடி பண்ற? உன்னை இந்தப் பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல!
- கோபத்துடன் அவளை நோக்கி அவன் முன்னேறினான்.
அவனது ரௌத்திரம் நிறைந்த முகத்தைப் பார்த்ததும், அவளது மூளையில் எச்சரிக்கை மணி ஒலிக்க, தனது சக்தியைத் திரட்டி அவனை ஒரே தள்ளாக தள்ளிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் கீழே ஓடினாள்.
கீழே விழாமல் தட்டுத் தடுமாறி சமாளித்து நின்றவனுக்கு, கடுகடுவென வந்தது.
லூசு! லூசு! அரைலூசு…! இதைப் போயி… என் தலையெழுத்து…!
என்று தலையில் அடித்துக் கொண்டவன், இன்னைக்கு உன்னை ஒரு வழி பண்ணாம விடப்போறதில்லை. இனி நான் இருக்கும் பக்கமே நீ வரக்கூடாது
என்று ஆத்திரத்துடன் முணுமுணுத்தவன், காலை உதறிக்கொண்டு கீழே வந்தான்.
சலித்த மாவை எடுத்துக் கொண்டு எழுந்த வசந்தா ஹாலுக்கு வரவும், அத்தை!
என்று அலறியபடி நிஷா உள்ளே வரவும் சரியாக இருந்தது.
இருவரும் மோதிய வேகத்தில் வசந்தா சுவற்றில் இடித்துக் கொண்டு, கடவுளே!
என்று முனகினார்.
அவரது கையிலிருந்த மாவு சமையலறை முழுவதும் சிதறியிருக்க, வெள்ளை வெளேரென்று நின்றிருந்தாள் நிஷா.
வசந்தா முனகியதும், அத்தை! சாரி சாரி. எல்லாம் அத்தானால தான்
என்றபடி அவரைப் பிடித்து நிறுத்தினாள்.
ஏய்! அவன் இப்போ தானே வீட்டுக்குள்ள வந்தான். அதுக்குள்ள என்னடி பண்ண?
என்றாள் அமுதா.
அதூ…
என்றபடி திரும்பியவள், அவன் வருவதைக் கண்டதும் வேகமாக அண்ணியின் பின்னால் சென்று மறைந்து கொண்டாள்.
வளர்ந்திருக்கியே… கொஞ்சமாவது அறிவிருக்கா… எருமை!
என்று கத்தியபடியே வந்தவன், அங்கே தனது தமக்கையைக் கண்டதும் சட்டென மௌனியானான்.
அமுதாவும், சகோதரனையே பார்த்தாள்.
எப்போ வந்த?
என்று தழைந்த குரலில் கேட்டான்.
நான் வந்து ஒரு மணி நேரமாகுது…
என்றாள்.
ஓ!
என்றவன் வந்த வழியே திரும்பினான்.
நான் வரமாட்டேன்னு நினைச்ச இல்ல…
என்று அவனது வாயைக் கிளறினாள் அமுதா.
அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்க, "வெளியே நிக்கிற காரும், உன் கண்ணில் படல. நாங்க வந்திருப்போங்கற நினைப்பும் இல்ல. அந்த அளவுக்கு